search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Home Minister"

    • குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட்வர் அமித் ஷா
    • பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்தார், அமித் ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநில தலைநகர் காந்தி நகர் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காந்தி நகர் சென்ற அமித் ஷா, அம்மாநில பா.ஜ.க. தொண்டர்களுடன் "மகர சங்கராந்தி" பண்டிகையை கொண்டாடி வந்தார். மேலும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் அங்கு கலந்து கொள்ள இருந்தார்.

    இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜேஸ்வரி பென் ஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இச்செய்தியை தொடர்ந்து, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த அமித் ஷா, மும்பை சென்றார்.

    சுமார் 60 வயதான ராஜேஸ்வரி பென் ஷா, கடந்த சில நாட்களாக உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி சடங்கு தல்தேஜ் மயானத்தில் நடைபெற்றது.

    • தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    • வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இன்று இரவு சென்னைக்கு புறப்படுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது. எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது.

    வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

    தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர் சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார்.

    வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    • ஜம்முவில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை அமித்ஷா ஆய்வு செய்தார்.
    • ஒவ்வொரு பிரிவினருக்கும் திட்டங்கள் சென்று சேர்வதை கண்காணிக்க அறிவுறுத்தல்.

    ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் சமந்த் குமார் கோயல், மத்திய ரிசர்வ் இயக்குனர் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜம்முவில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமித்ஷா ஆய்வு செய்தார். 


    காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க அப்போது அவர் வலியறுத்தினார். பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சியின் பலன்களை உறுதி செய்தல், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் திட்டங்கள் சென்று சேர்வதை கண்காணிப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

    மேலும் இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை தகர்க்க வேண்டும் என்றார். பயங்கரவாத சூழல் அமைப்பை அழிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரிவினைவாத பிரச்சாரத்திற்கு உதவி, ஊக்கம், ஆதரவு கூறுகளை களைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    • சர்தார் படேலை அவமதிக்க முடிந்த அனைத்தையும் காங்கிரஸ் செய்தது.
    • காங்கிரஸ் காலம் முடிந்து, பிரதமர் மோடியின் காலம் தொடங்கி விட்டது.

    காம்பத்:

    குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கிறது. இது போன்ற காரணங்களை ஆதரித்தால், அந்த வாக்குகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

    நான் எந்த வாக்குகளைப் பற்றி பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்களின் காலம் இப்போது முடிந்துவிட்டது, பிரதமர் மோடியின் காலம் தொடங்கி விட்டது. ராகுல்காந்தி அயோத்தி செல்ல டிக்கெட்டை பதிவு செய்யுங்கள். ஏனென்றால் அங்கு பிரம்மாண்ட கோயில் திறக்கப்பட உள்ளது

    என்னுடைய சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் சர்தார் வல்லபபாய் படேலைப் பற்றிப் பேசிக் கேட்டதில்லை. படேலை அவமதிக்க முடிந்த அனைத்தையும் காங்கிரஸ் செய்தது. நாட்டின் முதல் துணைப் பிரதமரின் இறுதிச் சடங்குகள் கூட சம்பிரதாயமற்ற முறையில் நடைபெற்றன.

    அவருக்கு எந்த நினைவுச் சின்னமும் கட்டப்படவில்லை. ஆனால் குஜராத் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் இப்போது படேலைப் புகழ்ந்து பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தேசத்தின் வளர்ச்சிக்கு உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது.
    • அனைத்து நிலைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பால் நாடு முன்னேறும்.

    சூரஜ்கண்ட்:

    அரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கிய மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் சிந்தனை அமர்வு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளதாவது:

    இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை ஒரு காலத்தில் வன்முறை மற்றும் அமைதியற்ற இடங்களாக இருந்தன. தற்போது அவை வளர்ச்சியின் இடங்களாக மாறியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது.

    பெரும்பாலான இடங்கள், தேசவிரோத செயல்களிலிருந்து விடுபட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும்தான் இதற்குக் காரணம். தேசத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் நல்ல நிர்வாகத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது. அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. 


    தேசத்தை கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம பொறுப்பு இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும் போதுதான் நாடு முன்னேற்றம் அடையும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி உணர்வு நம்மை இயக்கும் சக்தியாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாநில முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் இந்த மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்.

    • சர்வதேச நெட்வொர்ட் வழக்குகளை மாநிலங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்.
    • கடந்த எட்டு ஆண்டுகளில், ரூ.20,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.

