search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 4 பேர் மீது புகார்
    X

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 4 பேர் மீது புகார்

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன் ஆசிப். இவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்காதர் மகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    அப்போது 140 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் தொழில் செய்து வந்த அலாவுதீன் ஆசிப் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் ஆபாச படத்தை வெளியிடுவேன் என்றும் கூறி மிரட்டினாராம். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லாவின் உறவினர் முபாரக் அகமது, மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அலாவுதீன் ஆசிப், அவரது தந்தை அலாவுதீன், தாயார் ஜின்னா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×