search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பொருளாதாரம்"

    • இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    வாஷிங்டன்:

    சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் கூறியதாவது:-

    இந்தியா வலுவான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது.

    இதன் மூலம், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. 2023 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். 2024-ம் நிதியாண்டில் இருந்து 2025-ம் ஆண்டிற்கு 0.3 சதவீத புள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.

    மேலும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மதிப்பில், இந்தியாவின் வளர்ச்சி 2024-ம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வலிமையானது. உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.

    அதே நேரத்தில், வளர்ந்து வரும் மற்றும் வளரும் ஆசியாவின் வளர்ச்சி 2023-ம் ஆண்டு மதிப்பிடப்பட்ட 5.6 சதவீதத்தில் இருந்து 2024-ம் ஆண்டில் 5.2 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டில் 4.9 சதவீதமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2023-ம் ஆண்டில் 3.2 சதவீதமாக மதிப்பிடப்பட்ட உலகளாவிய வளர்ச்சி, 2024 மற்றும் 2025-ல் அதே வேகத்தில் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார்.
    • இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

    கோவை:

    கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போதைப் பொருள் கடத்தலிலும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவிலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வஞ்சிப்பதிலும் தான் தி.மு.க. அரசு முன்னிலையில் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்துகின்றனர். இந்த இரு கட்சிகளுமே பாராளுமன்ற தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. இது இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆனால் சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதமர் நரேந்திரமோடி பிரதிபலிக்கிறார்.

    பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியை நன்கு அறிந்தவர். இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து வைத்துள்ளார்.

    அதனால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு கோவை தொகுதி மக்களுக்கு உள் ளது. அதன் மூலம் சிறந்த எம்.பி.யை தேர்ந்தெடுத்த பெருமை கோவை மக்களுக்கு சேரும்.

    மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வருவது மிக அவசர தேவையாகும். இன்றைய தமிழக வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம். தி.மு.க. அரசு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், பத்தி ரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு என மக்கள் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளது.

    மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. காலையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உத வித்தொகை கொடுத்து விட்டு மாலையில் குடும்ப தலைவரிடம் இருந்து டாஸ்மாக் வழியாக அதை தி.மு.க. பிடுங்கி கொள்கிறது. தி.மு.க. டாஸ்மாக் வியாபார அரசாக மாறி இருக்கிறது. இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.

    நீங்கள் போடும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கானது. இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், உலக ளவில் இரண்டாம் இடத்துக்கு உயரும். உங்களுக்காக உழைக்க தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
    • வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும்.

    புதுடெல்லி:

    இந்திய பொருளாதாரம் 2023-2024-ம் நிதி ஆண்டில் 7.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. அதே நேரம் தெற்காசியாவின் வளர்ச்சி 2024-ல் 6.0 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, தெற்காசியா அடுத்த 2 வருடங்களுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக இருக்கும் என்றும், 2025-ல் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தெற்காசியாவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் மார்ட்டில் ரைசர் கூறுகையில், வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதன் மூலம் மக்களின் நுகர்வை அதிகரிக்க முடியும். எனவே வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிலம், தொழிலாளர், முதலீடு உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என்றார்.

    • மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
    • இது இந்திய பொருளாதாரத்தின் வலிமையையும், திறனையும் காட்டுகிறது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2-வது காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. 2023-24 நிதியாண்டின் 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

    இது இந்தியப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்ச்சியை காட்டுகிறது. கட்டுமானத்துறை, உற்பத்தித் துறையில் கண்டுள்ள வளர்ச்சி விகிதங்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில், 2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.
    • நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது.

    மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது. 10 ஆண்டுகால வலிமையான ஆட்சியின் மூலம் வலிமையான பொருளாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாங்கள் 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனும்போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

    எதிர்க்கட்சிகள் விரைவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்தியாவின் ஜிடிபி உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்துள்ளது.

