என் மலர்tooltip icon

    கரூர்

    • கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் செம்மடை நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் அதில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர்திசையில் கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க?
    • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தன.

    இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    அப்போது, பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள்? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன.
    • புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார் பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் கரூரில் இருந்து தலைமறைவானார்.

    இந்நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. அதே நாளில் நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் அளித்தார்.

    இப்புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருகிற மே 23-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    • மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி விடுமுறை அறிவிப்பு.
    • அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.

    கரூர் மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் (ஜூன்) 14ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.

    • கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. அதில் ஷியாம் சுந்தர் என்ற 17வயதான 12-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    தடுக்க சென்ற அஜய், வசந்தகுமார் ஆகியோரும் கத்தியால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.
    • சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு (வயது 40). இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா.

    இவர்களது குழந்தைகள் தியா (10), ரிதன் (3). தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். பிரபுவின் மாமனார் சென்னை அடையாறை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(61) என்பவரும் உடன் சென்றார்.

    பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள் நேற்று சென்னை ரெயிலில் திரும்ப திட்டமிட்டனர். அதிகாலையில் ரெயிலில் செல்லவேண்டி இருந்ததால் இரவு சாப்பிட்டு ஓய்வெடுப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள 5 மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கினர்.

    அப்போது குழந்தைகள், முத்துக்கிருஷ்ணனுக்கு உணவு வாங்குவதற்காக பிரபுவும், மதுமிதாவும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றனர். இந்த வேளையில் ஓட்டலில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் ஓட்டலில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பலியானார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
    • இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பில்லா பாளையம் முனவாசிப்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு மதுபான கடை ஊழியர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு கடையினை பூட்டி சென்றனர்.

    நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் கடப்பாரையால் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 150-க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ. 6030 பணத்தினை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை மதுபான கடைக்கு அரசு குடோனில் இருந்து மது பாட்டில்கள்கள் இறக்க வந்துள்ளனர். அப்போது கடை ஊழியர்கள் கடையை திறந்த போது மதுபான பாட்டில்கள் இல்லாமல் இருப்பதை பார்த்தும், பின் பக்க சுவற்றில் துளையிட்டதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது பாட்டில்களையும் பணத்தினை திருடி சென்ற மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

    கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

    கடந்த 45 நாட்களுக்கு முன்பு இதேபோல் மேலதாளியாம்பட்டி டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட முயன்று முடியாததால் பூட்டை உடைத்து நீண்ட வாளை(பட்டாகத்தி) கடையில் உள்ளே போட்டுவிட்டு மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து அருளை கைது செய்தனர்.
    • தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் போது, அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.

    கரூர்:

    கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து கோவிந்தம்பாளையம் பகுதியில் வசிப்பவர் அருள் (வயது47). தாந்தோணி மேற்கு ஒன்றிய ஜெ.பேரவை துணை தலைவராக உள்ளார்.

    இவர் தனது வீட்டின் முன்பு இருந்த பள்ளத்தை சரிசெய்ய சவுடு மணலை கொட்டி உள்ளார்.

    இதனை பார்த்து அங்கு வந்த ஆண்டாங் கோவில் மேற்கு பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி மணல் கொட்டியது குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி, அருள் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து அருளை கைது செய்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் பசுவைசிவசாமி மற்றும் அதிமுகவினர் கரூர் நகர காவல் நிலையத்தில் இரவு திரண்டனர்.

    கைது செய்யப்பட்ட அருளின் குடும்பத்தார், உறவினர்களும் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இது குறித்து மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் கூறும்போது:-

    அ.தி.மு.க. பிரமுகர் அருள், தனது வீட்டின் முன்பகுதியை சீர் செய்ய சவுடு மணல் வாங்கி கொட்டியதை அவர் அ.தி.மு.க.காரர் என்பதால் அவர் மீது பொய் வழக்கு போட்டு பஞ்சாயத்து ஊழியர்கள் மூலம் போலீசார் கைது சொய்துள்ளனர்.

    தற்போது சம்பந்தப்பட்ட அருள் ஜாமினில் வெளியே வந்துள்ளார். அருளின் மனைவியிடம் மிக மோசமாக பேசிய பஞ்சாயத்து ஊழியர் பழனிசாமி மீது கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.

    கரூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்றவை நடந்து வரும் நிலையில் அதைப்பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் போது, அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றார். 

    • ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்.
    • ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.

    கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, "ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்

    எத்தனை ஆடுகள் வந்தாலும் பள்ளபட்டிக்கு உள்ளேயும் வரமுடியாது, வந்துவிட்டால் வெளியேயும் செல்ல முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். உங்கள் ஆதரவை எங்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.

    கரூரில் பட்டப்பகதில் அரசு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் மாணவியை கடத்தியுள்ளனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் மாணவியை இளைஞர், நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    கல்லூரி மாணவியை கடத்திய ஆம்னி கார் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
    • சோதனையில் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    கரூர்:

    கடந்த 2011-16 அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.

    இவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    பின்னர் இதில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ந் தேதி கைது செய்தனர்.

    மேலும் அப்போது அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர்.

    கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று (6-ந் தேதி) கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான அரசு ஒப்பந்ததாரர் எம்சி சங்கர், ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி, ஈரோடு சாலை கோதை நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் ஆகிய மூன்று பேர் வீடுகளில் சோதனை நடந்தது.

    காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9:45 மணி அளவில் நிறைவு அடைந்தது.

    மேலும் மாயனூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கரின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் சோதனை நடத்த காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் வீடு பூட்டி இருந்ததால் நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து அதிகாரிகள் திரும்ப புறப்பட்டு சென்றனர்.

    இந்த சோதனையில் கொங்கு மெஸ் சுப்ரமணி, சக்தி மெஸ் கார்த்திக் ஆகியோரது வீடுகளில் இருந்து 2 பைகள் மற்றும் ஒரு பெட்டியில் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    • கரூரில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
    • துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் சங்கர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் உள்ள மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சங்கர் ஆனந்த் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார் என்று தகவல்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராயனூர் பகுதியில் உள்ள கொங்குமெஸ் மணி இல்லம், கோதை நகர் பகுதியில் ஒருவர் இல்லம் என இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  

    ×