என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Byமாலை மலர்28 Nov 2020 7:40 PM GMT (Updated: 28 Nov 2020 7:40 PM GMT)
டெல்லியில் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், பல்வேறு விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு வருகிற 3-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் அதற்கு முன் தங்களை சந்திக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, டெல்லியில் பல்வேறு பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள், போலீசார் அனுமதித்துள்ள புராரி மைதானத்துக்கு தங்கள் போராட்டத்தை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புராரி மைதானத்தில் மருத்துவம், கழிவறை, ஆம்புலன்ஸ், குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள அமித்ஷா, இது விவசாயிகளுக்கு பலனளிப்பதுடன், அவர்கள் தாங்கள் தற்போது போராடி வரும் பகுதிகளில் இருந்து விலகினால், பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு புராரி மைதானத்துக்கு விவசாயிகள் இடம் பெயர்ந்தால், குறித்த தேதிக்கு முன்னர் அரசு அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர் உறுதி கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், பல்வேறு விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு வருகிற 3-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஆனால் அதற்கு முன் தங்களை சந்திக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, டெல்லியில் பல்வேறு பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள், போலீசார் அனுமதித்துள்ள புராரி மைதானத்துக்கு தங்கள் போராட்டத்தை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புராரி மைதானத்தில் மருத்துவம், கழிவறை, ஆம்புலன்ஸ், குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள அமித்ஷா, இது விவசாயிகளுக்கு பலனளிப்பதுடன், அவர்கள் தாங்கள் தற்போது போராடி வரும் பகுதிகளில் இருந்து விலகினால், பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு புராரி மைதானத்துக்கு விவசாயிகள் இடம் பெயர்ந்தால், குறித்த தேதிக்கு முன்னர் அரசு அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அவர் உறுதி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X