    அடுத்த 30 ஆண்டுகளில் இருந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். 30 ஆண்டு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது 3வது இடத்தில் இந்தியா இருக்கும்.

    எனது மூன்றாவது முறை ஆட்சி காலத்தில் இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

    பாஜக அரசின் வேகத்தை காங்கிரஸ் கட்சியால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நகர்புறத்தில் வாழும் ஏழைகளுக்காக பாஜக அரசு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

    பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்ய 100 ஆண்டுகள் ஆகும். நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.

    காங்கிரஸ் கொண்டுள்ள மனப்பான்மையால் நாட்டிற்கு பெரும் தீங்கு ஏற்படும். காங்கிரசுக்கு, கடுமையாக உழைக்கும் மனப்பான்மை இல்லை. 

    நாங்கள் 70 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளை கொடுத்துள்ளோம். இதையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்வதாக இருந்தால் 70 கோடி இணைப்புகளை வழங்க 60 ஆண்டுகள் ஆகி இருக்கும். நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட பொருளை மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்ய நினைத்து தோல்வியடைந்தது.

    இந்தியாவை பற்றி நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் எண்ணங்கள் மேன்மையாக இல்லை. மக்களை பற்றி சரியாக சொல்லாவிட்டாலும், இந்திரா காந்தி காங்கிரசை பற்றி சரியாக சொல்லி உள்ளார். ஒரு குடும்பத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியால் சிந்திக்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தற்போது அவர்களின் கூட்டணியை உடைத்துவிட்டது. எங்களுக்கு தேசத்தின் திறமையின் மீது நம்பிக்கை உள்ளது மக்களின் சக்தியின் மீதும் நம்பிக்கை உள்ளது.

    3வது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து, நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.
    • பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் எங்கே வளர்ந்து இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார்கள் வேலை தந்தார்களா?

    விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் செய்தார்களா, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என்று சொன்னார்கள் போட்டார்களா, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தார்களா, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளதா, எந்த வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேறி இருக்கின்றது.

    மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். அதனை ஐ.நா. மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

    உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பது மோடி அரசாங்கம் தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.

    அதனால் தான் அவர்கள் மற்றதை பேசுவதை விட்டுவிட்டு ராமர் கோவில் கையில் எடுத்துள்ளனர். ராமருக்கு கோவில் கட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எல்லாருமே ராமருடைய பக்தர்கள் தான்.

    வட இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கூட ராமர் கோவிலை கட்டுங்கள் என்று தான் சொல்கிறார்கள். மசூதியை இடித்து விட்டு ராமருக்கு என்று தனியாக கோவில் கட்ட வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் சொன்னது. அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.

    பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    மக்களை திசை திருப்புவதற்காக எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர்.

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எல்லா இடத்திலும் ஏராளமான மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். கோவில் கட்டுவதால் இன்றைக்கு தேர்தலில் யாரும் ஜெயித்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2023 இல் கணிக்கப்பட்ட 6.3 சதவீதத்தை விட சற்று குறைவாகும்.
    • வலுவான உள்நாட்டு தேவையுடன் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும்.

    2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2023 இல் கணிக்கப்பட்ட 6.3 சதவீதத்தை விட சற்று குறைவாகும். ஐ.நா. அறிக்கையின்படி, வலுவான உள்நாட்டு தேவையுடன் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று இந்த ஆண்டு வளர்ச்சியைத் தொடரும்.

    பலவீனமான சொத்துச் சந்தையிலிருந்து சீனா சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால் தனியார் முதலீட்டின் பற்றாக்குறை அரசாங்கம் தலைமையிலான உள்கட்டமைப்பு திட்டங்களால் ஓரளவு ஈடுசெய்யப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, அரசாங்க உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் 2023-ல் இந்தியாவின் வலுவான முதலீட்டு செயல்திறனுக்கு சக்தி அளித்தன.

    இந்தியாவைத் தவிர, உலகின் அனைத்து முக்கியப் பொருளாதாரங்களும் 2023-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தி கொள்முதல் நிர்வாக குறியீட்டில் வீழ்ச்சியைக் கண்டன.

