என் மலர்
தேர்தல் செய்திகள்
புரட்சியின் விளிம்பில் உள்ள நாம் அதனை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #KamalHaasan
திருப்பரங்குன்றம்:
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று அவர் பிரசாரம் செய்தார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்து பேசினார்.
இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை போன்றவற்றை கூட செய்து தரவில்லை. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கூட சாக்கடை வசதிகள் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் தற்போது எந்த வசதியும் செய்யப்படாத நிலை உள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தேர்தல் செலவு என்பது நமது வியர்வையும் ரத்தமும்தான். அதில் எனது ரத்தமும் கலந்து இருக்கும். பிரதமர் நமது லட்சியம் அல்ல. தமிழகமே நமது லட்சியம். என் இலக்கு, குறி தமிழகம்தான்.
பல ஆண்டுகளாக தமிழகத்தின் குரல் தலை நகரில் ஒலிக்கவில்லை. அந்தக்குரல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. தமிழனின் குரல் தலைநகரில் கேட்க வேண்டும்.

உங்கள் சின்னம் ‘‘டார்ச் லைட்’’ சின்னம் என முடிவு செய்து இவரது வெற்றியை உறுதி செய்யுங்கள். புரட்சியின் விளிம்பில் உள்ளோம். அதனை மனதில் கொண்டு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து எங்கள் வேட்பாளர் பாவை விளக்கு போல் நிற்கமாட்டார். அவரும் பேசுவார் எனக் கூறி வேட்பாளரிடம் பேச அறிவுறுத்தினார். #LokSabhaElections2019 #KamalHaasan
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று அவர் பிரசாரம் செய்தார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்து பேசினார்.
இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை போன்றவற்றை கூட செய்து தரவில்லை. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கூட சாக்கடை வசதிகள் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் தற்போது எந்த வசதியும் செய்யப்படாத நிலை உள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தேர்தல் செலவு என்பது நமது வியர்வையும் ரத்தமும்தான். அதில் எனது ரத்தமும் கலந்து இருக்கும். பிரதமர் நமது லட்சியம் அல்ல. தமிழகமே நமது லட்சியம். என் இலக்கு, குறி தமிழகம்தான்.
பல ஆண்டுகளாக தமிழகத்தின் குரல் தலை நகரில் ஒலிக்கவில்லை. அந்தக்குரல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. தமிழனின் குரல் தலைநகரில் கேட்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து ஏற்கனவே சென்றவர்கள் ஜால்ராக்களாக செயல்பட்டு உள்ளனர். எனவே தான் ஜாதி மதம் பார்க்காமல் நேர்மையான படித்த இளைஞர்களை தேர்வு செய்து உங்கள் முன் நிறுத்தியுள்ளோம். அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு பணி செய்யாவிட்டால் உடனடியாக ராஜினாமா செய்வோம் என உறுதி கூறுகிறேன்.

உங்கள் சின்னம் ‘‘டார்ச் லைட்’’ சின்னம் என முடிவு செய்து இவரது வெற்றியை உறுதி செய்யுங்கள். புரட்சியின் விளிம்பில் உள்ளோம். அதனை மனதில் கொண்டு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து எங்கள் வேட்பாளர் பாவை விளக்கு போல் நிற்கமாட்டார். அவரும் பேசுவார் எனக் கூறி வேட்பாளரிடம் பேச அறிவுறுத்தினார். #LokSabhaElections2019 #KamalHaasan
இந்திய ராணுவம் மோடியின் சேனை என்று பேசியது தொடர்பாக யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #YogiAdityanath #EC
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும் போது, ‘‘காங்கிரசார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் பரிசாக வழங்குகிறார்.
யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது.
இதைத்தொடர்ந்து ஆதித்யநாத் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு காஜியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு பிறகு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #YogiAdityanath #EC
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும் போது, ‘‘காங்கிரசார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் பரிசாக வழங்குகிறார்.
இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது. இதுதான் காங்கிரஸ் அரசுக்கும், பா.ஜனதா அரசுக்கும் உள்ள வேறுபாடு என்றார். இந்திய ராணுவம் மோடியின் சேனை என்று அவர் பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆதித்யநாத் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு காஜியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு பிறகு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #LokSabhaElections2019 #YogiAdityanath #EC
கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் ஆனால் அரசியலில் சாதிக்க முடியாது என்று ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #LokSabhaElections2019 #KamalHassan
ஈரோடு:
ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. பணம் கொடுத்து வெற்றி பெற அரசியல் கட்சியினர் துடிக்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு சாட்சி துரைமுருகன் வீடு-குடோன்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
காங்கிரஸ் கட்சியினர் ‘‘நீட்’’ தேர்வுக்கு விலக்கு அளிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் சட்டப்படி அது நடக்காது. விலக்கு அளிக்கவும் முடியாது பொய்யான வாக்குறுதி ஆகும். எப்படியோ ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது.
