search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமா வசனங்களை பார்த்து பயப்படுவது வேடிக்கையாக உள்ளது-  ஈஸ்வரன்
    X

    சினிமா வசனங்களை பார்த்து பயப்படுவது வேடிக்கையாக உள்ளது- ஈஸ்வரன்

    சினிமாவில் பேசுகின்ற வசனங்களை பார்த்து ஒரு பெரிய கட்சி பயப்படுவது வேடிக்கையாக உள்ளது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Eswaran #Sarkar
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    சினிமாவில் பேசுகின்ற வசனங்களை பார்த்து ஒரு பெரிய கட்சி பயப்படுவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் இப்படி பேசி பேசியே அந்த படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.

    இதற்கு முன்னரும் விஜய் நடித்த மெர்சல் படம் பற்றி விமர்சனம் செய்து அந்த படம் பிரபலமானது.

    தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    ஏனென்றால் பட்டாசு வெடித்தவர்கள் சாதாரண மக்கள்தான். நேர கட்டுப்பாட்டால் ஏற்கனவே பட்டாசு வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    கோமாரி நோயால் ஆடு மாடுகள் தாக்கப்படுவது அதிகமாக உள்ளது. கோமாரி நோயால் தாக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு முறையாக இழப்பீடு தொகை வழங்கப்படுவதில்லை.

    உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரியில் நடைபெற முயற்சி நடந்து வருகிறது. அதேசமயம் தற்போது செயல்பட்டு வரும் பல தொழில்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு தனி குழு அமைக்க வேண்டும்.

    மாசு ஏற்படுகிறது என்று சொல்லிதான் தீபாவளிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனால் வாகன மாசு, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் மாசு ஆகியவற்றை பற்றி கண்டு கொள்வதில்லை.


    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு கொங்கு மண்டல சாயக் கழிவுகளை அகற்றும் வகையில் ரூ. 700 கோடி மதிப்பில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் குழாய் அமைத்து நடுக்கடலில் விடப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

    ஆனால் இன்றுடன் 7ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? உடனடியாக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.

    இவர் அவர் கூறினார். #Eswaran #Sarkar
    Next Story
    ×