search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதல் ஜோடி"

    • சாக்கு மூட்டை ஒன்றுக்குள் செல்போன் கேமரா வீடியோவை ஆன் செய்து வைத்து, அவர்களின் உல்லாச காட்சிகளை படம் பிடித்தார்.
    • போலீஸ் வரை இந்த விவகாரம் போகா விட்டாலும், தளி பகுதியில் தற்போது பரபரப்பாக இந்த விஷயம் தான் பேசப்பட்டு வருகிறது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இங்கு பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும், ஆண் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.

    திருமணம் ஆனதையும் மறந்து அவர்கள் 2 பேரும் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். தாங்கள் பணிபுரிந்து வந்த இடத்தை உல்லாசபுரியாக மாற்றிக் கொண்டார்கள். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அந்த நிறுவனத்திற்குள் அரசல் புரசலாக தெரிய வந்தது.

    பல நேரங்களில் இந்த ஜோடி காணாமல் போனதை கண்ட ஊழியர் ஒருவர் அவர்களை கண்காணிக்க தொடங்கினார். அப்போது அங்குள்ள குடோன் ஒன்றில் அவர்கள் உல்லாசமாக இருந்து வருவதை அறிந்த அவர், தனது கொடூர புத்தியை அங்கு அரங்கேற்றினார்.

    அந்த நிறுவன குடோனில் உள்ள சாக்கு மூட்டை ஒன்றுக்குள் செல்போன் கேமரா வீடியோவை ஆன் செய்து வைத்து, அவர்களின் உல்லாச காட்சிகளை படம் பிடித்தார்.

    தனக்கு தெரிந்தவர்க ளுக்கு அந்த வீடியோவை அனுப்பி, அவர்களின் கள்ளக்காதல் விவரங்களை அந்த நபர் தெரிவிக்க, ஒரு கட்டத்தில் அந்த நிறுவன உரிமையாளருக்கும் இந்த விவகாரம் தெரிய வந்தது.

    இதையடுத்து கள்ள க்காதல் வைத்திருந்ததோடு, நிறுவன வளாகத்தில் உல்லாசமாக இருந்து அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக அவர்கள் 2 பேரையும் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கினார். மேலும் இந்த வீடியோ எடுத்து பரப்பிய நபரிடமும் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் வரை இந்த விவகாரம் போகா விட்டாலும், தளி பகுதியில் தற்போது பரபரப்பாக இந்த விஷயம் தான் பேசப்பட்டு வருகிறது.

    • திருமணமானதை மறைத்து இளம்பெண் பழகி உள்ளார்.
    • கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    கோவை,

    நாகை மாவட்டம் வடபதி அருகே உள்ள சோழம்பேட்டையை சேர்ந்தவர் கிருத்திகா–(வயது26).

    சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள நாச்சாங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(30).

    இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கோவை பீளமேடு அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    கிருத்திகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    வர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கிருத்திகா தனது கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு கிருத்திகாவுக்கு செல்போனில் மிஸ்டுகால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்ட போது, சிவகங்கையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் எடுத்தார். அவருடன் கிருத்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    கிருத்திகா தனது காதலரிடம் திருமணம் ஆனதை மறைத்து பழகி வந்தார். 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள், உனக்கு குழந்தை உள்ளது. எனவே வாலிபருடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்தனர். ஆனால் இதனை காதில் வாங்கி ெகாள்ளாமல் அவர் வாலிபருடன் பழகினார்.

    இதற்கிடையே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் சின்னியம் பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் கணவன்-மனைவி என கூறி அறை எடுத்து தங்கினர்.

    அறையில் 2 பேரும் ஜாலியாக இருந்தனர். மேலும் கோவையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர்.

    அப்போது தான் கிருத்திகா தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை காதலனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. திருமணம் ஆன பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கிருஷ்ணன் நினைத்தார்.

    வேறு எங்காவது செல்லலாம் என்றால் எடுத்து வந்த பணம் அனைத்தும் தீர்ந்து விட்டது. இதனால் கள்ளக்காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்ததும், இதனால் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்ததும் தெரியவந்தது.தொடர்ந்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.
    • சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருத்திகா (வயது 26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் பழகி வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கணவன்-மனைவி என கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அங்கு வைத்து 2 பேரும் ஜாலியாக இருந்தனர்.

    பின்னர் கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். லாட்ஜில் தங்கியிருந்த இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்தனர். இதனால் லாட்ஜின் பொறுப்பாளர் அறைக்கு சென்று வாடகை கேட்பதற்காக சென்றார். அப்போது அறையில் தங்கி இருந்த ஜோடி விஷத்து மயக்க நிலையில் இருந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறுமியை முருகன் வீட்டில் இருந்து அழைத்து சென்றார்.
    • தஞ்சாவூரில் தனியாக குடித்தனம் நடத்த வீடு தேடினர்.

    நாமக்கல்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் முருகன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் சிறுமியை முருகன் வீட்டில் இருந்து அழைத்து சென்றார். பின்னர் தஞ்சாவூரில் தனியாக குடித்தனம் நடத்த வீடு தேடினர். ஆனால் அங்கு யாரும் வீடு கொடுக்கவில்லை. இதனால் மனமடைந்த 2 பேரும் நேற்று நாமக்கல்லுக்கு வந்தனர்.

    நாமக்கல்லில் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்த அந்த பகுதியினர், நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே தஞ்சாவூரில் இருந்து வந்த அவர்களது உறவினர்கள், 2 பேரையும் தஞ்சாவூருக்கு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் ஜோடியை ஊர்மக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய அடித்து உதைத்துள்ளனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலம்  மேற்கு சம்பரன் மாவட்டம் சுகேலாலி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராம். இவரது மனைவி சுசிலா தேவி. இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்துராம் மும்பையில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருவதால், பெரும்பாலும் மும்பையிலேயே தங்கியிருப்பார்.

    இந்த சூழ்நிலையில், லீலாகாரியா கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராம் என்ற திருமணமாகாத வாலிபருடன் சுசிலா தேவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்த இவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவில் ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளனர்.

    சுசிலா தேவியின் வீட்டுக்குள் வினோத் ராம் நுழைந்தபின்னர், அவர்கள் இருவரும் வீட்டின் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்திருக்கிறார்கள். வெகு நேரமாகியும் அவர்கள் கதவை திறக்காத நிலையில், இதை கவனித்த ஊர் மக்கள், இருவரையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய அடித்து உதைத்துள்ளனர். 

    விடிந்ததும் சுசிலா தேவியின் கழுத்தில் வினோத் ராமை தாலி கட்ட வைத்துள்ளனர். வினோத் ராம் குடும்பத்தினர் முன்னிலையில், இந்த திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர் இருவரையும் ஊரை விட்டு வெளியேற்றினர். 

    கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுசீலா தேவி தனது கள்ளக்காதலனுடன் சென்றதால் அவரது குழந்தைகள் நிர்கதியாக தவிக்கின்றனர். 
    ×