என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்
Byமாலை மலர்29 Jan 2020 8:01 AM GMT (Updated: 29 Jan 2020 8:01 AM GMT)
உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த அப்பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் காயமடைந்த இருவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பைசாபாத்:
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் அருகே உள்ள கண்ட் பிப்ரா பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாகி வெளியே கசிந்தது. இதனால் அந்த பெண்ணை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
எனினும் கள்ளக்காதல் ஜோடி அதனை கண்டுகொள்ளாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வாலிபர் தனது காதலியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து அடித்து உதைத்து தாக்கி உள்ளனர்.
மேலும் இருவரின் மூக்கையும் அறுத்து வீசி உள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சிலரை கைது செய்தனர். மேலும் அந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் அருகே உள்ள கண்ட் பிப்ரா பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாகி வெளியே கசிந்தது. இதனால் அந்த பெண்ணை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
எனினும் கள்ளக்காதல் ஜோடி அதனை கண்டுகொள்ளாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வாலிபர் தனது காதலியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து அடித்து உதைத்து தாக்கி உள்ளனர்.
மேலும் இருவரின் மூக்கையும் அறுத்து வீசி உள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் மாமனார் மற்றும் கிராம மக்கள் சிலரை கைது செய்தனர். மேலும் அந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X