search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மம்தா பானர்ஜி இரங்கல்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். #Sterliteprotest #policefiring #MamataBanerjee
    கொல்கத்தா:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் கூறுகையில், நான் பெங்களுரில் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

    துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Sterliteprotest #policefiring #MamataBanerjee
    Next Story
    ×