என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் ஜூலை 2-ந் தேதி பதவி ஏற்கிறார்
Byமாலை மலர்16 Jun 2020 3:53 AM GMT (Updated: 16 Jun 2020 3:53 AM GMT)
ஜூலை மாதம் 2-ந் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை.
பெங்களூரு :
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் இன்னும் தொடர்கிறது. இதற்கிடையே கட்சி தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு டி.கே.சிவக்குமார் 2 முறை அனுமதி கேட்டார். 2 முறையும் மாநில அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.
கர்நாடக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.கே.சிவக்குமாரை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, “உங்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு எனது ஆட்சேபனை கிடையாது என்றும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள்” என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஜூலை மாதம் 2-ந் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை. அந்த அனுமதியை எதிர்பார்த்து டி.கே.சிவக்குமார் காத்திருக்கிறார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் இன்னும் தொடர்கிறது. இதற்கிடையே கட்சி தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு டி.கே.சிவக்குமார் 2 முறை அனுமதி கேட்டார். 2 முறையும் மாநில அரசு அனுமதி தர மறுத்துவிட்டது.
கர்நாடக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.கே.சிவக்குமாரை தொடர்பு கொண்டு பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, “உங்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு எனது ஆட்சேபனை கிடையாது என்றும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள்” என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஜூலை மாதம் 2-ந் தேதி பதவி ஏற்பு விழாவை நடத்த டி.கே.சிவக்குமார் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அவர் தொடங்கி உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை நடத்துவதற்கு கர்நாடக அரசு இன்னும் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கவில்லை. அந்த அனுமதியை எதிர்பார்த்து டி.கே.சிவக்குமார் காத்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X