என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது சைல்டு லைன் அலுவலர்களிடம் அந்த சிறுமி தனக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உதவியுடன் அந்த சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அந்த சிறுமியின் தந்தையை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நம்பியூர், கீரனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஈரோட்டில் இருந்து ராமேசுவரம் கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.
கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் நேற்று ஈரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த வேனை சென்னிமலையை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வேன் கொடுமுடி அருகே கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் வாழநாயக்கன்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது.
திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. வேனில் தூங்கிக் கொண்டு இருந்த பக்தர்கள் விபத்து காரணமாக வேனுக்குள் சிக்கி சத்தமிட்டனர்.
அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கொடுமுடி போலீசாருக்கும் இதுபற்றிய தகவல் தெரியவந்தது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
வேனின் இடிபாடுகளுக் குள் சிக்கிய பக்தர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர், பக்தர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
1. சத்யராஜ் (26),
2. குமராயாள் (48),
3. ஜெயந்தி (28),
4. கண்ணம்மாள் (20),
5. அருக்காயி (60),
6. லட்சுமணன் (23),
7. சண்முகம் (50),
8. சாந்தி (40),
9. மீனா (23).
இன்னொருவர் பெயர் விவரம் தெரியவில்லை.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள பிகினாரை என்ற ஊரை சேர்ந்தவர்கள் மாதேவப்பா (வயது 50), பசுவண்ணப்பா (52). கூலி தொழிலாளர்கள்.
அவர்கள் 2 பேரும் இன்று காலை கோடிபுரத்தில் உள்ள கோவிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
தர்மபுரம் அருகே சென்ற போது தாளவாடியில் இருந்து பிகினாரை நோக்கி வந்த வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மொபட்டில் வந்த மாதேவப்பா, பசுவண்ணப்பா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாதேவப்பா பரிதாபமாக இறந்தார். பசுவண்ணப்பாவின் கால் முறிந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-
சினிமாவில் பேசுகின்ற வசனங்களை பார்த்து ஒரு பெரிய கட்சி பயப்படுவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் இப்படி பேசி பேசியே அந்த படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னரும் விஜய் நடித்த மெர்சல் படம் பற்றி விமர்சனம் செய்து அந்த படம் பிரபலமானது.
தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஏனென்றால் பட்டாசு வெடித்தவர்கள் சாதாரண மக்கள்தான். நேர கட்டுப்பாட்டால் ஏற்கனவே பட்டாசு வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கோமாரி நோயால் ஆடு மாடுகள் தாக்கப்படுவது அதிகமாக உள்ளது. கோமாரி நோயால் தாக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படுவதில்லை.
உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில் நடைபெற முயற்சி நடந்து வருகிறது. அதேசமயம் தற்போது செயல்பட்டு வரும் பல தொழில்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு தனி குழு அமைக்க வேண்டும்.

ஆனால் இன்றுடன் 7ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? உடனடியாக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.
இவர் அவர் கூறினார். #Eswaran #Sarkar
கோபி அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மனைவி நதியா (வயது 28).
தனியார் மில் ஒன்றில் கணேசமூர்த்தி ஊழியராக பணிபுரிகிறார். அதே மில்லில் அவரது மனைவி நதியா கேஷியராக உள்ளார்.
தீபாவளியையொட்டி அதே பகுதியில் உள்ள தனது தந்தை சின்னசாமி வீட்டுக்கு நதியா சென்றார். இவருக்கும் இவரது அண்ணன் பங்காரு சாமிக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பங்காரு சாமிதான் வைத்திருந்த பலூன் சுடும் துப்பாக்கியால் நதியாவை சுட்டார். இதில் அவரது இடது தோள் பட்டையை குண்டு துளைத்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை கண்ட பங்காரு சாமி அங்கிருந்து ஓடிவிட்டார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த நதியாவை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நதியா வீடு திரும்பினார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தங்கையை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய அண்ணன் பங்காருசாமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் பங்காரு சாமியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
1950ம் ஆண்டில் இருந்தே பராசக்தி, ஓர் இரவு ஆகிய படங்களில் சீர்த்திருத்த கருத்துக்கள் சொல்லப்பட்டு தான் வருகிறது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. தனிப்பட்ட ஒருவரைதான் விமர்சிக்க கூடாது.
விஜய் நடித்த சர்க்கார் படத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதற்காக அந்த படத்துக்கு ஆளுங்கட்சி தரப்பில் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.வுடன் எங்களுக்கு கொள்கை ரீதியில் எப்போதும் கூட்டணி உண்டு. இதை ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அறிவித்துள்ளோம். தி.மு.க.வுடன் வரும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம்.
தீபாவளி பட்டாசு வெடித்தவர்களை மிரட்டும் வகையில் வழக்கு போடப்பட்டுள்ளது கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தவர்களை எச்சரித்து விட்டு இருக்கலாம் அதற்காக வழக்கு போடுவது நல்லதல்ல.
இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko #Sarkar #Vijay
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்(வயது18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் சித்திக்(18). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் தீபாவளியையொட்டி நேற்று வெளியான சர்கார் படத்தை பார்ப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டி சென்றனர்.
பின்னர் அங்குள்ள தியேட்டரில் சர்கார் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினர். நல்லூர் மாதேஸ்வரன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ஈரோட்டுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பட்டாசு வெடிக்க இரண்டு மணிநேரம் மட்டும் என்று நேரம் கொடுத்துள்ளனர். அதாவது நாம் காலம் காலமாக வந்து நாள் முழுக்க காலை முதல் மாலை வரை பட்டாசு வெடித்து வருகிறோம். சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் சில இடங்களில் பட்டாசு போட்டிருக்கலாம். அவர்களை எச்சரித்து இதுபோன்று செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு விட்டு இருக்கலாம்.
அதை விட்டுவிட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வது தவறானது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விருப்பமில்லாமலேயே இருக்கிறார். ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டது.
அதுபோன்ற தமிழ்நாடு அமைச்சர் அவையும் தீர்மானம் போட்டு அனுப்பி விட்டது. அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஆளுநரின் மனிதாபிமான கடமையாகும். அவர்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டனர்.

