search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொருளாரத்தில் உலக அளவில் நம்பர் 3: ஆனால் களத்தில் பார்க்க முடியவில்லையே... ப.சிதம்பரம்
    X

    பொருளாரத்தில் உலக அளவில் நம்பர் 3: ஆனால் களத்தில் பார்க்க முடியவில்லையே... ப.சிதம்பரம்

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • நாம் மிகப்பெரிய பொருளாதாரம், உலகில் மிகப்பெரிய வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் கொண்டு வந்துள்ளோம்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று நாட்டின் பொருளாதார சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இன்று விவாதம் நடைபெறும்போது மாநிலங்களை காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில் "உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால், களத்தில் ஏன் அதன் தாக்கம் உணரப்படவில்லை.

    நாம் மிகப்பெரிய பொருளாதாரம், உலகில் மிகப்பெரிய வளர்ச்சி, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் கொண்டு வந்துள்ளோம். ஆனால், களத்தில் பார்க்க முடியவில்லையே? பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் பார்க்க முடியவில்லை என்பதை குறிப்பாக கேட்க விரும்புகிறேன்" என்றார்.

    Next Story
    ×