என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ வீரர்கள்"

    • ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க?
    • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தன.

    இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    அப்போது, பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள்? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி நாயப் சுபேதார் நடராஜ், பிளைட் லெப்டினன்ட் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் இலவச யூனிபார்ம் சர்வீஸ் மற்றும் போட்டித் தேர்வுபயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ராணுவ நல சங்க பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    மேசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் மற்றம் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மாவட்டம் முழுவதும் முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை வழங்கிட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி, துணைச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ரமேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
    • பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் இந்த நிதிவழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக உள்ளது.

    இந்நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை தற்போது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் இந்தத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் பல முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என பதிவிட்டுள்ளார்.

    ×