என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. மாவட்டத்தில் பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் நள்ளிரவில் கன மழை கொட்டியது.
இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கோபி, கவுந்தப்பாடி மற்றும் கொடிவேரி, பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.
இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
பவானி- 42.
சத்தியமங்கலம்- 26.
கோபி- 21.
கவுந்தப்பாடி- 19.2.
கொடிவேரி அணை-15.
அணை- 18.
அணை- 12.
அணை- 11.8.
எலந்தகுட்டை மேடு-11.
பவானிசாகர்- 7.
நம்பியூர்- 6.
பு.புளியம்பட்டி- 3.5.
சிவகிரி- 2.2. #heavyrain
சத்தியமங்கலம்:
கோவையை சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா புறப்பட்டனர்.
சத்தியமங்கலம் வந்த இவர்கள் மலைப்பகுதிக்கு செல்ல ஆசைப்பட்டனர். அதன்படி பண்ணாரியில் இருந்து திம்பம் மலைக்கு சென்றனர்.
பிறகு அங்கிருந்து தலமலை வழியாக அடர்ந்த காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். தலமலை அருகே ராமரணை என்ற இடத்தில் 4 யானைகள் கூட்டம் ரோட்டில் நின்று கொண்டிருந்தது. யானைகளை கண்ட அவர்கள் அதை விரட்ட ஹாரன் அடித்தனர். இந்த சத்தம் யானைகளுக்கு கோபத்தை மூட்டியது.
அடுத்த கனம் யானைகள் பிளிறியபடி அவர்களை விரட்டியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 இளைஞர்கள் திரும்பி தப்பி சென்று விட்டனர்.
இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நடு ரோட்டில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஊர் பகுதிக்குள் தப்பி ஓடினர்.
அவர்களை தொடும் தூரத்துக்கு ஒரு யானை மிக அருகே வந்து விட்டது. அப்போது ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க அகழி (குழி) தோண்டப்பட்டு இருந்தது. அந்த குழியில் அந்த இளைஞர்கள் 2 பேரும் தவறி விழுந்து விட்டனர்.
குழி அருகே வந்த யானை அப்படியே நின்று விட்டது. குழிக்குள் விழுந்து கிடந்த 2 பேரையும் பார்த்து பிளிறிய படி மிரட்டி கொண்டு அந்த யானை திரும்பி காட்டுக்குள் புகுந்தது. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அவர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர்.
பிறகு ஒரு வழியாக குழியில் இருந்து மேலே ஏறி வந்து மோட்டார் சைக்கிளில் ஏறி வந்த பாதை வழியாக திரும்பி சென்று விட்டனர்.
ஈரோடு:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
ரெயிலில் திருவனந்தபுரம், பாப்பனகோடு பகுதியை சேர்ந்த ராமசாமி(வயது36) என்பவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
இந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகராக லார்டுவின் ஆனந்த் என்பவர் இருந்தார். ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது லார்டுவின் ஆனந்த் முன்பதிவு பெட்டியில் உள்ள ஒவ்வொருவரிடமும் பயண டிக்கெட்டை பரிசோதித்து வந்தார். ராமசாமி டிக்கெட்டையும் பரி சோதித்து கொண்டிருந்தார்.
அப்போது லார்டுவின் ஆனந்துக்கும், ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ராமசாமி டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்.
இதையடுத்து ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. டிக்கெட் பரிசோதகர் ஈரோடு ரெயில்வே போலீசில் இது குறித்து புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்குபதிவு செய்த ரெயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ராமசாமியை கைது செய்தனர்.
ஈரோடு:
செங்குந்தர் பள்ளி கழக பவள விழா கொண்டாட்டம் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. பவள விழாவின் நிறைவு நாளான இன்று செங்குந்தர் பள்ளி வளாகத்தில் பவள விழா நினைவு வளைவு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்குந்தர் கல்வி கழகத்தின் தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சிவானந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பவள விழா நினைவு வளைவை திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செங்குந்தர் பள்ளியில் ஒரு ஆங்கில வழி வகுப்பு உள்ளது. இப்போது கூடுதலாக மேலும் ஒரு ஆங்கில வழப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 5 வகுப்பு வரையும், 6 முதல் 8 வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 4 புதிய இலவச சீறுடைகள் வரும் கல்வி ஆண்டில் வழங்கப்பட உள்ளது.
6 முதல் 8 -ம் வகுப்பு வரை 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்டுகிளாஸ் தொடங்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு முதல் அணைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு அதில் இணையதள வசதி செய்து கொடுக்கப்படும்.
