என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
Byமாலை மலர்27 March 2018 1:06 AM GMT (Updated: 27 March 2018 1:06 AM GMT)
புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
புதுடெல்லி:
புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆளும் காங்கிரஸ் கட்சி, 3 பேரின் நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 3 பேரின் நியமனமும் செல்லும் என அதிரடியாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று முறையிடப்பட்டது.
ஆனால் இந்த முறையீட்டை ஏற்றுக்கொள்ளாத தலைமை நீதிபதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். இதனால் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews
புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆளும் காங்கிரஸ் கட்சி, 3 பேரின் நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 3 பேரின் நியமனமும் செல்லும் என அதிரடியாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று முறையிடப்பட்டது.
ஆனால் இந்த முறையீட்டை ஏற்றுக்கொள்ளாத தலைமை நீதிபதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறினார். இதனால் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X