கமல்ஹாசனுக்கு மக்கள் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் கிடையாது. அது ஏற்படவும் செய்யாது. கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் அவ்வளவுதான். அவரால் அரசியலில் சாதிக்க முடியாது. அவர் சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறார். ஆனால் கமலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடையாது.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
ஈரோட்டில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. பணம் கொடுத்து வெற்றி பெற அரசியல் கட்சியினர் துடிக்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு சாட்சி துரைமுருகன் வீடு-குடோன்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
காங்கிரஸ் கட்சியினர் ‘‘நீட்’’ தேர்வுக்கு விலக்கு அளிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் சட்டப்படி அது நடக்காது. விலக்கு அளிக்கவும் முடியாது பொய்யான வாக்குறுதி ஆகும். எப்படியோ ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது.
கமல்ஹாசனுக்கு மக்கள் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் கிடையாது. அது ஏற்படவும் செய்யாது. கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர் அவ்வளவுதான். அவரால் அரசியலில் சாதிக்க முடியாது. அவர் சில வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறார். ஆனால் கமலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடையாது.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்தும் போட்டியிடப் போவதாக அதிரடியாக சரிதாநாயர் அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi #Wayanad #SarithaNair
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 2011-ம் ஆண்டு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
அப்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது.
கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் மீது இந்த மோசடி புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கில் தன்னை பலிகடா ஆக்கி விட்டதாகவும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தனக்கு உதவி செய்வதாக கூறி அப்போது முதல் மந்திரியாக இருந்த உம்மன்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ. ஹிபிஈடன் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறினார்.
தொடர்ந்து கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்தது. ஹிபிஈடன் உள்பட மேலும் பலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடன் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சரிதாநாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்த அவர் அந்த தொகுதியில் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்தும் போட்டியிடப் போவதாக அதிரடியாக சரிதாநாயர் அறிவித்துள்ளார். இன்று மனு தாக்கல் செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார்.
ராகுலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவது ஏன்? என்பது பற்றி சரிதா நாயர் கூறியதாவது:-
சோலார் பேனல் மோசடி வழக்கில் என்னை சிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் தலைவர்கள் பற்றியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு பல முறை இ-மெயில் மூலம் புகார் அனுப்பினேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை.
இந்த நிலையில் நான் பாலியல் புகார் கூறிய ஹிபிஈடனுக்கு எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. இதனால் எனது எதிர்ப்பை வெளிப்படுத்த வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட உள்ளேன்.
என்னை மட்டும் குற்றவாளி ஆக்கி விட்டு குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை சமூகத்தில் சுதந்திரமாக நடமாடவிடுவதை ஏற்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கும் போது நானும் நிற்க முடியும் என்பதால் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi #Wayanad #SarithaNair
கேரளாவில் கடந்த 2011-ம் ஆண்டு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
அப்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது.
கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் மீது இந்த மோசடி புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கில் தன்னை பலிகடா ஆக்கி விட்டதாகவும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தனக்கு உதவி செய்வதாக கூறி அப்போது முதல் மந்திரியாக இருந்த உம்மன்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ. ஹிபிஈடன் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறினார்.
தொடர்ந்து கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்தது. ஹிபிஈடன் உள்பட மேலும் பலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடன் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சரிதாநாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எர்ணாகுளம் தொகுதியில் ஹிபிஈடனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்த அவர் அந்த தொகுதியில் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார்.
மேலும் தேர்தல் விதிமுறைப்படி தன்மீது உள்ள வழக்குகள் பற்றியும் அவர் பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தார்.

ராகுலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவது ஏன்? என்பது பற்றி சரிதா நாயர் கூறியதாவது:-
சோலார் பேனல் மோசடி வழக்கில் என்னை சிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் தலைவர்கள் பற்றியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அந்த கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு பல முறை இ-மெயில் மூலம் புகார் அனுப்பினேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை.
இந்த நிலையில் நான் பாலியல் புகார் கூறிய ஹிபிஈடனுக்கு எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. இதனால் எனது எதிர்ப்பை வெளிப்படுத்த வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட உள்ளேன்.