    தொழில்மயமான நாடுகளுடன் ஒப்பிடுகையில், வளரும் பொருளாதாரங்களில் முதலீடு மிகவும் நெகிழ்ச்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2023-ல் தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருக்கிறது.

    காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகள் 2023-ம் ஆண்டில் இப்பகுதியில் தொடர்ந்து மோசமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வறட்சி கணிசமாக தீவிரமடைந்தது, இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் பெரும்பகுதியை பாதித்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் சராசரிக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் நாற்பது ஆண்டுகளில் ஆகஸ்டு மிகவும் வறட்சியான மாதங்களில் ஒன்றாகும், இது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமான பிரதான பயிர்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தியது.

    2023 இல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் மோசமான சூழ்நிலை தவிர்க்கப்பட்டாலும், மெதுவான வளர்ச்சியின் நீடித்த காலம் இன்னும் சாத்தியமாகத் தெரிகிறது.

    பல்வேறு காரணிகளால் 2024-ல் உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி 2023-ம் ஆண்டு மதிப்பீட்டை (2.7) விட 2.4 சதவீதமாக இருக்கும் எனக் கண்கீடப்பட்டுள்ளது.

    2025 ஆம் ஆண்டில் உலகளாவிய உள்நாட்டு மொத்த உற்பத்தி படிப்படியாக 2.7 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி விகிதமான 3 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும்.

    • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கு 130 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன
    • 2020ல் கொண்டு வரப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு பொருளாதாரம் இன்னும் சீராகவில்லை

    ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கம், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organization).

    உலக நாடுகள் முழுவதும் பசியை ஒழிக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உணவு பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் 194 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துள்ளது. இதன் தலைமையகம், இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ளது.

    உலகளவில் 130 நாடுகளில் இந்த அமைப்பிற்கு அலுவலகங்கள் உள்ளன.

    சமீபத்தில் இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. தற்போது அந்த ஆய்வின் முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரவுகள், புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த நீண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    2021ல் இந்தியர்களில் 74.1 சதவீதம் பேரால் ஆரோக்கியமான, சமச்சீரான உணவை பெற முடிவதில்லை என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2020ல் இந்த விகிதாசாரம் 76.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா கால ஊரடங்கிற்கு பிறகு முழுவதுமாக பொருளாதாரம் சீராகாததாலும், அதிகரிக்கும் உணவு பண்டங்களின் விலை மற்றும் எகிறும் விலைவாசிக்கு ஏற்றவாறு மக்களுக்கு ஊதிய உயர்வு இல்லாததும்தான் இதற்கு காரணம் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊதியத்திற்கும் மக்களின் வாங்கும் சக்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்தால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சத்தான உணவின்றி வாடும் சூழ்நிலை அதிகரிக்கலாம் என்றும் ஆரோக்கியமான உணவு எட்டாக்கனியாகலாம் என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

    • உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது.
    • இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது.

    சென்னை :

    சென்னை எழும்பூரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எப்.ஐ.சி.சி.ஐ. அமைப்பு சார்பில் தொழிலதிபர்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:-

    2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் உயர வாய்ப்புள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் நிலை 9.1 சதவீதமாக இருந்தது.

    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மற்ற நாடுகள்போல நமது நாடும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருந்தது என்றால், அந்த நிலையை சமாளிக்க அரசின் செலவையோ, மத்திய வங்கியின் வட்டி விகிதத்தையோ, பணப் புழக்கத்தையோ கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கவில்லை.

    முன்னெச்சரிக்கையுடன், எந்த மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டும் உதவிகளை அளிப்பதற்காக இலக்கை நிர்ணயித்து, நிதானத்துடன் செயல்பட்டோம். இன்றுள்ள விலைவாசி உயர்வு, அரசின் நிதிநிலை ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது. இந்த ஆரோக்கியமான நிலைதான் வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையாக இருக்கும்.

