search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்
    X

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

    இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என முட்டுக்கட்டை போட்டஅம்மாநில முதல்வர் குமாரசாமி, இன்று ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து அறிவித்தார்.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு மாநிலங்களுக்கும் இதற்கான அழைப்பிதல் அனுப்பப்படும் என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×