என்னை மட்டும் குற்றவாளி ஆக்கி விட்டு குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை சமூகத்தில் சுதந்திரமாக நடமாடவிடுவதை ஏற்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கும் போது நானும் நிற்க முடியும் என்பதால் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi #Wayanad #SarithaNair
தமிழகத்தில் ஏப்.18-ம் தேதி தேர்தல் நடத்தாமல், வேறு தேதியில் நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. #LokSabhaElections2019 #SC
புதுடெல்லி:
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலை ஒத்தி வைக்க கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
‘பெரிய வியாழன்’ வருவதால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தேர்தலை தள்ளிவைக்க கோரும் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
எப்படி பிரார்த்தனை செய்வது? எப்படி ஓட்டளிப்பது? என்பது பற்றி நாங்கள் அறிவுரை செய்ய விரும்பவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இந்த மனு மீது 8-ந்தேதி விசாரணை நடக்கிறது. #LokSabhaElections2019 #SC
தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலை ஒத்தி வைக்க கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
‘பெரிய வியாழன்’ வருவதால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் 23-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

எப்படி பிரார்த்தனை செய்வது? எப்படி ஓட்டளிப்பது? என்பது பற்றி நாங்கள் அறிவுரை செய்ய விரும்பவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
தமிழகத்தில் தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இந்த மனு மீது 8-ந்தேதி விசாரணை நடக்கிறது. #LokSabhaElections2019 #SC
உதகை அருகே கூடலூரில் பிரசாரத்திற்காக வந்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #ADMKCarAccident
உதகை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பிரசார வாகனத்தில் துணை முதல் மந்திரி ஓ.பன்னீர் செல்வம் பயணிக்கவில்லை. இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ADMKCarAccident
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம் இன்று உதகையில் இருந்து பிரசாரம் மேற்கொள்வதற்காக அவரது வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது நடுவட்டம் பகுதியில் சென்றபோது திடீரென யாரும் எதிர்ப்பாராத விதமாக கட்டுப்பாட்டினை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது.

பிரசார வாகனத்தில் துணை முதல் மந்திரி ஓ.பன்னீர் செல்வம் பயணிக்கவில்லை. இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ADMKCarAccident
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோஷம்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #kamalhaasan
ஆலந்தூர்:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. நான் போகுமிடம் எல்லாம் மக்களின் அன்பில் நீந்த வாய்ப்பு கிடைக்கிறது. அது எனக்கும், மக்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பொறுப்பு கடமையும் அதிகமாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. அதை மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
எங்களுடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தினம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு சிலர் பிரசாரத்தில் இருப்பதால் அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அனுதினமும் அவரிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல செய்திகள் தினமும் கேட்பதால் சாதாரணமாகி விட்டது. இது சாதாரணமான செய்தி கிடையாது.
இப்படிப்பட்ட செய்திகளை பார்த்து விட்டு எங்கள் கட்சியினர் கூட நாமும் இப்படி செலவு செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு கனிவாக சொல்லுகிறேன் இதைச் செய்யக்கூடாது.
அதற்குதான் நாம் வந்திருக்கிறோம். அப்படி என் கட்சியினர் யாராவது செய்தால் அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டி கொடுப்பேன் என்று மிரட்ட வேண்டியதாயிருக்கிறது.
பொதுவாக நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அண்ணனைப் பார்த்து தம்பி கற்றுக் கொள்வது தான் நம் குடும்பங்களில் உள்ள வழக்கம் .இது ஒரு தொற்று ஆகிவிட்டது. இந்த தொற்றை பரவாமல் நாம் தடுக்க வேண்டும். எங்கள் கட்சியில் யாராவது ஆசைகாட்டி, போனால் கூட அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.
திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. திராவிடம் என்பது ஒரு இனம். நான் திராவிடன், நாம் எல்லோரும் திராவிடர்கள். இந்த இரு கட்சிகள் தங்களுக்கு என்று பகிர்ந்து எடுத்துக்கொண்ட விஷயம் திராவிடம் அல்ல, எல்லோருக்கும் சொந்தமான விஷயம்தான் திராவிடம். அப்படி தான் திராவிட கட்சிகளில் உள்ள நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும், யார் செய்திருந்தாலும் அதை மீண்டும் மேம்படுத்தி மக்களுக்கு தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும்.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளில் தான் தேர்தல் ஆணையம், பறக்கும் படை, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல் படக்கூடாது.
சேஷன் மாதிரி இருந்தவர்கள் இயக்கிய தேர்தல் கமிஷன், இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறையை ஏவல் துறையாக மாற்ற முடியும் ஏனென்றால் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் மாறாமல் இருக்க முடியும் என்று எப்படி சொல்வது.

வேலூரில் திமுக பிரமுகர் குடோனில் பதுக்கி வைத்திருந்த பணத்தை குறித்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த இடத்திலாவது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பரிந்துரைக்கிறது, வேண்டுகோள் வைக்கிறது.
