search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman torture"

    திருக்கோவிலூர் அருகே பெண்ணை கடத்தி கட்டாய தாலிகட்டி கொடுமைபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அப்பனந்தல் பில்ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் சசிகலா (வயது 17) ஆவார். இவரை அதே ஊரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடத்திச்சென்று, கட்டாய தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார்.

    மேலும் சசிகலாவை திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பி கொடுமைபடுத்தியதுடன், பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கிவரச் சொல்லியும் கொடுமைபடுத்தியிருக்கின்றார். அத்துடன் ஜானகிராமனின் தந்தை திருவேங்கடம், தாய் சந்திரா, தம்பி சீத்தாராமன் ஆகியோரும் சேர்ந்து சசிகலாவை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வேதனை அடைந்த சசிகலா தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமதி, ஏட்டு கோகிலா ஆகியோர் விரைந்து சென்று ஜானகிராமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். ஜானகிராமனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் ஜானகி ராமனின் பெற்றோர் திருவேங்கடம், சந்திரா, தம்பி சீத்தா ராமன் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் என்ஜினீயர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பி.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (26).

    இவர்களுக்கு 1.12.2016 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்கள் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வந்தனர். பின்னர் சத்யநாதன் குடும்பத்தினர் ரம்யாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீ சில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது திருமணத்தின் போது 32 பவுன் நகை ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கூடுதல் வரதட்சணை கேட்டு எனது கனவர் சத்யநாதன் சித்ரவதை செய்ய தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று 10 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் எனது கணவர் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தார். இதற்கு எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் தமிழ் செல்வி, கணவரின் தம்பி சண்முகபிரியன், அவரது மனைவி ஸ்ரீமதி, உறவினர்கள் சந்திர மோகன், இளவரசன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் சத்யநாதன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததோடு 2-வது திருமணமும் செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே சுந்தராம்பட்டியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி என்ற சரண்யா (வயது27). இவர் மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    ஓட்டல் நடத்தி வந்த சிவக்குமாருக்கும், சரண்யாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரண்யா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் சரண்யா புகார் கொடுத்துள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நிலையில் அவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

    இதுகுறித்து நான் கேட்டபோது 40 பவுன் நகை மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான வீட்டை என் பெயருக்கு எழுதி தந்தால் உன்னுடன் வாழ்கிறேன் என மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிவக்குமார், அவரது தந்தை சிவனாண்டி, தாய் வைரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன் ஆசிப். இவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் மகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    அப்போது 140 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தொழில் செய்து வந்த அலாவுதீன் ஆசிப் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லாவின் உறவினர் முபாரக் அகமது, மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அலாவுதீன் ஆசிப், அவரது தந்தை அலாவுதீன், தாயார் ஜின்னா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    தேனி அருகே மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேவாரம் தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜா (வயது 33). இவருக்கும் ஆர்த்தி (29) என்பவருக்கும் கடந்த 7.6.2012-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 61 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    திருமணமாகி சில மாதங்களிலேயே ஆர்த்தியின் 25 பவுன் நகையை தொழில் தொடங்குவதற்காக தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டனர். மேலும் சில மாதங்கள் கழித்து மற்ற நகைகளையும் வாங்கி விற்று விட்டனர்.

    இது தவிர அவரது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் தொழில் தொடங்குவதற்காக ஆர்த்தி வாங்கி கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பெற்றுக் கொண்டு புதிதாக தொடங்கிய கம்பெனியை தனது பெயரில் வைக்காமல் தனது வீட்டில் உள்ளவர்கள் பெயரில் மதன்ராஜ் வைத்துள்ளார்.

    இது குறித்து ஆர்த்தி கேட்டபோது அவரை வெற்று பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் ஆர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் மனைவியை கொடுமைபடுத்திய கணவர் மதன்ராஜ், மாமனார் முருகேசன், மாமியார் மகேஸ்வரி, மற்றும் சுதர்சன், கிஷோர்குமார், கார்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் பத்மஜா (வயது 25). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், ராஜபாளையம் மில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தனசேகர் (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 60 பவுன் நகை, ரூ.2ம லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    திருமணம் முடிந்தபின் கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். அப்போது கணவர் ரூ. 75 ஆயிரம் கூடுதல் வரதட்சணை கேட்டும், குழந்தை பிறக்காததை சுட்டிக்காட்டியும் துன்புறுத்தி வந்தார்.

    இதற்கு அவரது பெற்றோர் பால்ராஜ்-ராஜேஸ்வரி, சகோதரி சுப்புலட்சுமி, அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜி விசாரணை நடத்தி தனசேகர், அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #Tamilnews
    குஜராத் மாநிலத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம் காடி நகரைச் சேர்ந்தவர் ரோனக் படேல். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் புதுப்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களால் கூடுதல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.

    இதனால் மணப்பெண்ணை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்தனர். சரியாக உணவு கொடுக்காமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மட்டுமே பச்சையாக சாப்பிடச் சொல்லி சித்ரவதை செய்தனர்.

    அவர் மறுத்ததால் கட்டாயப்படுத்தி வாயில் திணித்து சாப்பிடச் செய்தனர். இதனால் அந்தப் பெண் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டார்.

    தொடர்ந்து இதுபோல் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணின் கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ×