என் மலர்
விளையாட்டு
- மகளிருக்கான சார்லோட் எட்வர்ட்ஸ் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- சென்ட்ரல் ஸ்பார்க்ஸ் அணிகள் மோதின.
மகளிருக்கான சார்லோட் எட்வர்ட்ஸ் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றி விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- சென்ட்ரல் ஸ்பார்க்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்ட்ரல் ஸ்பார்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து விளையாடிய சென்டரல் ஸ்பார்க்ஸ் அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 142 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்த போது 16-வது ஓவரை ஸ்பார்க்ஸ் அணியின் ஜார்ஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்து நடுவரால் வைடு கொடுக்கப்பட்டது. அந்த பந்தை பேட்டர் விலகி சென்று அடிக்க முயற்சிப்பார். அது பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது.
உடனே நடுவர் அதற்கு வைடு கொடுப்பார். இதனை சற்று எதிர்பாராத பந்து வீச்சாளர் ஜார்ஜ் ஷாக்கானர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.
- இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முதல் ஆளாக நின்ற டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.
களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் டோனி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் போன வருடம் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த மகிழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
அந்த கொண்டாட்டத்தில் இருந்த டோனி அனைவரையும் குஜராத் வீரர்களுக்கும் கைகுலுக்கி விட்டு வரலாம் வாங்க என அழைத்து சென்றார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து டோனிக்கும் ஆர்சிபி வீரர்களுக்கு இதுதான் வித்தியாசம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி.
- 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.
கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர். இந்நிலையில் ரொனால்டோவின் வருமானம் மெஸ்ஸியை விட 2 அதிகம் என்று தெரியவந்துள்ளது.

பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 260 மில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்பெயின் கோல்ப் வீரர் ஜான் ரஹம் சவுதி இரண்டாம் இடத்தில் உள்ளார். பட்டியலில் லியோனல் மெஸ்ஸி 135 மில்லியன் டாலர் வருவாயுடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்
39 வயதான ரொனால்டோவின் மொத்த வருவாயான 260 மில்லியன் டாலர்கள் பிராந்தியத்தில் இதுவரை ஒரு கால்பந்து வீரர் ஈட்டும் உட்சபட்ச வருவாயாகும். 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.
- கொல்கத்தா அணியில் பில் சால்ட், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்றோர் உள்ளனர்.
ஐபிஎல் 2024 சீசனின் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. இன்று ஓய்வு நாள். நாளையில் இருந்து பிளேஆஃப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. நாளை குவாலிபையர்-1 நடக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரந்திரே மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் தோல்வியடைந்துள்ளது. 2 போட்டிகளில் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இந்த அணியில் சுனில் நரைன் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்படுகிறார். இவருடைய நாளாக கருதப்படும் நாளில் சிறப்பாக பேட்டிங் செய்வார். ஆனால் இந்த சீசனில் ஓரவிற்கு எல்லா போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
13 போட்டிகளில் விளையாடி 461 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1 சதம், 3 அரைசதங்கள் அடங்கும். ஒட்டுமொத்தமாக 10-வது இடத்தில் உள்ளார். இவர் நாளைய போட்டியில் நிலைத்து நின்று விளையாடினால் சன்ரைசர்ஸ் ஐதாராபாத் அணிக்கு அது பாதகமாக முடியும். அதேபோல் மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட். இவர் 12 போட்டிகளில் 435 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியில் 12-வது இடத்தில் உள்ளார். அவர் நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார்.
இருவரும் களத்தில் நின்றுவிட்டால் பந்துகள் நாலாபுறமும் பறக்கும். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இந்த இருவரையும் எவ்வளவு விரைவாக வெளியேற்றுகிறதோ?, அது அவர்களுக்கு சாதகமாக முடியும்.
மேலும் கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ராமன்தீப் சிங், நிதிஷ் ராணா, அங்கிரிஷ் ரகுவன்ஷி உள்ளனர். இதனால் பேட்டிங்கிற்கு பஞ்சம் இருக்காது.
வேகப்பந்து வீச்சில் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, அந்த்ரே ரஸல், ஹர்ஷித் ராணா போன்றோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் சுனில் நரைன் உள்ளனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எந்தவிதத்திலும் சளைக்காமல் விளையாடும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி என்றாலே டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் ஆகிய மூன்று பேர்தான் மிகப்பெரிய நம்பிக்கை. அவர்களுக்கு நிதிஷ் ரெட்டி, ஷபாஸ் அகமது, அப்துல் சமாத் ஆகியர் சப்போர்ட்டாக உள்ளனர்.
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பவர்பிளே வரை நின்றுவிட்டால் கொல்கத்தா அணிக்கு சிரமம்தான்.

அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தியை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதே பொறுத்தே ரன்கள் அமையும்.
பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ், நடராஜன், புவனேஷ்வர் குமார், உனத்கட் போன்ற வேகபந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மயங்க் மார்கண்டே, விஜயகாந்த் வியாஸ் காந்த் உள்ளனர். ஆனால் ஐதராபாத் அணி பந்து வீச்சில் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.
பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் விளாசி பெரிய டார்கெட் நிர்ணயிக்கும்போது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.
நேற்று பஞ்சாப் அணிக்கெதிராக 200 ரன்ளுக்கு மேலான இலக்கை எட்டியுள்ளது. ஒருவேளை சேஸிங் இந்த அணிக்கு சவாலாக இருக்கும். எப்படி இருந்தாலும் பேட்டிங் இந்த அணிக்கு முழுப்பலமாக திகழ்கிறது.
இரு அணிகளும் சம பலத்துடன் விளங்குவதால் நாளைய போட்டி பரபரப்பாகவும், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.
- முதல் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்திற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
- ஆனால் கடைந்து ஐந்து போட்டிகளில் மழைக்காரணமாக ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.
ஐபிஎல் 2024 சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. லீக் போட்டிகளின் கடைசி கட்டங்கள் வரை எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டே இருந்தது.
இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுகின்றன. ஒவ்வொரு அணியும் முதல் இடங்களை பிடிக்க விரும்பும். ஏனென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒருமுறை தோல்வியடைந்தால் மறுமுறை மோத வாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் தொடரில் முதலில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை உறுதி செய்யும் என்ற நிலையில் இருந்தது. கைவசம் 5 போட்டிகள் இருந்ததால் எப்படியும் முதல் இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணிக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியாக நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-வது இடத்திற்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
நாளை செவ்வாய்க்கிழமை (21-ந்தேதி) பிளேஆஃப் சுற்றுகள் தொடங்குகின்றன. நாளை நடைபெறும் குவாலிபையர்-1ல் முதல் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி குவாலிபையர்-2ல் விளையாட வேண்டும். இது 24-ந்தேதி நடக்கிறது.
22-ந்தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் 3-வது இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்- 4-வது இடம் பிடித்த ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும்.
வெற்றி பெற்ற அணி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குவாலிபையர்-2ல் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.
- பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.
- நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எதிர்காலம் குறித்து டோனி எந்த முடிவையும் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை, நாங்கள் அவரிடம் கேட்க மாட்டோம். நாங்கள் அவரை முடிவு செய்ய அனுமதிப்போம் என்பது உங்களுக்கு தெரியும்.அவர் எங்களுக்குத் தெரிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

சி.எஸ்.கே. அணியில் விளையாடிய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:-
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவ்வளவுதான். எனவே இதுவே டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.
பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று டோனி நினைத்தார். நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.
ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.
- 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது.
- பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி உலக சாதனை படைத்து இந்த வருடம் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துதுள்ளார். இந்தப் போட்டியில், 59.00 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து தாய்லாந்து வீராங்கனை ஓரவன் கைசிங்கை வெள்ளிப் பதக்ககமும், ஜப்பான் வீராங்கனை நினா கன்னோ 59.73 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
கோபே யுனிவர்சியேட் மெமோரியல் ஸ்டேடியத்தில் 17 முதல் 25 மே 2024 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நேற்று (மே 19) போட்டியின் மூன்றாவது நாளில் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024ல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

கடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றிருந்ததது. முன்னதாக, தீப்தி ஜீவன்ஜி 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பெண்கள் 400 மீட்டர் பிரிவில் 56.18 வினாடிகளில் 400 மீட்டர் எட்டி ஆசிய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என ஒலிக்கும் குரல்கள்
ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்த பதிவுகளே சமூக வலைத்தளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதே தற்போது நடந்துவரும் விவாதங்களுக்குக் காரணம்.
ஆர்சிபி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்ததால் கை கொடுக்க சென்ற டோனி சட்டென திரும்பி டிரஸிங் அறைக்குச் சென்ற வீடியோ தீயாக பரவி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என்று அவருக்கு ஆதரவான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன
இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் அணிகள் குறித்தும் தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், சில காலத்துக்கு முன் பேசிய பழைய வீடியோ ஒன்றில், சிஎஸ் கே அணி 5 முறை ஐபிஎல் வென்றிருந்தாலும் தாங்கள் பெரியவர்கள் என்ற ஆட்டிட்யூடான மனநிலை அவர்களிடம் இருக்காது.
ஆனால் விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஒரு லீக் போட்டி வென்றாலும், பிளே ஆப்பிற்கு தகுதிபெற்றாலும் கூட தாங்கள் கோப்பையை வென்றதுபோல் நடந்துகொவர்கள் என்று பேசியிருந்தார். அதுவே இந்த மேட்சிலும் நடந்துள்ளதாக இந்த வீடியோவை நெட்டிஸின்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
- கடந்த ஆண்டும் அதிக கோல்கள் அடித்து Golden Boot-ஐ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நடைபெற்றுவந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி- வெஸ்ட் ஹெம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக பிரிமியர் லீக் கோப்பையை மென்செஸ்ட்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் வெற்றி மூலம் மென்செஸ்ட்டர் சிட் அணியும் 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
இதனிடையே, பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து Golden Boot- ஐ வென்றுள்ளார் மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட். இத்தொடரில் மொத்தம் 27 கோல் அடித்துள்ளார். கடந்த ஆண்டும் அதிக கோல்கள் அடித்து Golden Boot-ஐ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.
- வெற்றியை தொடர்ந்து சிட்டி அடுத்த வாரம் மேலும் ஓர் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது.
பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நடைபெற்றுவந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி- வெஸ்ட் ஹெம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக பிரிமியர் லீக் கோப்பையை மென்செஸ்ட்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது. 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.
ஆட்டத்தின் 2ஆவது, 18ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் போட்ட சிட்டி ஆட்டக்காரர் பில் ஃபோடன் (Phil Foden) இப்பருவத்தின் சிறந்த ஆட்டக்காரராக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை தொடர்ந்து சிட்டி அடுத்த வாரம் மேலும் ஓர் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது. மே 25ஆம் தேதி வெம்ப்லி (Wembley) அரங்கில் நடைபெறவுள்ள FA கோப்பை இறுதியாட்டத்தில் சிட்டி பரம வைரி மென்செஸ்ட்டர் யுனைட்டடைச் (Manchester United) சந்திக்கிறது.
- நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார்.
- ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
போட்டி முடிந்து தோனி விராட் கோலிக்கு கை குழுக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் தோனிக்கு இதுதான் ஐபிஎல் போட்டியில் கடைசியாக விளையாடுவது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.
அதனால் நாம் தோனியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் . ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.