இங்கே இப்படிப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இதைவிட அதிகமாக மற்ற எதிர்க்கட்சிகள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இது சரியான பதில் கிடையாது. அழுக்கு அழுக்கு தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. நான் போகுமிடம் எல்லாம் மக்களின் அன்பில் நீந்த வாய்ப்பு கிடைக்கிறது. அது எனக்கும், மக்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பொறுப்பு கடமையும் அதிகமாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. அதை மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
எங்களுடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தினம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு சிலர் பிரசாரத்தில் இருப்பதால் அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அனுதினமும் அவரிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல செய்திகள் தினமும் கேட்பதால் சாதாரணமாகி விட்டது. இது சாதாரணமான செய்தி கிடையாது.
இப்படிப்பட்ட செய்திகளை பார்த்து விட்டு எங்கள் கட்சியினர் கூட நாமும் இப்படி செலவு செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு கனிவாக சொல்லுகிறேன் இதைச் செய்யக்கூடாது.
அதற்குதான் நாம் வந்திருக்கிறோம். அப்படி என் கட்சியினர் யாராவது செய்தால் அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டி கொடுப்பேன் என்று மிரட்ட வேண்டியதாயிருக்கிறது.
பொதுவாக நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அண்ணனைப் பார்த்து தம்பி கற்றுக் கொள்வது தான் நம் குடும்பங்களில் உள்ள வழக்கம் .இது ஒரு தொற்று ஆகிவிட்டது. இந்த தொற்றை பரவாமல் நாம் தடுக்க வேண்டும். எங்கள் கட்சியில் யாராவது ஆசைகாட்டி, போனால் கூட அவர்களை கட்சியிலிருந்து நீக்குவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்.
திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. திராவிடம் என்பது ஒரு இனம். நான் திராவிடன், நாம் எல்லோரும் திராவிடர்கள். இந்த இரு கட்சிகள் தங்களுக்கு என்று பகிர்ந்து எடுத்துக்கொண்ட விஷயம் திராவிடம் அல்ல, எல்லோருக்கும் சொந்தமான விஷயம்தான் திராவிடம். அப்படி தான் திராவிட கட்சிகளில் உள்ள நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும், யார் செய்திருந்தாலும் அதை மீண்டும் மேம்படுத்தி மக்களுக்கு தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும்.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளில் தான் தேர்தல் ஆணையம், பறக்கும் படை, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல் படக்கூடாது.
சேஷன் மாதிரி இருந்தவர்கள் இயக்கிய தேர்தல் கமிஷன், இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறையை ஏவல் துறையாக மாற்ற முடியும் ஏனென்றால் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் மாறாமல் இருக்க முடியும் என்று எப்படி சொல்வது.
ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார். எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோஷம்தான்.

கோப்புப்படம்
வேலூரில் திமுக பிரமுகர் குடோனில் பதுக்கி வைத்திருந்த பணத்தை குறித்து அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த இடத்திலாவது தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பரிந்துரைக்கிறது, வேண்டுகோள் வைக்கிறது.
இங்கே இப்படிப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இதைவிட அதிகமாக மற்ற எதிர்க்கட்சிகள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இது சரியான பதில் கிடையாது. அழுக்கு அழுக்கு தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan
வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். #Congress #RahulGandhi #Wayanad
வயநாடு:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்காவுடன் நேற்றே கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.

ராகுல்காந்தியின் வருகையால் கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை பார்ப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வயநாட்டில் குவிந்திருந்தனர். அவர்கள் ராகுல் காந்தியுடன் வாகன பேரணியில் பங்கேற்றனர். ராகுல், பிரியங்கா வருகையை முன்னிட்டு வயநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெல்லப்பள்ளி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பி.பி.சுனீர் களமிறங்கி உள்ளார். #Congress #RahulGandhi #Wayanad
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்காவுடன் நேற்றே கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.
இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடுக்கு வந்தார் ராகுல். வேட்டி, சட்டை அணிந்து வந்த ராகுலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தில் பிரியங்கா மற்றும் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். ஊர்வலம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தை அடைந்ததும், ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ராகுல்காந்தியின் வருகையால் கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை பார்ப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வயநாட்டில் குவிந்திருந்தனர். அவர்கள் ராகுல் காந்தியுடன் வாகன பேரணியில் பங்கேற்றனர். ராகுல், பிரியங்கா வருகையை முன்னிட்டு வயநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெல்லப்பள்ளி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பி.பி.சுனீர் களமிறங்கி உள்ளார். #Congress #RahulGandhi #Wayanad
ரூ.2 கோடி பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக திருச்சியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு கட்டுக்கட்டாக ரூ.5 கோடி பணம் காரில் கடத்தப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வந்த அந்த காரை நிறுத்தி சோதனை போட்டனர்.
அப்போது கார் கதவுகளின் உள்பகுதியிலும், கார் சீட்டின் இருக்கையிலும் ரூ.2.10 கோடி பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அதை கொண்டு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருச்சி தங்கதுரை, பிரபாகரன், திண்டுக்கல் தங்கம், சென்னை கே.கே.நகர் கார் டிரைவர் லாரன்ஸ் கிளைவ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரூ.2 கோடி பணத்திற்கான ஆவணங்கள் அந்த அலுவலகத்தில் உள்ளதா? அந்த நிறுவனம் வருமானம் எதன் மூலம் ஈட்டுகிறது. முறையாக வருமான வரி தாக்கல் செய்துள்ளார்களா? என நேற்று திருச்சி வருமான வரித்துறை உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மன்னார்புரத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சென்று காலை 10 மணி முதல் சோதனை செய்தனர்.
அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், ரசீதுகள், வருவாய் செலவு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தில் வேறு எங்காவது பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை நடத்தினர். அனைத்து அறைகள், கழிவறைகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், குடோன் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இரவு நீண்ட நேரமாகியும் சோதனை முடியாததால் இரவு அந்த நிறுவனத்திலேயே தங்கிய அதிகாரிகள் இன்று காலை மீண்டும் சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். 2-வது நாளாக சோதனை நடத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.2 கோடி பணம் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து ரூ.2 கோடி பணம் யார் மூலம் எப்படி கடத்தி கொண்டு செல்லப்பட்டது என்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக நிறுவன தொழிலதிபர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். #LokSabhaElections2019 #ITRaids
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு கட்டுக்கட்டாக ரூ.5 கோடி பணம் காரில் கடத்தப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வந்த அந்த காரை நிறுத்தி சோதனை போட்டனர்.
அப்போது கார் கதவுகளின் உள்பகுதியிலும், கார் சீட்டின் இருக்கையிலும் ரூ.2.10 கோடி பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அதை கொண்டு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருச்சி தங்கதுரை, பிரபாகரன், திண்டுக்கல் தங்கம், சென்னை கே.கே.நகர் கார் டிரைவர் லாரன்ஸ் கிளைவ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சி மன்னார்புரத்தில் எல்பின் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர்களும், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்களுமான ராஜா, ரமேஷ் குமார் ஆகியோர் மூலம் இந்த பணம் திருச்சியில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், ரசீதுகள், வருவாய் செலவு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தில் வேறு எங்காவது பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை நடத்தினர். அனைத்து அறைகள், கழிவறைகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், குடோன் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இரவு நீண்ட நேரமாகியும் சோதனை முடியாததால் இரவு அந்த நிறுவனத்திலேயே தங்கிய அதிகாரிகள் இன்று காலை மீண்டும் சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். 2-வது நாளாக சோதனை நடத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.2 கோடி பணம் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து ரூ.2 கோடி பணம் யார் மூலம் எப்படி கடத்தி கொண்டு செல்லப்பட்டது என்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக நிறுவன தொழிலதிபர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். #LokSabhaElections2019 #ITRaids
சேலம் அருகே இன்று காலை தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections #GoldSeized
சேலம்:
சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்த தங்கத்திற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வேனில் இருந்தவர்களிடம் கேட்டனர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கத்தை ஆய்வு செய்து, வேனில் வந்தவர்களிடம் எங்கிருந்து தங்கத்தை எடுத்து வருகிறீர்கள்?, உரிய வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 27-ந்தேதி காலை ஆத்தூர் பிரிவு ரோடு கூட்ரோட்டில் 7 கிலோ தங்க நகைகள், 28-ந்தேதி காலை கொண்டலாம்பட்டியில் 73 கிலோ தங்கம் வாகன சோதனையின் போது பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections #GoldSeized
சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலத்தை நோக்கி வேன் வந்தது. இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 100 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கத்தை ஆய்வு செய்து, வேனில் வந்தவர்களிடம் எங்கிருந்து தங்கத்தை எடுத்து வருகிறீர்கள்?, உரிய வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த 27-ந்தேதி காலை ஆத்தூர் பிரிவு ரோடு கூட்ரோட்டில் 7 கிலோ தங்க நகைகள், 28-ந்தேதி காலை கொண்டலாம்பட்டியில் 73 கிலோ தங்கம் வாகன சோதனையின் போது பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections #GoldSeized
மக்களின் ஏழ்மையை பயன்படுத்தியும், குழந்தைகளை காரணம் காட்டியும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHassan
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் கட்சி சார்பில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.ஜி.மவுரியாவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
காசிமேடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கி திருவொற்றியூர், ஆர்.கே. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கன்னிகாபுரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வட சென்னை உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதி. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அதை செய்யத்தான் இப்போது வந்திருக்கிறேன். இங்கு நல்லாட்சி நடந்திருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை. அதற்கு காரணம், நீங்களும், நானும் தான். நான் அரசியலுக்கு தாமதமாக வந்தேன். மக்கள் அசட்டையாக இருந்து விட்டனர்.
