என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடம்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    லண்டன்:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டு விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
    • இந்திய அணியினரின் சிறந்த பேட்டிங்கால் இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. அந்த டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டின் வலது கால் பாதத்தில் தாக்கியது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும், பேட்டிங் செய்ய களமிறங்கிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அவுட்டானார். காயம் காரணமாக 5-வது டெஸ்டில் இருந்து ரிஷப் விலகினார்.

    இதுபோல, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்டில் பீல்டிங் செய்தபோது இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் இடது தோளில் காயமடைந்தார். அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் ஒற்றை கையுடன் பேட் செய்ய களமிறங்கினார்.

    ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்சின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்படையச் செய்தன.

    இதற்கிடையே, ரிஷப் பண்ட் தனது சமூக வலைத்தளத்தில், வோக்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கிய போட்டோவை பதிவு செய்து, 'எல்லாம் சரியாகி விடும். உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் சர்வதேச அரங்கில் ஒருநாள் சந்திப்போம், சல்யூட் என பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில், உங்கள் அன்புக்கு நன்றி. எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். கால் காயம் விரைவில் சரியாகும் என நம்புகிறேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்தார்.

    • சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் அந்த அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    வடக்கு மண்டல அணி விவரம் பின்வருமாறு:-

    சுப்மன் கில் (கேப்டன்), அங்கித் குமார் (துணை கேப்டன்), சுபம் கஜுரியா, ஆயுஷ் பதோனி, யாஷ் துல், அங்கித் கல்சி, நிஷாந்த் சந்து, சாஹில் லோத்ரா, மயங்க் தாகர், யுத்வீர் சிங் சரக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், ஆக்கிப் நபி, கன்ஹையா வாத்வான்

    • சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன.
    • ஆனால் அதனை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் நிராகரித்தார்.

    ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு பின்னணியில் ரியான் பராக்கின் உறவினர் ரஞ்சித் பர்தாகூர் இருந்தார்.இதனால் சஞ்சு சாம்சனை ஓரம்கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

    இதனால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன. தோனியின் இடத்தில் சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே முயற்சிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதனை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் நிராகரித்தார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்கும் படி சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

    அதன்படி சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிஎஸ்கே நிர்வாகம் பின் தொடர்ந்து உள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சன் தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
    • ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட சஞ்சு சாம்சன் விரும்பவில்லை என்று சஞ்சு குடும்பத்தினர் கூறியுள்ளதாக தெரிகிறது.

    ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு பின்னணியில் ரியான் பராக்கின் உறவினர் ரஞ்சித் பர்தாகூர் இருந்தார்.

    ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ரஞ்சித் பர்தாகூரும் ஒருவர். இதனால் சஞ்சு சாம்சனை ஓரம்கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன. தோனியின் இடத்தில் சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே முயற்சிப்பதாகவும் சொல்லப்பட்டது.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக சஞ்சு சாம்சனை டிரேட் செய்யும் திட்டத்திலோ, மெகா ஏலத்திற்கு முன் ரிலீஸ் செய்யும் திட்டத்திலோ ராஜஸ்தான் அணி நிர்வாகம் இல்லை என்று அந்த அணி அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்கும் படி சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சன் தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

    இதனால் வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டும் அல்லது ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சஞ்சு சாம்சன் கேட்டிருக்கிறார். அதேபோல் சஞ்சு சாம்சன் குடும்பத்தினரும், ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட சஞ்சு சாம்சன் விரும்பவில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்க முயற்சி எடுக்கும் என தெரிகிறது.

    • ஜிம்பாப்வே அணி தரப்பில் அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 5 விக்கெட்டையும் ஜகரி ஃபௌல்க்ஸ் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சென்றது. இதில் முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 48.5 ஓவரில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டையும் ஜகரி ஃபௌல்க்ஸ் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

    • ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடைபெறுகிறது.
    • ஜக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை தொடர் 2025 செப் 9 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த மாதம் ஆசிய கோப்பை தொடருக்காக இவரை தேர்வு செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடைபெறுகிறது. இதில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

    ஜக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை தொடர் 2025 செப் 9 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், 604 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே நேரத்தில் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடிய ஏழு இன்னிங்ஸ்களில் 68.5 சராசரியுடன் 480 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார்.
    • கோலி ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் சிரிக்க வைத்து ஜாலியாக்கி விடுவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்த தோனி, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது விராட் கோலி குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி சிரித்தப்படி பதில் அளித்தார்.

    அதில், விராட் கோலி சிறப்பாக பாடுவார், நடனமாடுவார், அதைவிட சிறப்பாக மிமிக்கிரி செய்வார். அவர் ஜாலியாக இருக்கும்போது அனைவரையும் சிரிக்க வைத்து ஜாலியாக்கி விடுவார்.

    என தோனி கூறினார். 

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
    • சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன்

    விழுப்புரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "எனக்கு தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் கல்லூரிக்கு ஃபீஸ் கட்டினேன்.

    சில சமயங்களில் சரியான சாப்பாடு இல்லாமலும், கிழிந்த உடையுடனும் கல்லூரிக்கு சென்றேன். கடினமாக உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். உழைப்பு மட்டுமே உங்களை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்.

    சாதாரணமான குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடியும் என்றால் எல்லோரும் சாதிக்க முடியும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும். கடந்து வந்த பாதையை மறக்க கூடாது.

    சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன், சிறியதாக வழிகாட்டினால் எதுவும் நடக்கலாம்" என்று தெரிவித்தார். 

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது
    • ஜூலை மாத பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய தலா 3 வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

    அதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் சாரா ஈடுபடப்போகிறார்.
    • இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

    கிரிக்கெட்டின் கடவுள் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    Come and Say G'Day என்ற இந்த பிரசாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 130 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பர பிரசாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரும் எனக் கூறப்படுகிறது.

    உலகளாவிய சுற்றுலா பயணிகள் தங்கள் அடுத்த விடுமுறை பயணத்திற்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கான விளம்பரத் தூதராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் 27 வயது மாடல் சாரா, சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் ஈடுபடப்போகிறார். இதற்காக அவர் உலகம் முழுவதும் வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சாரா டெண்டுல்கர், இந்திய இளைஞர்களை ஆஸ்திரேலியாவை நோக்கி கவர்ந்திழுப்பார் என நம்பப்படுகிறது. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.

    • டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.
    • டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ஒரு இடமும் சுப்மன் கில் 3 இடங்கள் பின் தங்கி உள்ளனர். ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் ரூட்டும் ஹாரி புரூக்கும் தொடர்கின்றனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்தை பிடித்து அசத்தி உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 3 இடங்கள் பின் தங்கி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    ×