என் மலர்
தேர்தல் செய்திகள்
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஸ்ரவன் தசோஜு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
தெலுங்கானா மக்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் மிக திறமையாக ஏமாற்றுகிறார்கள். மது மற்றும் பிரியாணி வாங்கி கொடுத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கிறார்கள்.
சில இடங்களில் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கி கொண்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இனியாவது மக்கள் ஏமாறக்கூடாது.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் இருப்பவர்கள் நல்லவர்கள் அல்ல. அந்த கட்சியின் வேட்பாளர்கள் வங்கிகளை ஏமாற்றி பணம் வாங்கி இருக்கிறார்கள். சில வேட்பாளர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இவர்கள் சந்திரசேகரராவிடம் பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதி சீட்டையும் சந்திரசேகரராவ் தலா ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
இப்படி கோடி கணக்கில் கொட்டி கொடுத்து தேர்தலில் சீட் வாங்கி இருப்பவர்கள் அந்த பணத்தை வட்டியோடு திருப்பி எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் உங்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் தர உள்ளது. இதை நினைவில் கொண்டு தேர்தலில் வாக்களிக்கியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அவர் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.
படித்தவரை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் தான் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடியும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய மக்களின் மனநிலையை அறியக் கூடிய மருத்துவராக வைத்திலிங்கம் இருப்பதால் அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்று மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஆதரவு திரட்டினார்.
அமைச்சர் பா.பென்ஜமினுடன் திருவள்ளூர் மாவட்ட அவை தலைவர் கா.சு. ஜனார்த்தனம், வட்ட செயலாளர் கந்தன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கே.என். சேகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் அ.தி.முக.. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019
சென்னை:
வடசென்னை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பி.சந்தானகிருஷ்ணன் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
டி.டி.வி. தினகரனின் ஆசி பெற்ற சின்னமான பரிசு பெட்டகத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் ஆதரவு திரட்டினார்.
திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட 11, 12, 13, 14 ஆகிய வார்டுகளில் டோல்கேட், தாங்கல், மொண்டி குப்பம் ஆகிய வீதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், தேர்தல் பொறுப்பாளர் வில்லியம்ஸ் அலெக்சாண்டர், பகுதி செயலாளர் எஸ்.முரளி, நிர்வாகிகள் தாங்கல் ரவி, டி.வி.நாசர், தங்கமணி, ஜீவிதா நாச்சியார், இ.ஜான்சன், புகழேந்தி, பார்த்த சாரதி, குமரேசன், வி.சி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.கே.ஜி நீலமேகம் ஆகியோருக்கு வாக்குகேட்டு, தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
தஞ்சை பர்மா காலனி, கீழவாசல், வடக்கு வீதி மானம்புசாவடி , கீழராஜ வீதி, அண்ணா நகர் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இதை மோடி எதிர்ப்பு அலை என சொல்லுகிறார்கள். ஆனால் இது ஸ்டாலின் ஆதரவு அலையே. கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது, மோடி வரவில்லை.
வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார். ஆனால் அனைவருக்கும் நாமம் தான் போட்டார். அதே நாமத்தை நாமும் வருகிற 18-ந்தேதி தி.மு.க.விற்கு வாக்களித்து மோடிக்கு போட வேண்டும்.