மக்களின் ஏழ்மையை, மக்களின் குழந்தைகளை காரணம் காட்டி ஓட்டுக்கு பணம் தருவார்கள். ஒரு போதும் பணத்துக்கு மக்கள் விலைபோக கூடாது. அந்த பணத்துக்கு மக்கள் கொடுக்கும் விலை 5 ஆண்டு வாழ்க்கை. நல்ல அரசை தேர்வு செய்தால் பல மடங்கு பணம் மக்களை வந்தடையும். எங்கள் வேட்பாளர் ஏ.ஜி.மவுரியா, ஓய்வுபெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் உங்கள் நலனுக்காக பாடுபடுவார். இந்த பகுதிகளுக்கு வரும்போது வேதனையாகிறது.
ஏழ்மையை அப்படியே வைத்திருந்தால் தான் தங்களுக்கு சொத்து குவியும் என்பதற்காக அப்படியே வைத்து இருக்கிறார்கள். இது விரைவில் மாறும். எங்கள் வேட்பாளர்கள் தாங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் பதவியில் இருந்து விலகி விடுவோம் என்று இப்போதே எழுதிக்கொடுப்பார்கள். இது நேர்மையானவர்களால் மட்டுமே முடியும். இது உறுதி.

எங்களை போன்ற ஒரு நேர்மையான கட்சி இனி கிடைப்பது கடினம். எங்களை நழுவ விட்டு விடாதீர்கள். மற்ற கட்சிகளில் அள்ளி இறைக்கிறார்களே நாம் செய்யவில்லையே என்று நினைக்காதீர்கள். அப்படி என் கட்சிக்காரர்கள் செய்தால் கூட அவர்களை நானே தேர்தல் கமிஷனிடம் காட்டிக் கொடுப்பேன். இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குவது மகனாகவே இருந்தாலும் கொல்வார் என்பது போல என் கட்சிக்காரர்களாக இருந்தாலும் தண்டிப்பேன்.
முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். பிரசாரத்தில் நெருப்பு பறக்கும். இப்போது அந்த கட்சி தலைவர் பிரசாரத்தில் செருப்பு பறக்கிறது. அந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். நான் களத்தில் இறங்கியிருக்கும் புதிய தலைவன் அல்ல. தலைவர்களை உருவாக்கப்போகும் தொண்டன். இங்கே இந்த இடத்தில் நடனமாடித்தான் எனது கால்கள் உறுதியானது.
இங்கு மீண்டும் நடமாட வைத்திருக்கிறது மக்கள் நீதி மய்யம், இது பிரதமரை மட்டும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல தமிழகத்தின் நிலை என்ன என்று பாராளுமன்றத்தில் தமிழ் குரல் எதிரொலிக்கும் ஒரு அற்புதமான தேர்தல். மக்களின் ஏழ்மையை காட்டி காட்டி தான் அரசியல்வாதிகள் அவர்களது பணப்பை வீக்கத்தை காட்ட முடியும். அவர்களுக்கு வெட்கமே கிடையாது.
சிலர் என்னைப் பார்த்து நீ அரசியல்வாதி அல்ல வெறும் நடிகன் என்கிறார்கள். அவர்கள் நேற்று முன் தினம் வரை ’எங்கே எங்கள் வீட்டில் ரெய்டுவிடுங்கள் பார்ப்போம்... ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னார்கள்.
அவர்கள் என்னைவிட அதிகமாக என்னைவிட தைரியமாக குரல் கொடுத்தார்கள். நான் கூட இவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால் உண்மை என்ன என்றால் என்னைவிட அவர்கள் பெரிய நடிகர்கள்.
எங்களை வேலை செய்ய விடுங்கள் தமிழகம் மாறுகின்றதா இல்லையா பாருங்கள். எங்களுக்கு நாட்கள் தேவை. நாற்காலிகள் தேவையில்லை. நாங்கள் அமரப்போவது இல்லை. நடந்து கொண்டே இருப்போம். நாங்கள் நடத்த வேண்டும் என்ற கனவுகளை எல்லாம் நடத்திக் காட்டும் வரை நடந்து கொண்டே இருப்போம். இந்த நாற்காலிகள் அங்கேயே இருக்கட்டும். எங்கள் உடல்சாயாது நாற்காலியில் இனி தமிழகம் சாயாது. அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.
எங்கள் தேர்தல் பிரகடனத்தில் யாரும் சொல்ல முடியாத விஷயங்களை சொல்லியுள்ளோம் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 5 வருடத்திற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கொண்டு சேர்ப்பது எங்கள் கடமையை நாங்கள் முதல் வேலையாக எடுத்துச் செய்யப்போகிறோம் எங்கள் கருத்தை வளப்படுத்துங்கள் நாளை நமதே’.
