என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லடாக்கில் படைகளை விலக்க சீனா மறுப்பு : மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Byமாலை மலர்19 April 2021 11:02 PM GMT (Updated: 19 April 2021 11:02 PM GMT)
இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.
புதுடெல்லி:
இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.
அங்குள்ள ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேப்சாங் போன்ற இடங்களில் இருந்தும் படைகளை திரும்பப்பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையும் நடத்தின.
ஆனால் மேற்படி ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேப்சாங் போன்ற பகுதிகளில் இருந்து படைகளை விலக்க சீனா மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ், தேப்சாங் பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கும், டி.பி.ஓ. விமானப்படை தளத்துக்கும் நேரடி அச்சுறுத்தல் ஆகும். மத்திய அரசின் வீணான பேச்சுவார்த்தைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இரு நாட்டு பேச்சுவார்த்தைகள் எந்தவித பலன்களையும் அளிக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சியும் முன்னதாக கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.
அங்குள்ள ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேப்சாங் போன்ற இடங்களில் இருந்தும் படைகளை திரும்பப்பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையும் நடத்தின.
ஆனால் மேற்படி ஹாட்ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தேப்சாங் போன்ற பகுதிகளில் இருந்து படைகளை விலக்க சீனா மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இரு நாட்டு பேச்சுவார்த்தைகள் எந்தவித பலன்களையும் அளிக்காதது ஏன்? என காங்கிரஸ் கட்சியும் முன்னதாக கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X