நீட் தேர்வுக்காக 26 ஆயிரம் மாணவர்களுக்கு 412 மையங்களில் ஆன் லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பட்டயகணக்காளர் உருவாக்கும் வகையில் பிளஸ் -2 முடித்த மாணவர்களுக்கு 500 பட்டய கணக்காளர் கொண்டு பயிற்சி அளிக்கபட உள்ளது. இதற்காக 405 பட்டய கணக்காளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.
மூச்சி நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே மாணவர்கள் முயற்சி செய்து நம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழகத்தை பொறுத்த வரை இந்தியாவுக்கே சிறந்த முன்னோடி மாநிலமாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் ஒன்றிணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது 3 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அப்படி ஒரு எண்ணமே இல்லை. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.
அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்காக அந்தந்த பள்ளி நிர்வாகிகள் அரசுடன் இணைந்து
செயல்பட வேண்டும்.
கஜா புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி பாட புத்தகம் சேதம் அடைந்துள்ளது. எவ்வளவு பாட புத்தகங்கள் சேதமடைந்துள்ளது என்பதை நான் அங்கு நேரடியாக சென்ற பின்பு தான் கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க் கள், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ராஜாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், ஜெயராஜ், முருகு சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர்கள் வழங்கினர். பவள விழா மலரையும் வெளியிட்டனர். #ministersengottaiyan #gajastorm
ஈரோடு:
புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி தாலுகா, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த 4 வருடமாக பணிபுரிந்து வந்தார்.
அதே தொழிற்சாலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தலயநல்லூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனிலும் காதலில் உறுதியாக இருந்த ஜோடிகள் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சிவகிரியில் உள்ள வேலாயுதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இன்று ஆனந்தவல்லி தனது காதல் கணவர் அஜித்குமாருடன் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென் னரசு, சிவசுப்பிரமணி, ராஜா கிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் மாநிலத்தில் பெரும்பாலான இடங் களில் சேதம் ஏற்படும் என்று விவரங்கள் கொடுத்தவுடனேயே முதலமைச்சர் அனைத்து ஆயத்த பணிகளையும் செய்தார். இதை இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டியுள் ளனர். காஜா புயல் வேகத்தைக் காட்டிலும் அரசின் பணிகள் வேகமாக நடந்து உள்ளது.
நேற்றைய தினம் எந் தெந்த மாவட்டங்களில் புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரியவந்ததோ அந்தந்த மாவட்ட பள்ளிகளில் அதா வது சுமார் 24 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புயலால் பள்ளியில் ஏற்பட்ட சேதம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நாகப்பட்டினத்தில் 136 நடுநிலைப்பள்ளிகள் சேதமாகியுள்ளன. இன்னும் முழுமையான விவரங்கள் வரவில்லை.
அந்த விவரங்கள் வந்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிறப்பாசிரியர் நியமனம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. வேண்டு மென்றே ஒரு சிலர் குற்றச்சாட்டுகள் சுமத்துகின்றனர். யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் நேரடியாக என்னிடம் வரட்டும். அவர்களுக்கு பதில் சொல்லப்படும்.
வருகிற ஜனவரி மாதத்தில் நடுநிலைபள்ளிகளில் 52 ஆயிரத்து 432 மாணவர்களுக்கு ஆங்கில கல்வி கற்றுத்தர, எல்கேஜி, யுகேஜி கற்றுத் தர ஜனவரியில் வகுப்புகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக லண்டன், ஜெர்மன் போன்றவற்றிலிருந்து 120 பேராசிரியர்கள் வருகிறார்கள்.
கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை துறை இயக்குனர் மாவட்டத்தில் 2 நாட்களாக முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
நாளையில் இருந்து 50 கூடுதல் மருத்துவர்களும் பணியில் ஈடுபட உள்ளனர். தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.
இவர் அவர் கூறினார்.
2013-ம் ஆண்டு சிறப்பு தகுதி தேர்வு பெற்றவர்கள் 35 ஆயிரம் பேர் பணி இன்றி உள்ளனரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார். #ministersengottaiyan #gajacyclone #school
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொ.ம.தே.க. ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது.
இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகுந்த நேரத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதுதான் பொது மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாகும். தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அது சுயநலத்தோடு தள்ளிப்போடப்படுகிறது என்ற ஐயம் இன்றைக்கு மக்களிடையே இருக்கிறது.
ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் மழையை காரணம் காட்டி ஒத்தி வைத்திருப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓராண்டு ஆகப்போகிறது ஆனால் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அந்த தொகுதி மக்கள் அரசால் ஏமாற்றப்படுகிறார்கள் .
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாத அளவுக்கு இன்றைக்கு நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த வகையிலே நாம் ஏமாற்றப்படுகிறோம்.
உள்ளாட்சி தேர்தலை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக தமிழக அரசு நடத்த வேண்டும், 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.