இவ்வாறு அவர் பேசினார். #KamalHassan
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் கட்சி சார்பில் வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.ஜி.மவுரியாவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
காசிமேடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கி திருவொற்றியூர், ஆர்.கே. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கன்னிகாபுரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வட சென்னை உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதி. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அதை செய்யத்தான் இப்போது வந்திருக்கிறேன். இங்கு நல்லாட்சி நடந்திருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை. அதற்கு காரணம், நீங்களும், நானும் தான். நான் அரசியலுக்கு தாமதமாக வந்தேன். மக்கள் அசட்டையாக இருந்து விட்டனர்.
மக்களின் ஏழ்மையை, மக்களின் குழந்தைகளை காரணம் காட்டி ஓட்டுக்கு பணம் தருவார்கள். ஒரு போதும் பணத்துக்கு மக்கள் விலைபோக கூடாது. அந்த பணத்துக்கு மக்கள் கொடுக்கும் விலை 5 ஆண்டு வாழ்க்கை. நல்ல அரசை தேர்வு செய்தால் பல மடங்கு பணம் மக்களை வந்தடையும். எங்கள் வேட்பாளர் ஏ.ஜி.மவுரியா, ஓய்வுபெற்ற நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் உங்கள் நலனுக்காக பாடுபடுவார். இந்த பகுதிகளுக்கு வரும்போது வேதனையாகிறது.
ஏழ்மையை அப்படியே வைத்திருந்தால் தான் தங்களுக்கு சொத்து குவியும் என்பதற்காக அப்படியே வைத்து இருக்கிறார்கள். இது விரைவில் மாறும். எங்கள் வேட்பாளர்கள் தாங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் பதவியில் இருந்து விலகி விடுவோம் என்று இப்போதே எழுதிக்கொடுப்பார்கள். இது நேர்மையானவர்களால் மட்டுமே முடியும். இது உறுதி.
நான் ஏன் நிற்கவில்லை என்று கேட்கிறார்கள். இதோ நிற்கிறேன். நான் நிற்பது தமிழகம் உயர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக. ராகுல் காந்தி 2 தொகுதிகளில் நிற்கிறார். இரண்டிலும் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிடுவார். அப்படி என்னால் செய்ய முடியாது. அதனால்தான் நான் 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை.

எங்களை போன்ற ஒரு நேர்மையான கட்சி இனி கிடைப்பது கடினம். எங்களை நழுவ விட்டு விடாதீர்கள். மற்ற கட்சிகளில் அள்ளி இறைக்கிறார்களே நாம் செய்யவில்லையே என்று நினைக்காதீர்கள். அப்படி என் கட்சிக்காரர்கள் செய்தால் கூட அவர்களை நானே தேர்தல் கமிஷனிடம் காட்டிக் கொடுப்பேன். இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குவது மகனாகவே இருந்தாலும் கொல்வார் என்பது போல என் கட்சிக்காரர்களாக இருந்தாலும் தண்டிப்பேன்.
முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். பிரசாரத்தில் நெருப்பு பறக்கும். இப்போது அந்த கட்சி தலைவர் பிரசாரத்தில் செருப்பு பறக்கிறது. அந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். நான் களத்தில் இறங்கியிருக்கும் புதிய தலைவன் அல்ல. தலைவர்களை உருவாக்கப்போகும் தொண்டன். இங்கே இந்த இடத்தில் நடனமாடித்தான் எனது கால்கள் உறுதியானது.
இங்கு மீண்டும் நடமாட வைத்திருக்கிறது மக்கள் நீதி மய்யம், இது பிரதமரை மட்டும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல தமிழகத்தின் நிலை என்ன என்று பாராளுமன்றத்தில் தமிழ் குரல் எதிரொலிக்கும் ஒரு அற்புதமான தேர்தல். மக்களின் ஏழ்மையை காட்டி காட்டி தான் அரசியல்வாதிகள் அவர்களது பணப்பை வீக்கத்தை காட்ட முடியும். அவர்களுக்கு வெட்கமே கிடையாது.
சிலர் என்னைப் பார்த்து நீ அரசியல்வாதி அல்ல வெறும் நடிகன் என்கிறார்கள். அவர்கள் நேற்று முன் தினம் வரை ’எங்கே எங்கள் வீட்டில் ரெய்டுவிடுங்கள் பார்ப்போம்... ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னார்கள்.
அவர்கள் என்னைவிட அதிகமாக என்னைவிட தைரியமாக குரல் கொடுத்தார்கள். நான் கூட இவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால் உண்மை என்ன என்றால் என்னைவிட அவர்கள் பெரிய நடிகர்கள்.
