search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிக்கடி ஆளை மாற்றிய பெண்ணால் நடந்த விபரீதம்
    X

    அடிக்கடி ஆளை மாற்றிய பெண்ணால் நடந்த விபரீதம்

    • கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை:

    மதுரையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். திருமணம் ஆனவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் கோவைக்கு வேலைக்கு வந்தபோது சிங்காநல்லூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கதிர்வேல் (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண் கணவரை பிரிந்து கதிர்வேலுடன் வந்து குடும்பம் நடத்தினார். சிங்காநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

    அதன்பின்னர் இளம்பெண்ணுக்கு மதுரையை சேர்ந்த கூலித் தொழிலாளி பாக்கியராஜ் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கதிர்வேல் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண், பாக்கியராஜை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் கதிர்வேலுக்கு தெரியவரவே அவர் இளம்பெண்ணை கண்டித்தார்.

    இதனால் இளம்பெண் கதிர்வேலுவை பிரிந்து பாக்கியராஜூடன் சென்றார். அந்த பெண்ணும், பாக்கியராஜூவும் ஆனையங்காடு வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கதிர்வேலை பார்க்கும்போது உன் காதலி என்னுடன் தான் உள்ளார் என பாக்கியராஜ் ஏளமாக பேசி வந்துள்ளார். இதனால் கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு பாக்கியராஜூவும், அவரது கள்ளக்காதலியும் வீட்டில் அமர்ந்து மதுகுடித்துக் கொண்டு இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த போது வீட்டிற்குள் கதிர்வேல் அத்துமீறி நுழைந்தார். அவரும் மதுபோதையில் இருந்தார். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு பாக்கியராஜ் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல், பாக்கியராஜை கீழே தள்ளினார். நிலை தடுமாறி கீழே விழுந்த போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் கதிர்வேல் அங்கு இருந்த மின்சார டெஸ்டர் கம்பியை எடுத்து பாக்கியராஜின் கழுத்தில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கதிர்வேல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொலை செய்யப்பட்ட பாக்கியராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாக்கியராஜை குத்தி கொலை செய்த கதிர்வேலுவை கைது செய்தனர்.

    Next Story
    ×