என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உ.பி தேர்தலில் மாயாவதி போட்டியிடப்போவதில்லை- பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு
Byமாலை மலர்11 Jan 2022 2:05 PM GMT (Updated: 11 Jan 2022 2:05 PM GMT)
இந்த முறை பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் உ.பியை ஆளப்போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி சந்திரா மிஸ்ரா கூறினார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சந்திரா மிஸ்ரா கூறியதாவது:-
உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதி வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும் உ.பி.யில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். சமாஜ்வாதி கட்சியிடம் 400 வேட்பாளர்கள் கூட கிடையாது. பிறகு எப்படி அகிலேஷ் யாதவ் ஆட்சியை பிடிக்க முடியும்?
இந்த முறை பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் உ.பியை ஆளப்போவதில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தான் ஆளப்போகிறது.
இவ்வாறு சந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X