என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வரதட்சணை கொடுமை: வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்தி பெண் சித்ரவதை வரதட்சணை கொடுமை: வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்தி பெண் சித்ரவதை](https://img.maalaimalar.com/Articles/2018/Jul/201807141158179623_additional-dowry-asking-woman-tortured-onion-and-garlic_SECVPF.gif)
X
வரதட்சணை கொடுமை: வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்தி பெண் சித்ரவதை
By
மாலை மலர்14 July 2018 6:28 AM GMT (Updated: 14 July 2018 6:28 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
குஜராத் மாநிலத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம் காடி நகரைச் சேர்ந்தவர் ரோனக் படேல். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் புதுப்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களால் கூடுதல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.
இதனால் மணப்பெண்ணை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்தனர். சரியாக உணவு கொடுக்காமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மட்டுமே பச்சையாக சாப்பிடச் சொல்லி சித்ரவதை செய்தனர்.
அவர் மறுத்ததால் கட்டாயப்படுத்தி வாயில் திணித்து சாப்பிடச் செய்தனர். இதனால் அந்தப் பெண் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து இதுபோல் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணின் கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம் காடி நகரைச் சேர்ந்தவர் ரோனக் படேல். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் புதுப்பெண்ணிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு வந்தனர். ஆனால் அவரது பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களால் கூடுதல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை.
இதனால் மணப்பெண்ணை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்தனர். சரியாக உணவு கொடுக்காமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மட்டுமே பச்சையாக சாப்பிடச் சொல்லி சித்ரவதை செய்தனர்.
அவர் மறுத்ததால் கட்டாயப்படுத்தி வாயில் திணித்து சாப்பிடச் செய்தனர். இதனால் அந்தப் பெண் வயிறு எரிச்சலால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து இதுபோல் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணின் கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)