என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை- 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்23 Jun 2019 12:34 PM GMT (Updated: 23 Jun 2019 12:34 PM GMT)
காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கணவர், மாமனார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் அருகே உள்ள தேவரப்பன்பட்டியை சேர்ந்தவர் சஞ்சையன். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 23). இவர்கள் 2 பேரும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திவ்யபாரதியிடம் வரதட்சணையாக 50 பவுன் நகையும் 5 லட்சம் ரொக்க பணமும் கேட்டு கணவன் சஞ்சையன் கொடுமைபடுத்தியுள்ளார். இதற்கு திவ்யபாரதியின் மாமனார் சவடன், மாமியார் காமுத்தாய், மற்றும் உறவினர் பாலமுருகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளார்கள்.
இது பற்றி திவ்யபாரதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி சஞ்சையன், சவடன், காமுத்தாய், பாலமுருகன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X