என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கிரிக்கெட்டில் இது புது ஃபேஷன் ஆகிவிட்டது.. -பிசிசிஐயை கிழித்த வீரர்கள்
Byமாலை மலர்8 Aug 2019 3:18 AM GMT (Updated: 8 Aug 2019 3:18 AM GMT)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் வீரரான டிராவிட்டுக்கு அளித்த நோட்டீஸ் தொடர்பாக, இந்திய வீரர்கள் பிசிசிஐக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
புது டெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஜெயின், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த நோட்டீசில், ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பு வகிக்கும்போது, இந்தியா சிமெண்ட்சில் எப்படி துணை தலைவராக இன்னொரு பதவி வகிக்க முடியும்? என கேட்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு ராகுல் விளக்கம் அளிக்க பிசிசிஐ 2 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறது.
இதற்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், 'இந்திய கிரிக்கெட் எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது? என தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிட்டை தவிர சிறந்த நபரை காண முடியாது. இது போன்ற ஜாம்பவான்களுக்கே நோட்டீஸ் அனுப்பப்படுவது அவர்களை அவமதிப்பதைப் போல உள்ளது.
டிராவிட்டை போன்றவர்கள் இந்திய அணியின் மேம்பாட்டிற்கு அவசியமானவர்கள். ஆம், கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஜெயின், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த நோட்டீசில், ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பு வகிக்கும்போது, இந்தியா சிமெண்ட்சில் எப்படி துணை தலைவராக இன்னொரு பதவி வகிக்க முடியும்? என கேட்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு ராகுல் விளக்கம் அளிக்க பிசிசிஐ 2 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறது.
இதனை எதிர்த்து முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியின் மூலம் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட்டில் இப்போது புது ஃபேஷனாகவே மாறிவிட்டது. செய்திகளில் வலம் வரவும் புதிய வழியாக இருக்கிறது. கடவுள்தான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும்' என பதிவிட்டிருந்தார்.
Really ?? Don’t know where it’s heading to.. u can’t get better person thn him for indian cricket. Sending notice to these legends is like insulting them.. cricket need their services for betterment.. yes god save indian cricket 🙏 https://t.co/lioRClBl4l
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 6, 2019
இதற்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், 'இந்திய கிரிக்கெட் எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது? என தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு டிராவிட்டை தவிர சிறந்த நபரை காண முடியாது. இது போன்ற ஜாம்பவான்களுக்கே நோட்டீஸ் அனுப்பப்படுவது அவர்களை அவமதிப்பதைப் போல உள்ளது.
டிராவிட்டை போன்றவர்கள் இந்திய அணியின் மேம்பாட்டிற்கு அவசியமானவர்கள். ஆம், கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X