எங்களை வேலை செய்ய விடுங்கள் தமிழகம் மாறுகின்றதா இல்லையா பாருங்கள். எங்களுக்கு நாட்கள் தேவை. நாற்காலிகள் தேவையில்லை. நாங்கள் அமரப்போவது இல்லை. நடந்து கொண்டே இருப்போம். நாங்கள் நடத்த வேண்டும் என்ற கனவுகளை எல்லாம் நடத்திக் காட்டும் வரை நடந்து கொண்டே இருப்போம். இந்த நாற்காலிகள் அங்கேயே இருக்கட்டும். எங்கள் உடல்சாயாது நாற்காலியில் இனி தமிழகம் சாயாது. அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.
எங்கள் தேர்தல் பிரகடனத்தில் யாரும் சொல்ல முடியாத விஷயங்களை சொல்லியுள்ளோம் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 5 வருடத்திற்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கொண்டு சேர்ப்பது எங்கள் கடமையை நாங்கள் முதல் வேலையாக எடுத்துச் செய்யப்போகிறோம் எங்கள் கருத்தை வளப்படுத்துங்கள் நாளை நமதே’.
இவ்வாறு அவர் பேசினார். #KamalHassan
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெய்த பண மழையை விட தற்போது பாராளுமன்ற தேர்தலில் பல மடங்கு பண மழை பெய்து வருவதை மத்திய, மாநில உளவு துறைகள் கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள்ளன. #LokSabhaElections2019 #EC
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர்களைக் கவர மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடந்தது.
20 ரூபாய் நோட்டுக்களை டோக்கனாகக் கொடுத்தும் பல இடங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு மாறியதாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில்தான் அதிக பணப்பட்டுவாடா நடக்கும் என்று ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 40 தொகுதிகளிலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிக பறக்கும் படைகள், அதிக கண்காணிப்பாளர்கள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
என்றாலும் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை மீறி பணம் தண்ணீராக செலவு செய்யப்படுவதாக உளவுத்துறை கூறியுள்ளது. 40 தொகுதிகளில் குறிப்பிட்ட 24 தொகுதிகளில் மிக அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதில் சில தொகுதிகளில் சில வேட்பாளர்கள் ரூ.100 கோடி வரை செலவு செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுகிறார்கள்.
எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வெறியில் அவர்கள் பணத்தை செலவு செய்வதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் ரூ.50 கோடி வரை செலவு செய்துள்ளனர். தண்ணீராக வாரி இறைக்கப்பட்டு வரும் இந்த கோடிக்கணக்கான பணத்தில் பெரும்பாலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்தப்படியாக பொதுக் கூட்டங்களுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளுக்கும் பணம் தாராளமாக வழங்கப்படுகிறது.
மொத்தத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த தடவை தேர்தலில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வேட்பாளர்கள் செலவு செய்வதாக உளவுத்துறை மூலம் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் கணித்துள்ளனர். #LokSabhaElections2019 #ElectionCommission
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர்களைக் கவர மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடந்தது.
20 ரூபாய் நோட்டுக்களை டோக்கனாகக் கொடுத்தும் பல இடங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு மாறியதாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெய்த பண மழையை விட தற்போது பாராளுமன்ற தேர்தலில் பல மடங்கு பண மழை பெய்து வருவதை மத்திய, மாநில உளவு துறைகள் கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள்ளன. பணமழை தொடர்பாக உளவுத்துறையினர் கொடுத்துள்ள தகவல்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மிகக் கடுமையான அதிர்ச்சியை அளித்துள்ளது.

என்றாலும் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை மீறி பணம் தண்ணீராக செலவு செய்யப்படுவதாக உளவுத்துறை கூறியுள்ளது. 40 தொகுதிகளில் குறிப்பிட்ட 24 தொகுதிகளில் மிக அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதில் சில தொகுதிகளில் சில வேட்பாளர்கள் ரூ.100 கோடி வரை செலவு செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுகிறார்கள்.
எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வெறியில் அவர்கள் பணத்தை செலவு செய்வதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் ரூ.50 கோடி வரை செலவு செய்துள்ளனர். தண்ணீராக வாரி இறைக்கப்பட்டு வரும் இந்த கோடிக்கணக்கான பணத்தில் பெரும்பாலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்தப்படியாக பொதுக் கூட்டங்களுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளுக்கும் பணம் தாராளமாக வழங்கப்படுகிறது.
மொத்தத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த தடவை தேர்தலில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வேட்பாளர்கள் செலவு செய்வதாக உளவுத்துறை மூலம் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் கணித்துள்ளனர். #LokSabhaElections2019 #ElectionCommission






