என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய அணியின் அட்டவணை வெளியீடு: ஆஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது
Byமாலை மலர்1 Aug 2017 10:05 PM GMT (Updated: 1 Aug 2017 10:05 PM GMT)
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிளுக்கு எதிராக விளையாடுகிறது. 3 மாதத்தில் 23 போட்டியில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிளுக்கு எதிராக விளையாடுகிறது. 3 மாதத்தில் 23 போட்டியில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தொடர் மற்றும் போட்டி அட்டவணைக்குழு நேற்று கொல்கத்தாவில் கூடியது. இந்தக் குழு இந்திய அணி செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 23 சர்வதேச போட்டிகளில் விளையாடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மூன்று மாதத்தில் இந்திய மண்ணில் வந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கும்.
இந்த மூன்று நாடுகளுடன் விளையாடிய பிறகு இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. மற்ற நான்கு போட்டிகள் பெங்களூரு, நாக்பூர், இந்தூர், கொல்கத்தாவில் நடக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 22-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும், மூன்று டி20 கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது.
இலங்கைக்கு எதிராக நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தொடர் மற்றும் போட்டி அட்டவணைக்குழு நேற்று கொல்கத்தாவில் கூடியது. இந்தக் குழு இந்திய அணி செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 23 சர்வதேச போட்டிகளில் விளையாடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மூன்று மாதத்தில் இந்திய மண்ணில் வந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கும்.
இந்த மூன்று நாடுகளுடன் விளையாடிய பிறகு இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி சென்னையில் நடக்கிறது. மற்ற நான்கு போட்டிகள் பெங்களூரு, நாக்பூர், இந்தூர், கொல்கத்தாவில் நடக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 22-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும், மூன்று டி20 கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது.
இலங்கைக்கு எதிராக நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X