என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை தொடர்"

    • ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடைபெறுகிறது.
    • ஜக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை தொடர் 2025 செப் 9 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த மாதம் ஆசிய கோப்பை தொடருக்காக இவரை தேர்வு செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடைபெறுகிறது. இதில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

    ஜக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை தொடர் 2025 செப் 9 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர், 604 ரன்கள் எடுத்து அசத்தினார். அதே நேரத்தில் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடிய ஏழு இன்னிங்ஸ்களில் 68.5 சராசரியுடன் 480 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 19 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது.

    குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன

    இந்நிலையில், ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ம் தேதி துபாய் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது.

    குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, "பஹல்காம் போன்ற பயங்கரவாதம் நடக்கக் கூடாது. அவை நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா வலுவான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் விளையாட்டு விளையாடப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்சம் இரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதலாம்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது. குரூப் பிரிவில் முன்னேறி அரையிறுதி இறுதி போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சென்றால் 2 அணிகளும் மீண்டும் மொத வாய்ப்புள்ளது. அவ்வகையில் 3 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மொத வாய்ப்புள்ளது. 

    • ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
    • இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவை முடிந்தவரை துண்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐ.சி.சி. நடத்தும் பெரிய போட்டிகளில் கூட லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் அட்டவணையை உருவாக்கும்படி வலியுறுத்தியது.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வளரும் அணிகளுக்கான (பெண்கள்) ஆசிய கோப்பை போட்டி அடுத்த மாதம் இலங்கையில் நடக்கிறது. பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொசின் நவ்வி, அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார். இதனால் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ஆசிய போட்டியை இந்தியா புறக்கணிக்க இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா கூறுகையில், 'இரண்டு ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்பதில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் இன்று (நேற்று) காலை எங்களது கவனத்துக்கு வந்தது.

    இப்போதைக்கு அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ஆசிய கோப்பை போட்டி குறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை. இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் இருக்கிறது. ஆசிய கோப்பை குறித்து எந்த மட்டத்திலும் ஆலோசிக்கப்படவில்லை. இந்த செய்திகள் எல்லாம் யூகம் மற்றும் கற்பனையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது' என்றார்.

    • ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை.

    ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

    இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.

    ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா?

    ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல. சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது. இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார்.
    • அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 30-ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது.

    அதன்படி வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார். அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

    இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் கூறுகையில்:-

    வரவிருக்கும் பெரிய தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். மிகவும் சிக்கலான நேரத்தில் அணிக்கு ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமித்துள்ளோம். உலகக்கோப்பைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஷகிப்பை தவிர வேறு சிறந்த கேப்டனையும் தேர்வு செய்ய இயலாது. உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை நாளை அறிவிக்க உள்ளோம்' என கூறினார்.

    இதன் மூலம் ஷகிப் வங்காளதேசத்தின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாகி உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஷகிப் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வங்காளதேச அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திலக் வர்மா 16 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • ராமன்தீப் சிங் 34 பந்தில் 64 ரன்கள் அடித்து கடைசி வரை போராடினார்.

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் உள்ள அல் அமராத் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இந்தியா- ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

    ஜுபைத் அப்காரி 41 பந்தில் 64 ரன்கள் விளாசினார். செதிகுல்லா அடல் 52 பந்தில் 83 ரன்கள் குவித்தார். கரீம் ஜனத் 20 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.

    இந்திய அணி சார்பில் ரசிக் சலாம் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினாலும் அன்ஷுல் கம்போஜ் 3 ஓவரில் 40 ரன்களும், அக்யூப் கான் 4 ஓவரில் 38 ரன்களும், ராகுல் சாஹர் 3 ஓவரில் 48 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்னிலும், அபிஷேக் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    கேப்டன் திலக் வர்மா 16 ரன்னில் வெளியேறினார். ராமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி 34 பந்தில் 64 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி அழைத்து செல்ல முடியவில்லை. இறுதியாக இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது.

    இதனால் ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா ஏ அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை ஆப்கானிஸ்தான் ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ×