என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் தீ விபத்து"

    • பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.
    • சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு (வயது 40). இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா.

    இவர்களது குழந்தைகள் தியா (10), ரிதன் (3). தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். பிரபுவின் மாமனார் சென்னை அடையாறை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(61) என்பவரும் உடன் சென்றார்.

    பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள் நேற்று சென்னை ரெயிலில் திரும்ப திட்டமிட்டனர். அதிகாலையில் ரெயிலில் செல்லவேண்டி இருந்ததால் இரவு சாப்பிட்டு ஓய்வெடுப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள 5 மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கினர்.

    அப்போது குழந்தைகள், முத்துக்கிருஷ்ணனுக்கு உணவு வாங்குவதற்காக பிரபுவும், மதுமிதாவும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றனர். இந்த வேளையில் ஓட்டலில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் ஓட்டலில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பலியானார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
    • தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

    கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் உள்ள ரிதுராஜ் ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

    தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா கூறுகையில, இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    தருமபுரியில் இன்று காலை ஓட்டலில் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி குப்பாண்டியூர் தெருவைச் சேர்ந்தவர் அருண். இவர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயும், சாலை விநாயகர் ரோட்டிலும் தனியார் ஓட்டலை நடத்தி வருகின்றார்.

    இதில் சாலை விநாயகர் ரோட்டில் இயங்கி வரும் ஓட்டலில் இன்று காலை வழக்கபோல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. அந்த தீ சிறிது நேரத்தில் சமையலறை முழுவதும் பற்றி கொண்டது.

    அப்போது ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர்.

    அப்போது சமையலறையில் அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடினர். இதில் ரஞ்சிதம்மாள் என்பவருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டது. வள்ளியம்மாள் என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். உடனே ஓட்டலில் இருந்த மற்ற ஊழியர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் ஓட்டல் அருகே திரண்டு வந்தனர்.

    சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையினருக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்க முயன்றனர். ஆனால் தீ அறை முழுவதும் எரிந்து கொண்டிருந்தால் அவர்களால் எந்த இடத்தில் தீ எரிவது என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது. சிறிது நேரம் கழித்து கியாஸ் கசிவு ஏற்பட்ட இடத்தை கண்டுபிடித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தபகுதி முழுவதும் சிறிது பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தீவிபத்தில் ஓட்டலில் பணிபுரிந்த தீக்காயம் ஏற்பட்ட ரஞ்சிதம்மாளையும், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட வள்ளியம்மாளையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×