சிவகாசியில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நிரந்தரமான தீர்வு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. அடுத்த வருடம் என்ன நடக்கும், சிவகாசி தொழிற்சாலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்வதா? வேண்டாமா? என்று எந்தவிதமான தெளிவும் இல்லாமல் இன்றைக்கு தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.
தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழக்கு போடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பட்டாசு வெடித்ததற்காக 2,400 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது
பவானி ஆற்றில் கலக்கின்றன சாயக்கழிவு தொடர்ந்து கலந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #DengueFever
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னை, காஞ்சிபுரம் கோவை போன்ற இடங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #BiometricAttendance
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மொரட்டுப்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 58).
வீட்டில் கண் திருஷ்டிக்காக வைக்கப்படும் ஆகாச கிழங்குகளை இவர் சேகரித்து திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.
இவரும் மேலும் 2 பேரும் சேர்ந்து துலுக்கம்பாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் தேனீக்கள் தேன் கூடு கட்டி இருந்ததை கண்டனர்.
இந்த கூட்டை அழித்து தேன் எடுக்க சுப்பிரமணியத்திடம் அனுமதி கேட்டு தேன் கூட்டை அழித்து தேன் சேகரித்து கொண்டிருந்தனர்.
தேனீக்களை விரட்டியடிக்கும் ஒருவித பொடியை தூவி தேன் எடுத்த போது கருப்புசாமியை தேனீக்கள் சூழ்ந்து சரமாரியாக கொட்டியது.
இதில் மயங்கி விழுந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு குஞ்சாள் (55) என்ற மனைவியும், சுரேஷ் என்ற ஒரு மகனும், பூங்கொடி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
கருப்புசாமியின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில் பாளையம் சோழ நகரை சேர்ந்தவர் குமார்ராஜா (வயது 33).
இவர் பெருந்துறை சிப் காட்டில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணி புரிந்த ஷோபனா (21). இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 மாதத்துக்கு முன் இவர்களின் திருமணம் நடந்தது.
குமார்ராஜாவுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை காதல் மனைவி ஷோபனா கண்டித்தார். இது தொடர்பாக இரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் ஷோபனா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டார். இதனால் குமார் ராஜா மிக வேதனையில் இருந்தார் இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அவரது அம்மா வெளியே போய் விட்டார். இதனால் அவர் காதல் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வீட்டில் உள்ள மின் விசிறி கம்பியில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த அவரது தாயார் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு இதில் சிலர் பலியாகி உள்ளனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் இல்லாவிட்டாலும் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி உள்பட பல பகுதிகளில் பலர் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுகாதாரதுறை சார்பிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 9 மாத பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு பலியாகி விட்டது.
இந்த குழந்தையின் பெயர் நைனிகா. அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மாரிமுத்து - தமிழரசி ஆகிய தம்பதியினரின் மகள் ஆவாள்.
கடந்த 4 நாட்களுக்கு முன் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தை நைனிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்படவே மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுதனர்.
இந்த நிலையில் அந்த தம்பதியினருக்கு மீண்டும் ஒரு பேரிடியாக பலியான குழந்தை நைனிகாவின் அக்கா இந்துமதி (வயது 3)க்கும் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி இந்துமதியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்தியூர் ஒலகடம் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஈரோடு அடுத்த நொச்சிக்காட்டு வலசு, பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது48). இவர் சங்ககிரி பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பெயர் ஜெசிமாபேகம்(45). ஈரோட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் ஜாபர்பாபு தொழிற்சாலைக்கு சென்று விட்டார். ஜெசிமாபேகம் அழகு நிலையம் சென்று விட்டார்.
இரவு 8.30 மணியளவில் அழகு நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய ஜெசிமாபேகம் பின்னால் அவருக்கு தெரியாமல் 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
ஜெசிமாபேகம் கதவை திறந்து உள்ளே சென்ற போது அவரது பின்னாலேயே 8 பேர் கொண்ட கும்பலும் உள்ளே புகுந்தது. அந்த 8 ஆசாமிகளும் முகமூடி அணிந்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெசிமாபேகத்தை அந்த ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். பிறகு கை, கால்களையும் கட்டினர்.
பிறகு அவர் அணிந்திருந்த நகைகள் மேலும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 40 பவுன் நகைகளை அந்த ஆசாமிகள் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் மிரட்டி பறித்து கொண்டனர்.
தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்ட கொள்ளையர்கள் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கொள்ளையர்கள் சென்றதும் ஜெசிமாபேகத்தின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்து ஜெசிமாபேகத்தின் கை-கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். பிறகு அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
சினிமா பாணியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






