என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜினாமா தான் பா.ஜனதா ஆட்சியின் நூறு நாள் சாதனையா?- முத்தரசன் கண்டனம்
Byமாலை மலர்10 Sep 2019 6:42 AM GMT (Updated: 10 Sep 2019 6:42 AM GMT)
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜினாமா செய்வது தான் நூறு நாள் சாதனையா? என்பதனை பா.ஜனதா உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பா.ஜ.க. நூறு நாட்கள் சாதனை என கொண்டாடி மகிழ்கின்றது. நூறு நாட்களுக்குள்ளாக எழுபது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடரமுடியாமல் மூடுவிழா நடத்திக் கொண்டுள்ளன.
வேளாண்மை, தொழில் என அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவைகளையெல்லாம் மிக வசதியான முறையில் மூடி மறைத்து விட்டு பா.ஜனதா நூறு நாள் விழா எடுத்து, தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது.
இது மட்டுமின்றி, இந்திய அரசுப் பணியில் தேர்ச்சி பெற்று உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே ராஜினாமா செய்து வருகின்றனர்.
டையூடாமன் செயலாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் தனது அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை கண்டித்து, தான் வகிக்கும் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கர்நாடகாவில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி அண்ணாமலை ராஜினாமா செய்தார். தற்போது கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி மக்கள் மத்தியில் சிறந்த அதிகாரி என போற்றப்பட்ட சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்துள்ளார்.
இதுவரை மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய ஆட்சிக்கு எதிராக, தங்களின் மனச்சாட்சிக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்துள்ளது சாதாரணமான ஒன்றாக கருத இயலாது.
அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்களின் மனச்சாட்சிக்கு அடிபணிந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். இதுதான் ஆட்சியின் நூறு நாள் சாதனையா? என்பதனை பா.ஜனதா உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பா.ஜ.க. நூறு நாட்கள் சாதனை என கொண்டாடி மகிழ்கின்றது. நூறு நாட்களுக்குள்ளாக எழுபது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடரமுடியாமல் மூடுவிழா நடத்திக் கொண்டுள்ளன.
வேளாண்மை, தொழில் என அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவைகளையெல்லாம் மிக வசதியான முறையில் மூடி மறைத்து விட்டு பா.ஜனதா நூறு நாள் விழா எடுத்து, தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது.
இது மட்டுமின்றி, இந்திய அரசுப் பணியில் தேர்ச்சி பெற்று உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே ராஜினாமா செய்து வருகின்றனர்.
டையூடாமன் செயலாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் தனது அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை கண்டித்து, தான் வகிக்கும் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கர்நாடகாவில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி அண்ணாமலை ராஜினாமா செய்தார். தற்போது கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி மக்கள் மத்தியில் சிறந்த அதிகாரி என போற்றப்பட்ட சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்துள்ளார்.
இதுவரை மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய ஆட்சிக்கு எதிராக, தங்களின் மனச்சாட்சிக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்துள்ளது சாதாரணமான ஒன்றாக கருத இயலாது.
அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்களின் மனச்சாட்சிக்கு அடிபணிந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். இதுதான் ஆட்சியின் நூறு நாள் சாதனையா? என்பதனை பா.ஜனதா உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X