என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- 80,000 இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் அமைகிறது.
- இது இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இந்நிலையில், பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சூர்யா சிட்டியில் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ள பிரமாண்ட விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக 80,000 இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
- இளம் வீரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கோப்பைக்கான இறுதி அணி தேர்ந்தெடுக்கப்படும்
இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கான (U19series) அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் ஆர்யன் சர்மா மற்றும் யாஷ் தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் நடைபெறும்.
செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
இளம் வீரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கோப்பைக்கான இறுதி அணி தேர்ந்தெடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணி:
சைமன் பட்ஜ், அலெக்ஸ் டர்னர், ஸ்டீவ் ஹோகன், வில் மலாக்சுக், யாஷ் தேஷ்முக், டாம் ஹோகன், ஆர்யன் சர்மா, ஜான் ஜேம்ஸ், ஹேடன் ஷில்லர், சார்லஸ் லாச்மண்ட், பென் கார்டன், வில் பைரோம், கேசி பார்டன், அலெக்ஸ் லீ யங், ஜெய்டன் டிராப்பர்.
- சீரான தொடக்கம் கிடைத்த போதிலும் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டும் அடித்தார்.
- இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்த போதிலும், ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
குறிப்பாக, லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்து விடுகிறார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததைப் பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.
இந்தத் தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும்போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம். ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்–பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களைப் பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன் என தெரிவித்தார்.
- தி ஹண்ட்ரட் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.
- லண்டன் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார்.
ஓவல் சார்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்தது.
இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இவர் 478 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதன்பின், இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்துள்ளது.
- ஹென்றி நிக்கோல்ஸ் 150 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
புலவாயோ:
நியூசிலாந்து- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 48.5 ஓவர்களில் 125 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட்ஹென்றி 5 விக்கெட்டும், அறிமுக வீரர் ஜக்காரி போக்ஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வில் யங் 74 ரன்னில் அவுட்டானார். டிவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கப் டப்பி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தரப்பில் டப்பி 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கான்வே உடன் ஹென்றி நிக்கோல்ஸ் கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 153 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடினார். இதனால் நியூசிலாந்து இமாலய ரன் குவிப்பை நோக்கி பயணித்தது. 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்துள்ளது. ஹென்றி நிக்கோல்ஸ் 150 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் இதுவரை 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
- துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
- இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மத்திய மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளார் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார், கலீல் அகமது உள்ளிடோருக்கும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய மண்டல அணி: துருவ் ஜூரல், ரஜத் படிதார், ஆர்யன் ஜூயல், டேனிஷ் மாலேவார், சஞ்சித் தேசாய், குல்தீப் யாதவ், ஆதித்யா தாக்கரே, தீபக் சாஹர், சரண்ஷ் ஜெயின், ஆயுஷ் பாண்டே, சுபம் ஷர்மா, யாஷ் ரத்தோர், ஹர்ஷ் துபே, மானவ் சூதர்.
கூடுதல் வீரர்கள்: மாதவ் கௌசிக், யாஷ் தாக்கூர், யுவராஜ் சவுத்ரி, மஹிபால் லோம்ரோர், குல்தீப் சென், மற்றும் உபேந்திர யாதவ்.
- ஆஷஸ் தொடரில் அவர்களால் ஒரு டெஸ்ட்டை வெல்ல முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
- ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 21-ந் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜனவரி 8-ந் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். எங்கள் அணி மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடும்போது, அது இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றதில்லை என்ற புள்ளிவிவரமும் உள்ளது. இதனால் ஆஷஸ் தொடரில் அவர்களால் ஒரு டெஸ்ட்டை வெல்ல முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
என மெக்ராத் கூறினார்.
இங்கிலாந்து அணி கடைசியாக 2010-2011-ம் ஆண்டில் ஆஷஸ் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்.
- 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடினார். 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர், பின்னர் பல அணிகளுக்காக விளையாடி, பின்னர் 2025-ல் மீண்டும் சிஎஸ்கே-வுக்கு திரும்பினார்.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் அணியில் இருந்த தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வினும் வெளியேற உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் 212 போட்டிகளில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார்.
- 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெற்றிருந்தார். அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாக சில தகவல்களை அவரது தந்தை கூறியுள்ளார்.
அதில், அபிமன்யு ஈஸ்வரன் நன்றாக விளையாடுகிறார். அவருக்கான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, அவரை புறக்கணிக்க போவதில்லை. அவரின் உழைப்பிற்கான பலன் அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என ஒட்டு மொத்த பயிற்சியாளர்களும் உறுதி அளித்துள்ளனர் என கவுதம் கம்பீர் என்னிடம் கூறினார்.
- ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஆசிய கோப்பை நடைபெற உள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்தார். 4-வது டெஸ்ட் போட்டியில் காலில் பந்து தாக்கியதில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. காயத்துடன் பேட்டிங் மட்டும் செய்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகினார்.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவர் வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை தவறவிடுவார். மேலும் அக்டோபர் 2-ந்தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. ரிஷப் பண்ட் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட்டின் கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
- மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'ஏ' அணியில் இடம்பெற்றிருந்த 24 வயதான ஹைதர் அலி மீது கூறப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த மாதம் 23-ந்தேதி மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது. இதையடுத்து ஹைர் அலியை கைது செய்த போலீசார் அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவரை ஜாமினில் விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடம்.
- இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.
லண்டன்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்நிலையில், ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டு விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என கருதுகிறேன் என தெரிவித்தார்.






