search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் ஜூலை 2-ந் தேதி பதவி ஏற்கிறார்

    ஜூலை மாதம் 2-ந் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை.
    பெங்களூரு :

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் இன்னும் தொடர்கிறது. இதற்கிடையே கட்சி தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு டி.கே.சிவக்குமார் 2 முறை அனுமதி கேட்டார். 2 முறையும் மாநில அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.

    கர்நாடக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.கே.சிவக்குமாரை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, “உங்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு எனது ஆட்சேபனை கிடையாது என்றும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள்” என்றும் கூறினார்.

    இந்த நிலையில் ஜூலை மாதம் 2-ந் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை. அந்த அனுமதியை எதிர்பார்த்து டி.கே.சிவக்குமார் காத்திருக்கிறார்.
    Next Story
    ×