என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியின் கொள்கைகள் பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கருத்து
Byமாலை மலர்7 March 2020 1:53 AM GMT
பா.ஜனதா அரசின் ஆளும் திறனும், நிதி அமைப்புகளை கையாளும் திறனும் அம்பலமாகி விட்டது. மோடியின் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டன என்று ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி :
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதா அரசின் ஆளும் திறனும், நிதி அமைப்புகளை கையாளும் திறனும் அம்பலமாகி விட்டது. பா.ஜனதா, 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. முதலில், பி.எம்.சி. வங்கி. இப்போது யெஸ் வங்கி. இது பற்றியெல்லாம் அரசு கவலைப்படுகிறதா? தனது பொறுப்பை தட்டிக்கழிக்கலாமா? மூன்றாவதாக ஒரு வங்கி பாதிக்கப்படுமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி ஏற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘யெஸ் வங்கி அல்ல. மோடியின் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டன’’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X