search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இளைஞர்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் - சோனியா காந்தி வேண்டுகோள்
    X

    சோனியா காந்தி

    இளைஞர்கள் அமைதியான வழியில் போராட வேண்டும் - சோனியா காந்தி வேண்டுகோள்

    • மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 8 மாநிலங்களுக்கு பரவியுள்ளது.
    • இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    அக்னிபத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    பீகாரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. ரெயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    இளைஞர்கள் குரலைப் புறக்கணித்து புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.

    புதிய அக்னிபத் திட்டம் இலக்குகள் அற்றது. புதிய திட்டம் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

    இளைஞர்களின் நலனைக் காக்க காங்கிரஸ் உறுதியுடன் துணைநிற்கும். உண்மையான தேசபக்தராக நாம் வன்முறை இன்றி அமைதியான வழியில் நமது எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×