    காந்திநகர்:

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் மேற்கு பிராந்திய மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்டார். ​​கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் கோவா அரசுகள் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும். நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து ஹெராயின் கடத்தல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டில் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு மத்திய அமைப்புகளும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். போதையில்லா இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நாம் நனவாக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம் 75 நாட்களில் குறைந்தது 75,000 கிலோ போதைப்பொருட்களை அழிப்பதாக உறுதியளித்தது.

    ஆனால், நாங்கள் ஏற்கனவே 1,65,000 கிலோ போதைப்பொருட்களை காலக்கெடுவிற்கு முன்பே அழித்துவிட்டோம். நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் அழிக்கப்பட்டது ஒரு சாதனை.

    சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்குகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மாநிலங்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் அல்லது தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காந்திநகரில் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், குஜராத் மற்றும் டெல்லியில் இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 12,500 கிலோ போதைப்பொருள் அழிக்கப்பட்டது. மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மாநில முதலமைச்சர்கள் இதன் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டனர்.

    • இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது.
    • கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்காது

    போபால்:

    நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற் கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். 

    அப்போது பேசிய அவர், இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது என்றார். இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இனி, கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    • சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது இந்திய சிறைப்பணிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நாடு முழுவதும் ஒரு பொதுவான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் சிறை நிர்வாகமும் ஒரு முக்கிய அங்கம், அதை நாம் புறக்கணிக்க முடியாது. 


    சிறைச்சாலைகளை சமூகம் பார்க்கும் விதத்திலும் மாற்றம் தேவை. தண்டனை இல்லை என்றால் பயம் இருக்காது, பயம் இல்லை என்றால் ஒழுக்கம் இருக்காது, ஒழுக்கம் இல்லையென்றால் ஆரோக்கியமான சமுதாயத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.

    கைதிகள் விடுதலைக்கு பிறகு சமூகத்திற்கு அவர்களை சிறந்த மனிதர்களாக தர வேண்டியது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகும். மத்திய அரசு மாதிரி சிறைச் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது பிரிட்டிஷ் காலத்தில் இருந்து தொடரும் சட்டத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

    மாநிலங்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள், அனைத்து சிறைகளையும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக மாற்றும் வகையில் மாதிரி சிறைச் சட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு மாவட்ட சிறைகளையும் நீதிமன்றங்களுடன் இணைக்கும் வகையில் காணொலி வசதியை மாநிலங்கள் வழங்க வேண்டும்.

    தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற கைதிகளை தனித்தனியாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை செயலாளர் உள்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு குற்றங்கள் குறித்த தரவுத் தளத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
    • போதைப்பொருள் கடத்தல் கும்பலை அடிவேர் வரை முற்றிலுமாக அகற்றுவது முக்கியம்.

    தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் குறித்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பேசியதாவது:

    தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடி பதவியேற்றது முதல் உள்நாட்டுப் பாதுகாப்பு மட்டுமல்ல, அனைத்துத் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளுடனான நமது எல்லைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மக்கள் தொகை மாற்றங்கள் நடைபெறுகின்றன. அது குறித்த தகவல்களைச் சேகரிப்பது மாநில காவல்துறை தலைவா்களின் பொறுப்பு.


    ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதில் மத்திய அரசு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. போதை பொருள் சரக்கைப் பிடிப்பது மட்டும் போதாது, போதைப்பொருள் கடத்தல் கும்பலை அடிவேர் வரை முற்றிலுமாக அகற்றுவது மிகவும் முக்கியம்.

    பல்வேறு வகையான குற்றங்கள் குறித்த தரவுத்தளத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அறிவியல் அணுகுமுறையுடன், பணிகள் நடைபெறுகின்றன. பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், தொழில் நுட்பத்துடன், மனித நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குற்ற வழக்குகளில் தடயவியல் விசாரணையை கட்டாயமாக்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுகிறது.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்லூரியை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும்.

    கெவாடியா:

    குஜராத் மாநிலம் கெவாடியாவில்  மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு உள்துறை மந்திரி அமித் ஷா தலைமை தாங்கினார்.

