search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel fire accident"

    கோபி அருகே இன்று ஓட்டலில் திடீர் தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் ஓட்டல் நடத்தி வருபவர் ஆனந்த ஜோதி. நேற்று இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஓட்டல் திறக்கப்பட் டது. உணவு தயாரிக்க ஊழியர்கள் தயார் ஆனார்கள்.

    அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். கோபி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த நிலையில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கியாஸ் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

    தருமபுரியில் இன்று காலை ஓட்டலில் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி குப்பாண்டியூர் தெருவைச் சேர்ந்தவர் அருண். இவர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயும், சாலை விநாயகர் ரோட்டிலும் தனியார் ஓட்டலை நடத்தி வருகின்றார்.

    இதில் சாலை விநாயகர் ரோட்டில் இயங்கி வரும் ஓட்டலில் இன்று காலை வழக்கபோல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. அந்த தீ சிறிது நேரத்தில் சமையலறை முழுவதும் பற்றி கொண்டது.

    அப்போது ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர்.

    அப்போது சமையலறையில் அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடினர். இதில் ரஞ்சிதம்மாள் என்பவருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டது. வள்ளியம்மாள் என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். உடனே ஓட்டலில் இருந்த மற்ற ஊழியர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் ஓட்டல் அருகே திரண்டு வந்தனர்.

    சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையினருக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்க முயன்றனர். ஆனால் தீ அறை முழுவதும் எரிந்து கொண்டிருந்தால் அவர்களால் எந்த இடத்தில் தீ எரிவது என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது. சிறிது நேரம் கழித்து கியாஸ் கசிவு ஏற்பட்ட இடத்தை கண்டுபிடித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தபகுதி முழுவதும் சிறிது பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தீவிபத்தில் ஓட்டலில் பணிபுரிந்த தீக்காயம் ஏற்பட்ட ரஞ்சிதம்மாளையும், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட வள்ளியம்மாளையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×