என் மலர்
இந்தியா
- 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங் பேசினார்.
- மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டது.
கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பாகிஸ்தான் விமானங்களை இந்தியா தரப்பும், இந்திய விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பும் கூறி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங்,
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை தனது நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்தது மட்டுமல்லாமல், மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டதாகவும் கூறினார்.
விமானப்படை தனது நோக்கங்களை அடைந்தவுடன் உடனடியாக நடவடிக்கைகளை நிறுத்தியது, இது சர்வதேச அளவில் இந்தியாவின் பொறுப்பான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார்.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் போது இதற்கு நேர் மாறாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என்றார்.
- உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைவரான உதித்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் மோடி நவீன ராவணனின் சின்னமாகத் திகழ்கிறார். ஒவ்வொரு தசராவின் போதும் ராவணின் உருவ பொம்மை எரிக்கப்படும்.
ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உதித் ராஜ் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட அறிக்கையில், இதுதான் காங்கிரசின் உண்மை முகம். பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பது அவர்களின் வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகி விட்டது என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
- மான்செஸ்டரில் யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
- இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத வழிபாட்டுத் தலத்தின் மீது நேற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டம் மீது காரை மோதி, அதன்பின் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
இந்தக் கொடூரமான தாக்குதல் பயங்கரவாதத்தின் தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் கடுமையாக நினைவூட்டுகிறது.
சர்வதேச அகிம்சை தினத்தில் இந்த தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, அதைத் தோற்கடிக்க உலக சமூகம் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மான்செஸ்டர் நகர மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து.
- இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளது முதற்கு கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளது.
மேலும், பொது மக்கள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், நியமிக்கப்பட்ட கிராஸிங்கை பயன்படுத்தவும், தண்டவாளங்களில் நடப்பதைத் தவிர்க்கவும் என்ஆர்எப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
- பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன.
லடாக்கில் தனி மாநில அந்தஸ்து, 6வது அட்டவணையில் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவருக்கு ஆதரவாக தலைநகர் லேவில் கடந்த செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட வாங்சுக் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் இந்த வன்முறையை தூண்டியதாக செப்டம்பர் 26 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு ராஜஸ்தானின் ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது கணவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது கணவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரமாகியும், அவரது உடல்நலம், நிலை மற்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று அங்கமோ தெரிவித்தார்.
முன்னதாக சோனம் வாங்சுக்கின் விடுதலைக்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உடனடி தலையீட்டை ஆங்மோ கோரினார்.
லே போலீசார் சோனம் வாங்சுக்கின் பாகிஸ்தான் சென்றதை குறிப்பிட்டு, அவருக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியது குறித்து விளக்கம் அளித்த அங்மோ, பிப்ரவரியில், பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. அதில் சோனம் பங்கேற்றார். அதில் எந்தத் தவறும் இல்லை, அங்குகூட அவர் மேடையில் பிரதமர் மோடியின் 'மிஷன் லைஃப்' திட்டத்தை பாராட்டினார்" என்று தெரிவித்தார்.
தனது கணவர் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறிய ஆங்மோ, "குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம், ஆனால் சோனமை அவதூறு செய்யவும், ஆறாவது அட்டவணை இயக்கத்தை பலவீனப்படுத்தவும் ஒரு இருட்டடிப்பு வேலை நடக்கிறது என்று தெரிவித்தார்.
- சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83 வயது) சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வார தொடக்கத்தில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.
இந்நிலையில் கார்கேவுக்கு நேற்றுமேற்கொள்ளப்பட்ட பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
- சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.
- அந்த சிறுவன் அம்மா, பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தை சேர்ந்தவர் குர்பஜன்கவுர். இவரது கணவர் தொடக்க கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.
இதனால் குர்பஜன்கவுர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்ஜீத்கவுர் தனது மாமியார் குர்பஜன்கவுரை கொடூரமாக தாக்கியுள்ளார். மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாக அவர் தாக்கி உள்ளார்.
இதை ஹர்ஜீத்கவுரின் மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே அந்த சிறுவன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.
ஆனால் ஹர்ஜீத்கவுர் கேட்காமல் தொடர்ந்து மாமியாரை தாக்குகிறார். இதனால் வேதனையடைந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்குவதை செல்போனில் வீடியோ எடுத்த அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சம்பந்தபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
- 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
புதுடெல்லி:
காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொள்கின்றன.
வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- டிராக்டர் ஏரியை அடைந்தபோது சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது.
- இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.
இந்தூர்:
விஜயதசமியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகளை முடித்து ஆங்காங்கே நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் பந்தனா பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றனர்.
டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இதில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். உள்ளூரைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் இந்தப் பணிகளில் களமிறக்கப்பட்டனர்.
அவர்கள் சுமார் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர். ஆனால் 11 பேர் ஏரிக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்புக் குழுவினர் நீரில் இருந்து வெளியே எடுத்து வந்தனர்.
மேலும் யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா என தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
- பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சென்று சந்தித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.
எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
- தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பராமரிப்பை ASI மட்டுமே கையாண்டு வருகிறது.
- தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியச் சின்னங்களைப் பராமரிக்கும் பொறுப்பில் ASI-ன் ஏகபோக உரிமை இந்தத் திட்டத்தின் மூலம் மாறும்.
இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், கோட்டைகள் மற்றும் பாரம்பரிய இடங்களைப் பராமரிக்கும் பணிகளில் தனியார், கார்ப்பரேட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அனுமதிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள சுமார் 3,700 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பராமரிப்பை ASI மட்டுமே கையாண்டு வருகிறது. இதனால் பல திட்டங்கள் தாமதமாவதால் பொது-தனியார் பங்கேற்பு மூலம் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.
எனவே இந்த திட்டத்தின்படி பதிவு செய்த தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் இனி நேரடியாகப் பபாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.
தனியார் பங்களிப்பு இருந்தாலும், அனைத்துப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளும் ASI-ன் முழுமையான மேற்பார்வையின்கீழ் மட்டுமே நடக்கும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தொல்லியல் துறையில் அனுபவம் வாய்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலின்படி, தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளலாம்.
தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியச் சின்னங்களைப் பராமரிக்கும் பொறுப்பில் ASI-ன் ஏகபோக உரிமை இந்தத் திட்டத்தின் மூலம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக்.
- இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.
இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், "சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.
இந்தப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா பலமுறை முயன்றபோதும், பாகிஸ்தானின் ஒத்துழைக்கவில்லை.
1965 போரில் இந்திய இராணுவம் லாகூர் வரை சென்றது. இப்போது 2025-ல், கராச்சிக்கு செல்லும் ஒரு வழி இந்த க்ரீக் வழியாகவும் செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து இலக்குகளையும் இந்தியா வெற்றிகரமாக அடைந்ததாகவும், பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.






