என் மலர்
இந்தியா
- குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக்.
- இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.
இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், "சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.
இந்தப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா பலமுறை முயன்றபோதும், பாகிஸ்தானின் ஒத்துழைக்கவில்லை.
1965 போரில் இந்திய இராணுவம் லாகூர் வரை சென்றது. இப்போது 2025-ல், கராச்சிக்கு செல்லும் ஒரு வழி இந்த க்ரீக் வழியாகவும் செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து இலக்குகளையும் இந்தியா வெற்றிகரமாக அடைந்ததாகவும், பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.
- அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை.
- இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு ஹரித்வாரில் உள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.
பணம் தர முடியாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.
சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணியளவில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், "என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?" என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் நலமாக உள்ளாதாகவும் அவர் தெரிவித்தார்.
- இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
- புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
- நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் ஆகும். அதே நேரம் கருப்பு காந்தி என அழைக்கப்படும் கர்ம வீரர் காமராஜரின் நினைவு தினமும் ஆகும்.
இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காமராஜரை நினைவு கூர்ந்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், பாரத ரத்னா திரு. கே. காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.
அவரது பணிவு, நேர்மை மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் சமூக நீதி மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகின்றன." என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்து ராகுல் வெளியிட்ட பதிவில், "உண்மை, அகிம்சை மற்றும் நல்லிணக்கக் கொள்கைகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைத்த பாபுவின் கொள்கைகள், வெறுப்பை எதிர்கொண்டு அமைதி, சகோதரத்துவம், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்." என்று குறிப்பிட்டுளார்.
மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட பதவில், "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற முழக்கத்துடன் நாட்டிற்கு புதிய திசையை வழங்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.
அவரது எளிமை, பணிவு மற்றும் நமது நாட்டு மக்களின் உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எப்போதும் நம்மை வழிநடத்தும்." என்று தெரிவித்துள்ளார்.
- அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது.
- கார்கே உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன்.
பெங்களூரு:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) கடந்த 2022-ம் ஆண்டு முதல் அகிய இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் இந்தியா கூட்டணியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயது முதிர்வு காரணமாக கால் வலி, இருதய பிரச்சனைகள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இருதய துடிப்பு சீரான நிலையில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேஸ்மேக்கர் பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்த பேஸ்மேக்கர் இருதயத் துடிப்பின் வேகத்தையும், சீரையும் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு சிறிய, பொருத்தக்கூடிய மருத்துவக் கருவியாகும். குறிப்பாக இருதயத்தைத் தொடர்ந்து துடிக்க வைப்பதே இதன் முக்கிய பணியாகும்.
அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அவரது மகனும், கர்நாடக மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே கூறுகையில், பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. எல்லாம் சரியாக உள்ளது. நலமாக இருக்கிறார். மக்கள் கவலைப்பட தேவையில்லை. மக்களின் ஆசீர்வாதங்களால் அவருக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்கள் அக்கறை மற்றும் வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி, என்று எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கேவை, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அதுபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மந்திரிகள், இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கார்கே உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கார்கே அவர்களிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன். அவரது தொடர்ச்சியான நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது.
- இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர் நகர் ஜில்லா பரிஷத் பள்ளி, உலகளாவிய கல்வி அமைப்பான T4 கல்வியால் நிறுவப்பட்ட மதிப்புமிக்க உலகின் சிறந்த பள்ளி பரிசுகள் 2025-ல் சமூக தேர்வு விருதைப் பெற்றுள்ளது. இந்த பள்ளி பட்டியலிடப்பட்ட 50 பள்ளிகளை தாண்டி இந்த விருதை பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் மூடப்படும் நிலையில் இருந்த இந்த பள்ளி அதன் புதுமை, சமூக தாக்கம் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற நடைமுறைகளுக்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது ஒரு எடுத்துக்காட்டாகி உள்ளது. இந்த ஆண்டு T4 கல்வியால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து ஒரே அரசு மராத்தி-நடுத்தர பள்ளி இதுவாகும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது. மாநில விதிமுறைகளின்படி, 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பொதுவாக மூடப்படுகின்றன.
இருப்பினும், உள்ளூர் சமூகத்தின் கூட்டு மற்றும் தொலைநோக்கு முயற்சிகள் மூலம், தப்பிப்பிழைத்தது மட்டுமல்லாமல் செழித்து வளர்ந்தது. இன்று இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
விருது பெற்ற இந்த பள்ளியை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பாராட்டி உள்ளார். இந்த சாதனை மகாராஷ்டிராவிற்கு பெருமையான தருணம். மேலும், ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளி ஏற்றுக்கொண்ட 'மாணவர்கள்-கற்பித்தல்-மாணவர்கள்' மாதிரி புரட்சிகரமானது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து பள்ளியின் முதல்வர் தத்தாத்ரே வேர் கூறுகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் பள்ளி அங்கீகாரம் பெற்றது. அவர்கள் புதிய உயரங்களை அடைய எங்களுக்கு உதவினர். எந்தவொரு சமூகத் திட்டமும் வெற்றிபெற, நம்பிக்கை முக்கியமானது. மேலும் நேர்மையான, தன்னலமற்ற வேலையிலிருந்து மட்டுமே நம்பிக்கை வருகிறது என்று அவர் கூறினார்.
- வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
- திருப்பதியில் நேற்று 72,247 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என 2 வேலையும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை கடந்த மாதம் 26-ந்தேதி நடந்தது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ரத உற்சவத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு தங்க குதிரை வாகன சேவை நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று காலை மேள வாத்தியங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் கோவில் அருகே உள்ள புஷ்கரணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.
திருப்பதியில் நேற்று 72,247 பேர் தரிசனம் செய்தனர். 26,738 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 2.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
- தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது.
- தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.
புதுடெல்லி :
நாடு முழுவதும் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது. தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.
எனது சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- உத்தர பிரதேசத்தில் யானை ஒன்றை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- யானை திருடு போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஞ்சி:
சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.
பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
- நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி
தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு:
கடந்த 2023-ல் நம் நாட்டில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் 27,675 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 19,803 நிதி மோசடி வழக்குகளில் மகாஷ்டிரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2023-ல் பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை 6,476 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 484 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. தெலுங்கானாவின் ஐதராபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகியவை பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த 2023-ல் சைபர் குற்றங்கள் அதிகம் பதிவான நகரமாக கர்நாடகாவின் பெங்களூரு உள்ளது. இங்கு மட்டும் 17,631 வழக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத் 4,855 வழக்குகளுடன் இரண்டாமிடத்திலும், மும்பை 4,131 வழக்குடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
- குஜராத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் சார்பில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
- இதில் பங்கேற்ற பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின் அவர்களிடையே பேசுகையில், இது புவியியல் அமைப்பு என்பது மட்டுமில்லாமல், உணர்வுபூர்வத்துடனான பூமி மற்றும் தைரியத்திற்கான பல தொடர் நிகழ்வுகளை கொண்டது. 1971-ம் ஆண்டு போரோ அல்லது 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரோ நம்முடைய வீரர்களின் துணிச்சலை இந்த கச் நகரின் எல்லைகள் கண்டன என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு ராணுவ வீரர்கள் நடத்திய இரவு விருந்திலும் கலந்துகொண்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உணவு சாப்பிட்டார்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடுகிறார்.