ஆயிரம் ஆண்டுகளானாலும் பாதிப்பு இல்லை என்றும் கூறி விட்டது. உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டி குழுவில் கேரளா சார்பில் நீதிபதி தாமஸ் தமிழ்நாடு சார்பில் நீதிபதி லட்சுமணன் அடங்கிய கமிட்டி மிகத் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளது. இன்னொரு அணை கட்டுவதற்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறிவிட்டது. ஆனாலும் கேரள அரசு வழக்கு போட்டுள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து தமிழக பிரச்சனையில் தலையிட்டு வருகிறது. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா பிரச்சனைகளும் அனைத்தும் அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு இப்போது உள்ள சட்டங்களை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நீதிமன்றம், மற்றும் அரசு சார்பில் பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்திருந்தது.
தொடர்ச்சியாக வெடிக்க கூடிய வெடிகள், அதிக புகை வரும் வெடிகளை வெடிக்க கூடாது என்று அரசு அறிவித்தது. அதே போன்று நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைந்தது.
இதையடுத்து தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை என்றும் அறிவித்தது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி அளித்த நேரத்தை தாண்டி நீதிமன்ற தடையை மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று தீபாவளி அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்த கோபியை சேர்ந்த தேவராஜ்(வயது25), குமரேசன்(19), நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த தீரன்(21), சிவகுமார்(22), முருகேசன்(24), மொடச்சூரை சேர்ந்த (பாலு22) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதே போன்று கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், பங்களாபுதூர், புளியம்பட்டி, பெருந்துறை, சித்தோடு, பவானி, கருங்கல்பாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக ஒரு வரும், வீரப்பன்சத்திரத்தில் 3 பேரும் என மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாமணி இவரது மகன் வினோத் குமார்(வயது 28).
கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வினோத்குமார் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு வினோத் குமார் தனது மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து அந்தியூருக்கு புறப்பட்டார்.
விஜயமங்கலத்தில் இருந்து திங்களூர் செல்லும் வழியில் புதூர்மேட்டு என்ற இடத்தில் வந்த போது, ரோட்டோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலை மற்றும் உடம்பில் பலத்த அடிபட்டு மயங்கி உயிருக்கு போராடினார்.
உடனடியாக அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் மாற்றுக்கட்சியிலிருந்து வெளிவந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தியும் டி-சட்டைகள் வழங்கியும் கவுரவித்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நல்லமழை பெய்து ஏரி குளங்கள் அணை நிரம்பியுள்ளதே தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. மாணவர்களுக்கு மடிக்கணினி மிதிவண்டி வழங்கும் சிறப்பான பல அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகிறது.
தமிழகத்தில் தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் ஐசிடி நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் கணினிகள் அமைக்கவும் நேற்றைய முன்தினம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெண்டர்கள் முடிவடைந்து பணிகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடையும் போது இந்தியாவே திரும்பிப் பார்கின்ற ஒரு மாற்றத்தை தமிழகம் உருவாக்கும்.

வருகிற இடைத்தேர்தலுக்காக கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டியில் ஏராளமான இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் பூத் கமிட்டிபோல் மத்தியில் உள்ள தேசிய கட்சிகளில் கூட இல்லாத அளவிற்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிக்கு மெட்டல்வாடி ரோட்டோரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த குடிநீர் தொட்டியின் கீழ் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தொட்டகாஜனூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு அடைவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதேபோல் தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவுகிறது. இதேபோல் அந்த குடிநீர் தொட்டியின் அருகில்தான் அங்கன்வாடி மையம், மக்கள் நலவாழ்வு மையமும் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையம் செல்லும் குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.
அதனால் மெட்டல்வாடி ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைக்க வேண்டும். மேலும் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






