search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வறுமையின் கொடுமையால் 5 குழந்தைகளின் தந்தை தற்கொலை

    வறுமையின் காரணமாக விரக்தி அடைந்த 5 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை தத்தனேரி கீழவைத்தியநாதபுரம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது40). தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மணிமேகலை (30). இவர்களுக்கு 5 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மணிமேகலை 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களாக முனீஸ்வரன் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை மணிமேகலை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் இருந்த குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

    அப்போது தனியாக இருந்த முனீஸ்வரன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வறுமை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்து இருக்கலாம் என தெரிகிறது.

    5 குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×