    தடய அறிவியல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல்பூர்வ புலனாய்வு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

    குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை கையாளும் இத்தருணத்தில் அவர்களுக்கு ஒருபடி மேலாக புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டும். குற்றங்களை கண்டறிய தொழில்நுட்பம் மற்றும் ஆதாரம் அடிப்படையிலான புலனாய்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

    ஆறு ஆண்டுகளுக்கும் கூடுதலான சிறைத்தண்டனையுடன் கூடிய அனைத்து குற்ற வழக்குகளிலும் தடயவியல் விசாரணையை கட்டாயமாக்கும் நோக்கில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தடய அறிவியல் துறையில் பயிற்சி அளிப்பதற்காக தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்லூரியை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    மத்திய உள்துறை மந்திரியும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #RajnathSingh #Rajnathfilesnomination #LucknowLSseat
    லக்னோ:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக 31-12-2005 முதல் 19-12-2009 வரை பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் 2000-ம் ஆண்டில் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

    பின்னர், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மந்திரிசபையில் 2003-ம் ஆண்டில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் துறை மந்திரியாக பதவியேற்றார். பின்னர், 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

    அதன் பிறகு 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள காசியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2014 பாராளுமன்ற தேர்தலில் ராஜ்நாத் சிங் இதே மாநிலத்தின் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரீட்டா பகுகுனா ஜோஷியை விட சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் உள்துறை மந்திரியாக பதவி வகிக்கும் அவர் இந்த தேர்தலிலும் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.



    இந்நிலையில், இன்று காலை பாஜக தொண்டர்களுடன் பேரணியாக சென்று லக்னோ மாவட்ட கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.

    80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் நேருக்குநேர் மோதுகின்றன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    அனைத்து கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    பிரபல பாலிவுட் நடிகரும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா லக்னோ தொகுதியில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என முன்னர் சில தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம். #RajnathSingh #Rajnathfiles #Rajnathfilesnomination #LucknowLSseat
    தென்மண்டல முதல்-மந்திரிகள் மாநாட்டில் சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வழங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. #UnionHomeMinister #ZonalCouncilMeeting
    பெங்களூரு:

    மத்திய உள்துறை சார்பில் 28-வது தென்மண்டல முதல்-மந்திரிகள் குழு மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர், ஆந்திரா, கேரள நிதி மந்்திரிகள், அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பிறகு மத்திய அரசின் உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மண்டல முதல்-மந்திரிகள் மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மீனவர்கள் பாதுகாப்பு உள்பட 27 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை வழங்குதல் உள்பட 22 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் மீனவர்கள் பாதுகாப்பு, தீபகற்ப சுற்றுலா ரெயில்களை அறிமுகம் செய்வது, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் ஒரே சீராக நிதி ஒதுக்குவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வது உள்பட பல்வேறு முடிவுகள் அமல்படுத்தப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மீன்பிடி உரிமை தொடர்பாக பழவேற்காடு ஏரி விவகாரத்தில் ஆந்திரா-தமிழ்நாடு இடையே இருக்கும் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தல், மீன் வளர்ப்புகளுக்கு உயிர்கொல்லி மருந்துகள் வினியோகம் செய்தல், இறால் ஏற்றுமதி, மாநில போலீஸ் துறைகளை நவீனப்படுத்த தேவையான திட்டத்தை அமல்படுத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    தென்மண்டல முதல்-மந்திரிகள் குழுவின் அடுத்த மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவது என்று தீர்மானிக் கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இந்த மாநாட்டில் தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போது கூறியதாவது:-

    தமிழக மீனவர்கள் சில நேரங்களில் மற்ற மாநில மீன்பிடி பகுதிக்குள் நுழையும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற நேரங்களில் அவர்கள் மீது, கடலில் மீன் பிடித்தல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக, கிரிமினல் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்கின்றனர். இது தேவையற்ற ஒன்று.

    தமிழகத்தில் அனல் மின்சார உற்பத்திதான் மிக முக்கிய அடிப்படையாக உள்ளது. எனவே தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி கிடைப்பதை மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் உறுதி செய்யவேண்டும். இதை தமிழகத்துக்குக் கொண்டு சேர்ப்பதில் மத்திய ரெயில்வே துறை அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும்.

    மலைவாழ் மக்களை தேக்குமரக் கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து விலக்குவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஜவ்வாதுமலை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள், கல்வி, சந்தன மர மீட்டுறுவாக்கும் பணி மற்றும் சுற்றுலாவில் நிரந்தர வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி பாக்கித் தொகையை மத்திய அரசு உடனடியாக தரவேண்டும்.

    தமிழகத்தில் கேரளா, கர்நாடகா எல்லையையொட்டிய பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடு பெருமளவில் ஒடுக்கப்பட்டு உள்ளது.

    பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான கல்வி உதவித்தொகையில் மத்திய அரசு தரவேண்டிய ரூ.1,224 கோடியை உடனடியாக வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    ×