search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும்: ஜெகதீஷ் ஷெட்டர்
    X

    பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும்: ஜெகதீஷ் ஷெட்டர்

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். #JagadishShettar
    பெங்களூரு :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் நடக்க உள்ள குந்துகோல் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும். குந்துகோல் மட்டுமின்றி சிஞ்சோலி தொகுதியிலும் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.

    கூட்டணி ஆட்சி கவிழும் என்பதற்கு தேவேகவுடா, சித்தராமையா ஆகியோரின் பேச்சே சாட்சி. மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 100 பேர் வந்தாலும் குந்துகோல் தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க முடியாது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததும், அதன் பயன் எங்களுக்கு கிடைக்கும்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார். #JagadishShettar
    Next Story
    ×