search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி, ப.சிதம்பரம்
    X
    ராகுல் காந்தி, ப.சிதம்பரம்

    மோடியின் கொள்கைகள் பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கருத்து

    பா.ஜனதா அரசின் ஆளும் திறனும், நிதி அமைப்புகளை கையாளும் திறனும் அம்பலமாகி விட்டது. மோடியின் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டன என்று ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி :

    நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி ஏற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘யெஸ் வங்கி அல்ல. மோடியின் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டன’’ என்று கூறியுள்ளார்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதா அரசின் ஆளும் திறனும், நிதி அமைப்புகளை கையாளும் திறனும் அம்பலமாகி விட்டது. பா.ஜனதா, 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. முதலில், பி.எம்.சி. வங்கி. இப்போது யெஸ் வங்கி. இது பற்றியெல்லாம் அரசு கவலைப்படுகிறதா? தனது பொறுப்பை தட்டிக்கழிக்கலாமா? மூன்றாவதாக ஒரு வங்கி பாதிக்கப்படுமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×