search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதல் விவகாரம்"

    • கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை:

    மதுரையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். திருமணம் ஆனவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் கோவைக்கு வேலைக்கு வந்தபோது சிங்காநல்லூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கதிர்வேல் (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண் கணவரை பிரிந்து கதிர்வேலுடன் வந்து குடும்பம் நடத்தினார். சிங்காநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

    அதன்பின்னர் இளம்பெண்ணுக்கு மதுரையை சேர்ந்த கூலித் தொழிலாளி பாக்கியராஜ் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கதிர்வேல் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண், பாக்கியராஜை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் கதிர்வேலுக்கு தெரியவரவே அவர் இளம்பெண்ணை கண்டித்தார்.

    இதனால் இளம்பெண் கதிர்வேலுவை பிரிந்து பாக்கியராஜூடன் சென்றார். அந்த பெண்ணும், பாக்கியராஜூவும் ஆனையங்காடு வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கதிர்வேலை பார்க்கும்போது உன் காதலி என்னுடன் தான் உள்ளார் என பாக்கியராஜ் ஏளமாக பேசி வந்துள்ளார். இதனால் கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு பாக்கியராஜூவும், அவரது கள்ளக்காதலியும் வீட்டில் அமர்ந்து மதுகுடித்துக் கொண்டு இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த போது வீட்டிற்குள் கதிர்வேல் அத்துமீறி நுழைந்தார். அவரும் மதுபோதையில் இருந்தார். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு பாக்கியராஜ் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல், பாக்கியராஜை கீழே தள்ளினார். நிலை தடுமாறி கீழே விழுந்த போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் கதிர்வேல் அங்கு இருந்த மின்சார டெஸ்டர் கம்பியை எடுத்து பாக்கியராஜின் கழுத்தில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கதிர்வேல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொலை செய்யப்பட்ட பாக்கியராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாக்கியராஜை குத்தி கொலை செய்த கதிர்வேலுவை கைது செய்தனர்.

    • ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார்.
    • ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ், தனது பெரியம்மாவை கண்டித்துள்ளார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது39). இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஜோதி, அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    பேரிகை அருகே மகாதேவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40), லாரி டிரைவர்.

    இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் வெங்க டேசுக்கும், ஜோதி க்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடை வில் கள்ளத்தொடர்பாக மாறியது.

    இதனிடையே ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார்.

    அப்போது ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ், தனது பெரியம்மாவை கண்டித்துள்ளார். இதனால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் இரவு, ஜோதியின் வீட்டிற்கு வெங்கடேஷ் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? என்று கேட்டு வெங்கடேசிடம் தகராறு செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார்.

    அதே நேரத்தில் வெங்கடேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து வெங்கடேசை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசின் கள்ளக்காதலி ஜோதி மற்றும் அவருடைய உறவினர் ஹரீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.
    • உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    வேளச்சேரி:

    பெருங்குடி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது32). கூலித்தொழிலாளி. இவர் உறவினரான விஜயகாந்த் என்பவரின் வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை பெருங்குடி ஏரியில் ராஜீவ் காந்தி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது உறவினரான விஜயகாந்த் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, தனது மனைவியுடன் ராஜீவ்காந்தி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.

    கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் ஆத்திரத்தில் இருந்த விஜயகாந்த் கடந்த 16-ந்தேதி இரவு உறவினரான ராஜீவ்காந்தியை தீர்த்துகட்ட முடிவு செய்து பெருங்குடி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு இருவரும் மது குடித்தபோது போதையில் இருந்த ராஜீவ்காந்தியை தாக்கி அவரது கழுத்தை நெரித்து விஜயகாந்த் கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    பின்னர் உடலை ஏரியில் வீசி விட்டு விஜயகாந்த் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக கைதான விஜயகாந்திடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
    • கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் என்கிற ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் மதன்குமார். அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.

    ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மகாலட்சுமி பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கும் வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனம் திருந்திய மகாலட்சுமி மீண்டும் கணவர் ராஜாவுடன் சேர்ந்து வாழ திரும்பி வந்தார். காதலி மகாலட்சுமி பிரிந்து சென்றதால் கோபம் அடைந்த கார்த்திக், கடந்த 7-ந்தேதி, விருகம்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதனை மகாலட்சுமியின் மகன் மதன்குமார் கண்டித்தார்.

    இதனால் கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மதன் குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மதன்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×