    இந்தியாவில் உள்ள வங்கிகள், பெரு நிறுவனங்கள் போன்றவை 2011-2020-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் மிக அதிகமாக முதலீடு செய்தன. வங்கிகள் அதிகமாக கடன்களை வழங்கின. இதனால் எழுந்த பிரச்சினைகளை சமாளிக்க கடந்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் கடன் நிலவரமும் முன்பு இருந்ததைவிட குறைந்துள்ளது.

    எனவே அவர்கள் மேற்கொண்டு கடன்களை வாங்கி முதலீடு செய்யும் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டுள்ளது. இனி வரும் 10 ஆண்டுகளில் வங்கிகளின் கடன் அளிக்கும் மனப்பான்மையும், பெரு நிறுவனங்கள் கடன் பெறும் நிலையும் சாதகமாக அமைந்து, எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்.

    அடுத்ததாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றொரு அம்சம் என்னவென்றால், மென்பொருள் முதலீடுகளில் சிறிய தொழில் நிறுவனங்கள் கூட உலகளாவிய சந்தையில் பங்கேற்க முடியும் என்பதுதான். இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு ஏதுவாக அமைகிறது.

    எந்தவொரு நிறுவனமும் அயல் நாடுகளுக்கு சென்றுதான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது. எனவே இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நமது நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு 0.5 சதவீதம் பங்களிக்க வாய்ப்புள்ளது

    இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பொருளியல் சீர்திருத்தங்கள், கொரோனா காலகட்டத்தில் செய்த மிதமான செலவுகள், மத்திய வங்கிகளின் நிதி நிலைமை மற்றும் செயல்பாடுகள், பெரு நிறுவனங்களின் நிதி நிலைமை, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை மொத்தமாக கணக்கிட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை உதவிகரமாக இருக்கும்.

    இதனால் இனிவரும் 8 ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 6.5 சதவீதம் வளர வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அளவில் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டால் இந்த 6.5 சதவீதம் என்பது 7.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.
    • நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன.

    மும்பை :

    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி நடந்தது. அதில், கடனுக்கான வட்டியை 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசிய உரை, நேற்று வெளியிடப்பட்டது. அதில் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:-

    கலவையான அறிகுறிகள் தென்பட்டாலும், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து வேகம் எடுத்துள்ளன. உலக அளவிலான அரசியல் நிலவரங்கள், சவால்களை உண்டாக்கி வருகின்றன.

    அதையும் மீறி, நடப்பு நிதிஆண்டில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030-ம் ஆண்டுக்குள், இதை 2 டிரில்லியன் டாலராக (ரூ.160 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம்.

    உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக (ரூ.2,400 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர் வரை (ரூ.3 ஆயிரத்து 600 லட்சம் கோடி) உயரக்கூடும்.

    கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.
    • முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூரில் இன்று பின்னலாடை துறையினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் இந்தியாவின் முக்கிய ஊர். இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்கள் நலன்கருதி 80 கோடி மதிப்பில் 100 படுக்கை கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை மே 23-ந்தேதி பணி முடிவடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். பஞ்சாயத்து தலைவர்கள் தான் அரசின் திட்டங்களை நடைமுறை படுத்துபவர்கள். அவர்களுடன் இன்று சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். சின்னேரிபாளையம் பஞ்சாயத்து சுகாதாரத்திற்கு சிறந்த விருது பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மற்றவர்கள் பண்டிகைக்கு நேரில் சென்று கொண்டாடி வாழ்த்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதததை மக்கள் ஏன் என கேட்கிறார்கள். தேர்தலுக்காக வேல் ஏந்தி வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் .எனவே திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும்.ராகுல் காந்தி நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தபோவது இல்லை. கொரோனாவிற்கு பிறகு வளர்ந்த நாடுகள் கூட சிக்கி தவிக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை தடுக்க திட்டமிடலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதன்படி அவர்கள் பணி செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  

    ×