என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு எதிரொலி - பா.ஜனதா- சிவசேனா பேச்சுவார்த்தை ரத்து
Byமாலை மலர்29 Oct 2019 7:58 PM GMT (Updated: 29 Oct 2019 7:58 PM GMT)
சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடையாது என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்ததை அடுத்து, பா.ஜனதா- சிவசேனா பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா, சிவசேனா கட்சி இடையே கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவுக்கு 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி தருவதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து நேற்று மாலை 4 மணிக்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக நடைபெற இருந்த பா.ஜனதா- சிவசேனா பேச்சுவார்த்தையை சிவசேனா திடீரென ரத்து செய்து உள்ளது.
இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையில், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், புபேந்திரயாதவ் மற்றும் சிவசேனா சார்பில் சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத் ஆகி யோர் கலந்துகொள்ள இருந்தனர்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்து உள்ளார். முதல்-மந்திரி தான் கூறிய வாக்குறுதிகளை நினைத்து பார்க்காமல் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரமுடியாது என கூறியிருக்க கூடாது. மேலும் ஆட்சி அதிகாரத்தில் சிவசேனாவுக்கு சரிபாதி பங்கு வழங்குவது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசிய வீடியோவையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா, சிவசேனா கட்சி இடையே கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவுக்கு 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி தருவதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து நேற்று மாலை 4 மணிக்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக நடைபெற இருந்த பா.ஜனதா- சிவசேனா பேச்சுவார்த்தையை சிவசேனா திடீரென ரத்து செய்து உள்ளது.
இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
நேற்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையில், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், புபேந்திரயாதவ் மற்றும் சிவசேனா சார்பில் சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத் ஆகி யோர் கலந்துகொள்ள இருந்தனர்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்து உள்ளார். முதல்-மந்திரி தான் கூறிய வாக்குறுதிகளை நினைத்து பார்க்காமல் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரமுடியாது என கூறியிருக்க கூடாது. மேலும் ஆட்சி அதிகாரத்தில் சிவசேனாவுக்கு சரிபாதி பங்கு வழங்குவது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசிய வீடியோவையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X