search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் அரசியல் குழப்பம்: பிரதமர் மோடி தலையிடாததால் மக்கள் பாதிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    X

    டெல்லியில் அரசியல் குழப்பம்: பிரதமர் மோடி தலையிடாததால் மக்கள் பாதிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    டெல்லியில் நடக்கும் அரசியல் குழப்பத்தை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரவும் துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

    இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



    டெல்லி முதல்-மந்திரி, துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார். பா.ஜனதா கட்சியினர், முதல்-மந்திரி வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தியாளர்கள் முன்பு அமர்ந்து பேட்டி கொடுக்கின்றனர்.

    டெல்லியில் நடக்கும் இந்த நாடகங்களை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளார். இந்த அரசியல் குழப்பத்தை, பிரதமர் தலையிட்டு தீர்க்காததால் மக்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi #tamilnews
    Next Story
    ×