மக்கள் ஓட்டு போட்டு எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. சசிகலாவின் காலை பிடித்து தான் அவர் முதல்வரானவர். அவர் மக்கள் முதல்வர் இல்லை.
தற்போது நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடக்கும் மீதமுள்ள 4 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக மாறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வருகிற ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க நாம் சபதம் ஏற்போம்.
எனவே இந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் விரட்டி அடிப்போம்.
இவ்வாறு அவர்கூறினார். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் தேர்தல் பறக்கும் படையால் ரூ.124.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 989.6 கிலோ தங்கம், 492.3 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதால், மே 27ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #VelloreITRaids #Duraimurugan
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று அவர் பாளை, சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்பு இரவில் நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை அவர் தூத்துக்குடி வந்தார்.
அவர் தூத்துக்குடி- நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
வருகிற 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அதையொட்டி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஓடிவந்துள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றென கருதி உழைக்கும் உன்னதமான இயக்கம் தி.மு.க.
கலைஞர் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்னால் வந்து வாக்கு கேட்டிருப்பார். இன்று அவரது மகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து மூச்சுவிட்டாலே போதும் ஓடிவிடுவார்கள் என்றுகூறிய வ.உ.சி. பிறந்த மண் இது.
அனைத்து தொகுதிகளிலுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களை கலைஞரின் பிள்ளையாக கருதி வாக்களிக்க கேட்டு வந்துள்ளேன். இங்கு கலைஞரின் மகள், எனது தங்கைக்காக வாக்கு கேட்கிறேன். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல கனிமொழி கவிஞர், பத்திரிகையாளர், பேச்சாளர், எழுத்தாளர் என ஒவ்வொரு துறையிலும் தனிமுத்திரை பதித்தவர். சமூக போராளி, பாராளுமன்ற டைகர் என பட்டம் பெற்றவர். தூத்துக்குடியில் உங்களுடைய டைகராக அவர் போட்டியிடுகிறார்.
மாநிலங்களவையில் அவர் ஸ்டெர்லைட் பிரச்சனை, நீட்தேர்வு விவகாரம், மரண தண்டனை ஒழிப்பு, மகளிர் இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட பல பிரச்சனைகளை வாதாடி, போராடி வெற்றி பெற்றுள்ளார். இவரை விட சிறந்த வேட்பாளர் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை துள்ளதுடிக்க சுட்டுக்கொன்ற அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு தக்க தண்டனை தர வேண்டும். 100 நாட்களை கடந்து போராடிய மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் போது கலெக்டர் அழைத்து பேசியிருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது. மக்களை பழிவாங்கவே துப்பாக்கி சூடு நடத்தியது எடப்பாடி அரசு.
ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எனவே இந்த கொலைகார எடப்பாடி அரசை மக்கள் தூக்கிஎறிய வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? எடப்பாடியா? தலைமை செயலாளரா? பிரதமர் மோடியா?. தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது பெண் ஸ்னோலினை சுட்டுக்கொன்றுள்ளார்கள். அவர் எழுதிய கவிதை புத்தகமாக வந்துள்ளது. காளியப்பன் என்பவரை சுட்டுக்கொல்லும்போது கடைசியில் சினிமாவில் நடிப்பது போல் நடிக்கிறாயா? என கேட்ட கொடுமை இணையத்தில் வந்துள்ளது.
துப்பாக்கி சூடு நடந்ததும், தூத்துக்குடிக்கு வந்து காயம்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினேன். என் வாழ்நாளில் இப்படிப்பட்ட காட்சிகளை நான் பார்த்ததில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் முதல்-அமைச்சர் இங்கு வந்தாரா? ஒரு அறிக்கையாவது விட்டாரா? பிரதமர் மோடி இரங்கல் செய்தியாவது கூறினாரா? வடமாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் அறிக்கைவிடுகிறார்.

தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடவில்லை, வசமாக மாட்டிக்கொண்டார். இங்குதான் ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, உப்பள பிரச்சனை, தீப்பெட்டி தொழில் பிரச்சனை, சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளது. எதற்கும் குரல் கொடுக்காத தமிழிசை, என்ன தைரியத்தில் வந்தார். தோற்பதற்காக வந்தாரா? ஒருவேளை அவரது கட்சியினரே சதி செய்து இங்கு அனுப்பிவைத்தார்களா? ஸ்டெர்லைட் போராட்டத்தை போன்று கூடங்குளம் போராட்டத்திலும் அடக்குமுறையை கையாண்டது இந்த அரசு.
இந்திய பாதுகாப்புக்கு அனைத்தையும் செய்கிறோம் என்கிறார் மோடி. புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டார்களே, இதுதான் பாதுகாக்கும் லட்சணமா? உள்ளூர் பயங்கரவாதிகளுக்கு வெடி பொருட்கள் எப்படி கிடைத்தது? பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அளித்த புள்ளிவிபரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான மதக்கலவரங்கள், அதனால் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.
இதில் நிறைய சம்பவங்கள் நடந்தது பா.ஜனதா செல்வாக்கு மிகுந்த உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆகும். அதைப்போன்று தமிழகத்திலும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். தி.மு.க. இருக்கும்வரை அது நடக்காது.
கடந்த 20-ந்தேதியில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்கியது முதல் 3 கேள்விகளை கேட்டுள்ளேன். ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது? அது மர்மமரணம் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே கூறியுள்ளார். அப்போது மர்ம மரணம் என்று கூறியவர் அதுதொடர்பாக விசாரணை கமிஷனில் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். எனவே அவரது மரணம் குறித்து பேச எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு தகுதி உண்டு. இந்த கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை.
கொடநாட்டில் கொள்ளை முயற்சியில் நடந்த கொலைகளுக்கு யார் பின்னணி? 3-வதாக பொள்ளாச்சியில் 7 வருடமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்த கொடுமையை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவர்கள் யார்? உளவுத்துறை இதை முன்கூட்டியே சொல்லாதது ஏன்? இதற்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனது இந்த 3 கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமை மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா? தெரியும். அதனால் தான் அவரை பாசிச பிரதமர் என்கிறோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி தூக்கிஎறியப்படும். தமிழக சட்டமன்றத்தில் இப்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள், முஸ்லீம் லீக் 1 என தி.மு.க. அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் அவை 119 ஆக உயரும். 117 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த மோடி எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது தேர்தல் அறிக்கையில் கனவுகள், கற்பனைகள் காகிதங்களில் கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. முதலில் மக்களின் தேவையை நிறைவேற்றியதாகவும், தற்போது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் கூறியுள்ளீர்கள். இப்போது மக்களின் விருப்பம் நீங்கள் வீட்டுக்கு போகவேண்டும் என்பதுதான். தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக தெளிவாக உள்ளது.
தி.மு.க. வெற்றி பெற்றதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக மூடுவோம். துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். தூத்துக்குடியின் விமான நிலையம் மேம்படுத்தப்படும். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். மழைக்காலங்களில் உப்பள தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்படும். மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். கடலோர பகுதிகள் புயல் பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சில பிரிவுகளை தேவேந்திரர் என அழைக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மூலம் தீர்வு காணப்படும். 50 லட்சம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். மாணவர்களின் கல்வி கடன், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். கலைஞர் கூறியது போல நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMK #MKStalin
சென்னை:
ஓசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.
அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.

தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினர். #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கோரிக்கைகளை அமித்ஷா கேட்டறிந்து செய்கிறோம் என்று சொல்லி இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
டெல்லியில் 150 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவையும், விவசாயிகளையும் அமித்ஷாவோ, மோடியோ யாரும் சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பிரதமர் மோடி கோவையில் பேசும்போது ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை சரி செய்வேன் என்று கூறி இருக்கிறார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் சொன்னார்கள். அப்போது எங்கள் கருத்தை கேட்கவில்லை. நாங்கள் கூறும் ஆலோசனை முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரியை சரி செய்கிறேன் என்று கூறுகிறார்.
பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா? இல்லை தெரியாமல் ஆதரித்தாரா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும். தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது. இதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டு கொள்ளவில்லை.
ஏ.டி.எம். பணம், விவசாயிகளின் பணத்தை பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #KSAlagiri
திருவனந்தபுரம்:
கேரளாவில் வருகிற 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் இம்முறை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் பாரதீய ஜனதாவும் 3-வது அணியாக களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
கேரளாவில் மொத்த முள்ள 20 தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 8 இடங்கள் கிடைத்தது.
இந்த தேர்தலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் மாநில காங்கிரசார் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
ராகுல்காந்தி போட்டியால் கேரளாவில் இம்முறை காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டது.

காங்கிரசாரின் கருத்தை உறுதிப்படுத்துவதுபோல சமீபத்தில் அங்கு வெளியான கருத்து கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் 15-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறி இருந்தது.
கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 4 இடங்களும், பாரதீய ஜனதா கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது.
கேரளாவில் வெளியான கருத்துக்கணிப்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயன் கூறியதாவது:-
கேரளாவில் வெளியான கருத்துக்கணிப்புகளில் எந்த உண்மையும் இல்லை. உண்மையான நாட்டு நடப்பை கருத்துக்கணிப்பு பிரதிபலிக்கவில்லை.
காங்கிரசும், பாரதீய ஜனதாவும் ஊடகங்கள் மீது கருத்தை திணிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கருத்துக்கணிப்பு முடிவுகள். அதை கம்யூனிஸ்டுகள் ஏற்க மாட்டார்கள்.
கேரளாவில் நடைபெறும் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 20 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #pinarayivijayan #congress #opinionpolls
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக இன்று காலை அமேதியை அடைந்த ராகுல் காந்தி, முன்ஷிகஞ்ச்-தர்பிபூர் பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். திறந்த வாகனத்தில் சென்ற ராகுலுக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிராயா ஆகியோர் உடன் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக காரில் சென்றார்.

ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. அமேதியில் 5-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination
அகமதாபாத்:
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
காங்கிரசார் ஏழைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் கர்நாடக மாநிலம் காங்கிரசாருக்கு பணம் கொட்டும் ஏ.டி.எம். எந்திரமாக இருந்தது. இப்போது மத்திய பிரதேச மாநிலம் காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாறி இருக்கிறது.
ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசார் இன்று ஜெயில் கதவை தட்டும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் 5 ஆண்டுகள் எங்களிடம் ஆட்சியை கொடுத்தால் அவர்கள் ஜெயிலுக்குள் இருப்பார்கள்.
நாம் பாகிஸ்தானில் விமான தாக்குதல் நடத்தினோம். ஆனால் அது இந்தியாவில் உள்ள காங்கிரசை பாதிக்கிறது.
உங்களின் மைந்தனாகவும், காவலனாகவும் உள்ள என்னை டிக்ஷனரியில் உள்ள அனைத்து மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டுகிறார்கள்.
நாட்டில் இருந்து காஷ்மீரை பிரிக்க வேண்டும், அங்கு தனி பிரதமர் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து மன்னர் பிரதேசங்களையும் சர்தார் வல்லபாய் பட்டேல் வெற்றிகரமாக இந்தியாவோடு இணைத்தார். ஆனால் நேரு தலையீடு காரணமாக காஷ்மீரில் மட்டும் அது நடக்கவில்லை. இதனால்தான் இன்று நமது வீரர்கள் தங்கள் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
சென்னை:
மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் காஞ்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.
அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சத்தில் குடிநீர் வசதி, மழைநீர், கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படும்.
ஒரே கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ. இருந்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்ற வசதியாக இருக்கும். எனவே உதய சூரியன் சின்னத்தை மறவாதீர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து கூடு வாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பஜாரில் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டார்.
பிரசாரத்தின் போது எம்.கே.தண்டபாணி, கே.பி.ராஜன், ஆப்பூர் சந்தானம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
#LokSabhaElections2019






