search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை
    X

    ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை

    ராஜபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் பத்மஜா (வயது 25). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், ராஜபாளையம் மில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தனசேகர் (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 60 பவுன் நகை, ரூ.2ம லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.

    திருமணம் முடிந்தபின் கணவருடன் சென்னையில் வசித்து வந்தேன். அப்போது கணவர் ரூ. 75 ஆயிரம் கூடுதல் வரதட்சணை கேட்டும், குழந்தை பிறக்காததை சுட்டிக்காட்டியும் துன்புறுத்தி வந்தார்.

    இதற்கு அவரது பெற்றோர் பால்ராஜ்-ராஜேஸ்வரி, சகோதரி சுப்புலட்சுமி, அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜி விசாரணை நடத்தி தனசேகர், அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #Tamilnews
    Next Story
    ×