என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டார்.
- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை செல்ல இருந்த நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சி.வி.எம். அண்ணாமலை கொள்ளு பேரன் தமிழ் திரையன் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.
இதே போல் இன்று சென்னை டி.டி.கே. சாலை மியூசிக் அகாடமியில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதே போல் நாளை (21-ந்தேதி) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழா, வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் 3 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு 3 மாவட்டங்களிலும் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்களும், உற்சாகமாக இருந்தனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவரது வருகை குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்