என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் ராகுல் காந்தி - காங்கிரஸ்
Byமாலை மலர்8 Oct 2019 4:16 PM GMT (Updated: 8 Oct 2019 4:16 PM GMT)
குஜராத் மாநிலத்தின் சூரத் நகர் கோர்ட்டில் அக்டோபர் 10-ம் தேதி அன்று ராகுல் காந்தி ஆஜராக உள்ளார் என அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அகமதாபாத்:
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, சமஸ்த் குஜராத்தி மோத் மோடி சமாஜம் என்ற அமைப்பின் சார்பில் சூரத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணைக்காக அக்டோபர் 10-ம் தேதி ராகுல் காந்தி சூரத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் என அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா கூறுகையில், விமான நிலையம் வந்து இறங்கியது முதல் கோர்ட் வருவது வரை ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X