search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் ஐதராபாத் பிரியாணி கிடைக்காது- நடிகை குஷ்பு
    X

    பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் ஐதராபாத் பிரியாணி கிடைக்காது- நடிகை குஷ்பு

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் ஐதராபாத் பிரியாணி கிடைக்காது என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். #Kushboo #Congress
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று அவர் ஆதிலாபாத். நகரில் பிரசாரம் செய்தார். அப்போது குஷ்பு பேசியதாவது:-

    தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தால் ஐதராபாத் நகர் பெயரை பாக்யநகர் என்று மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    உலகம் முழுவதும் ஐதராபாத் பிரியாணி பிரசித்தி பெற்றது. பலர் இங்கு வரும்போதெல்லாம் ஐதராபாத் பிரியாணியை விரும்பி சாப்பிடுகிறார்கள். பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டால் ஐதராபாத் பிரியாணி கிடைக்காது. அதற்கு பதில் பாக்மதி பிரியாணிதான் கிடைக்கும். பா.ஜனதாவும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், ரகசிய கூட்டு வைத்து இருக்கிறார்கள்.



    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சிறுபான்மையினருக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் மக்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காது. அதற்கு பதில் பிரியாணி தான் கிடைக்கும். அதுவும் பாக்மதி பிரியாணிதான் கிடைக்கும். மோடி அரசு பா.ஜனதா கட்சியின் சுய விளம்பரத்துக்காக பொதுமக்கள் பணத்தில் ரூ.4,500 கோடி செலவழித்து உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #kushboo
    Next Story
    ×