என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேர் ராஜ்யசபையில் பாஜக எம்பிக்களாக செயல்பட அனுமதி
Byமாலை மலர்21 Jun 2019 2:18 PM GMT (Updated: 21 Jun 2019 3:10 PM GMT)
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேர் ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்களாக செயல்படுவதற்கு சபாநாயகர் அனுமதித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது.
பாராளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வென்றது. மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுடன் பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
இதற்கிடையே, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களான ஒய்.எஸ்.சவுத்ரி, ரமேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் நேற்று அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேர் ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்களாக செயல்படுவதற்கு சபாநாயகர் அனுமதித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேரையும் பா.ஜ.க. எம்.பி.க்கள் பட்டியலில் இணைப்பதற்கான வேலைகள் ராஜ்யசபை அலுவலகத்தில் இன்று காலை முடிந்துவிட்டது. இதையடுத்து, அவர்களை ராஜ்யசபையில் பா.ஜ.க. எம்.பி.க்களாக செயல்பட சபாநாயகர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X