search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜூன் சம்பத்"

    • தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது.
    • ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு முதல் கட்ட தேர்தலாக நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா நாடு வல்லரசாக வேண்டும். தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் திராவிட மாடல் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வினரின் சுவர் விளம்பரங்கள் குறி வைத்து அகற்றப்படுகிறது. ஆனால் தி.மு.க.வினரின் விளம்பரங்களை அகற்றவில்லை. ஆளும் கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.


    ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கோர்ட்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது மேல்முறையீடு செய்து அதன் அடிப்படையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு ஜனநாயகத்தை அழித்து பணநாயகமாக மாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    போலீஸ் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. எனவே துணை ராணுவம் மற்றும் ராணுவத்தை கொண்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் சட்டசபையை சஸ்பெண்டு செய்து கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.


    தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மோடி அலைவீச தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெரும். மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை விட பா.ஜ.க. அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி இருப்பதாக கூறுகிறார்கள்.

    கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு குளறுபடியும் அவர்களுக்கு தெரியவில்லையா. பாரத் ஜோடா யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி மும்பையில் நடந்து. தற்போது அந்த கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் மட்டுமே உள்ளது. கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு குறித்து அவதூறு பதிவு வழக்கில் ேபாலீஸ் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் ஆஜராகவில்லை.
    • வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கி ரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 38). இவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்தது.

    இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அர்ஜூன் சம்பத் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படு கிறது.

    இந்த பதிவு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் கோவை யில் உள்ள அர்ஜூன் சம்பத் வீட்டில் நேற்று மதுரை மாவட்ட போலீசார் சம்மன் வழங்கினர்.

    அதன்படி இன்று காலை அர்ஜூன் சம்பத் செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக வில்லை. அவரின் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.

    பங்காரு அடிகளாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் அர்ஜூன் சம்பத் நேரில் ஆஜராக முடிய வில்லை என்றும், வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது.
    • குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும்.

    திருப்பூர் :

    இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்பவானி பாசன விவசாயிகள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கை நியாயமானது. எனவே நீா்பாசனத் துறை அமைச்சா், மாவட்ட கலெக்டர் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது. அப்படியே இருந்தாலும் குலதெய்வக் கோவில்களை பூட்டுவது சரியானது அல்ல. பல இடங்களில் பட்டியலின மக்கள் திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். எனவே இந்த விஷயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும்.

    அதேபோல கரூா் மாவட்டத்திலும் ஒரு கோவிலைப் பூட்டியுள்ளனா். குலதெய்வக் கோவில்களை பூட்டுவதை மிகப்பெரிய தெய்வ குற்றமாக நாங்கள் கருதுகிறோம். குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும். எனவே குலதெய்வக் கோவில்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்றாா்.

    இதையடுத்து, சக்தி திரையரங்கம் அருகில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சனாதன இந்து தா்ம எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக செயற்பாட்டாளா் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • தமிழக நிதி அமைச்சர் ஆடியோ விவகாரத்தை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
    • தேனி மாவட்டத்தில் சனாதன இந்து எழுச்சி மாநாடு, பேரணி, பொது கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் அன்னதானம், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அன்னதானத்தை தொடங்கி வைத்த பின்னர் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெரியகுளத்தில் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசார், போலீஸ் நிலையத்தை தாக்கினர்.

    எனவே அந்த கட்சியை தடை செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். தமிழக நிதி அமைச்சர் ஆடியோ விவகாரத்தை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

    தேனி மாவட்டத்தில் சனாதன இந்து எழுச்சி மாநாடு, பேரணி, பொது கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறகிறது. இதில் அனைத்து இந்து அமைப்புகளும் பங்கேற்கின்றன. தமிழக-கேரள எல்லையில் கனிம வளங்கள் கடத்தல், வி.ஏ.ஓ. கொலை தொடர்பாக நடவடிக்கை கோரி சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஒலி எழுப்பும் போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்க நடைபெற உள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறையிடம் மங்கலதேவி கண்ணகி கோவிலை கேரள அரசு ஒப்படைக்க வேண்டும்.

    அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். பா.ஜனதா பட்டியல் இன பொறுப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றார்.

    • பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது.
    • தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை :

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருகிற 1, 2-ந் தேதிகளில் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்றத்தை நாடி உள்ளோம். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை போதாது. லண்டனில் இந்தியாவுக்கு எதிராக பேசியதால், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைய தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவர் எதிர்க்கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி தோள் கொடுத்து செயல்படும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கே வழங்குவதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் 6 மாதம் அமலில் இருந்தது. அப்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு நாடகம் நடத்துகிறது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும்.அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நெல்லையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
    • கவர்னரை அவமதிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே அவமதிப்பதாகும்.

    திருப்பூர்:

    சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 91-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருப்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. கவர்னர் அரசியல் சட்டப்படி உரையாற்றிய போது அவரை அவமதித்துள்ளனர். கவர்னரை அவமதிப்பது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே அவமதிப்பதாகும்.

    கவர்னர் உரையில் தி.மு.க. தனது கட்சிக் கொள்கையை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளது. கவர்னரை பொய் பேச வைக்க தி.மு.க. முயற்சித்துள்ளது.கவர்னர் அந்த பதவியின் மாண்பை பாதுகாத்து உள்ளார். கவர்னரை வைத்து கொண்டே கண்டன தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து உள்ளனர். அதனால் தான் கவர்னர் வெளியேறினார்.

    அரசியல் சாசன சட்டப்படி சட்டசபையை முடக்கி வைக்க வேண்டும்.தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு கவர்னர் முயற்சி எடுக்க வேண்டும். மேலும் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டியதற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

    இதனை அறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, போலீசார் மாற்று உடையில் போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என சென்னை ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர். இதனால் அம்பேத்கர் மணி மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
    • அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து ஒருவர் பலியானார். இந்த கோவிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் அங்கு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்.

    இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் பா.ஜ.க. மாநில தலைவர் அரசியல் கோமாளி என விமர்சித்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருமுறை கூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது இல்லை போலிருக்கிறது.

    இந்த கோவிலில் மூலவர் சங்கமேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இவர்கள் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. இதை சோமாஸ்கந்தர் வடிவம் என்பவர்.

    சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    நாட்டில் வேறு எங்கும் இப்படி ஒரு தோற்றத்தை காண முடியாது. இந்த கோவில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் இப்போது தான் நடந்து முடிந்துள்ளது. முருகனுக்கு தைப்பூச தேரோட்டமும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    இதை அறியாமல் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசி இருக்கிறார்.

    மிகவும் சக்தி வாய்ந்த வரலாற்று பெருமைமிக்க இந்த திருக்கோவில் குறித்து எதுவும் தெரியாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவரை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர்.
    • இந்துமக்கள் கட்சியினர் ஆவேசமடைந்து அர்ஜூன் சம்பத்தை விடுதலைசெய்யுமாறு தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று முதல் 150 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல்காந்திக்கு எதிராக 'கோபேக்'இயக்கம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் அறிவித்திருந்தார்.

    இதற்காக நேற்றிரவு கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அர்ஜூன்சம்பத்தை கைது செய்தனர்.

    இதனால் இந்துமக்கள் கட்சியினர் ஆவேசமடைந்து அவரை விடுதலைசெய்யுமாறு தெரிவித்தனர். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்டம் முழுவதிலும் இருந்து இந்து மக்கள் கட்சியினர் அங்கு விரைந்து வந்தனர்.

    இன்று காலை வரை அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ்நிலைய வாசலில் அமர்ந்து அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டபடி இருந்தனர். அப்போது ஒருவர் போலீஸ் நிலையம் முன்பிருந்த மரத்தின்மீது ஏறி அவரை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கீழே இறக்கினர். மேலும் சிலர் ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதனால் போலீஸ்நிலையம் முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
    • தொல்.திருமாவளவனை அர்ஜூன் சம்பத் அவதூறாக பேசியதாக கண்டனம்

    நாகர்கோவில்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இன்று அர்ஜூன் சம்பத் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். கோபி, பாபு, ஜோஸ்பின், ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்தியதாக திருமாவேந்தன் உள்பட 10 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

    ×