search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "40 pound jewelry robbery"

    • பூமியான்பேட்டையில் ஆசிரியர் தம்பதியர் வீட்டில் 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    • ஜெனிஷா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பூமியான்பேட்டை அன்னை அப்பார்ட்மெண்ட் எதிரே வாடகை வீட்டில் வசித்து வருபவர் மனோராஜ் (வயது40). இவரது மனைவி ஜெனிஷா(38). கணவன்-மனைவி இருவரும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஜெனிஷா தன்னுடைய நகைகளை பாதுகாப்பாக வீட்டின் படுக்கை அறையில் கட்டிலுக்கு கீழே ஒரு பாலித்தீன் பையில் வைத்து செல்வது வழக்கம். விசேஷத்துக்கு மட்டும் அந்த நகைகளை அணிந்து செல்வார்.

    இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் குளியல் அறை மற்றும் கழிவறையை பழுது பார்த்து பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அதற்கு ஜெனிஷா சம்மதம் தெரிவித்தார்.

    கடந்த 1½ மாதங்களாக வீட்டின் கட்டுமான வேலைகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெனிஷா கட்டிலின் கீழே வைத்திருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது 40 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரோ அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து ஜெனிஷா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அருகே அழகு நிலையம் நடத்தும் பெண்ணை கட்டி போட்டு 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நொச்சிக்காட்டு வலசு, பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது48). இவர் சங்ககிரி பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பெயர் ஜெசிமாபேகம்(45). ஈரோட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் ஜாபர்பாபு தொழிற்சாலைக்கு சென்று விட்டார். ஜெசிமாபேகம் அழகு நிலையம் சென்று விட்டார்.

    இரவு 8.30 மணியளவில் அழகு நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய ஜெசிமாபேகம் பின்னால் அவருக்கு தெரியாமல் 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

    ஜெசிமாபேகம் கதவை திறந்து உள்ளே சென்ற போது அவரது பின்னாலேயே 8 பேர் கொண்ட கும்பலும் உள்ளே புகுந்தது. அந்த 8 ஆசாமிகளும் முகமூடி அணிந்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெசிமாபேகத்தை அந்த ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். பிறகு கை, கால்களையும் கட்டினர்.

    பிறகு அவர் அணிந்திருந்த நகைகள் மேலும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 40 பவுன் நகைகளை அந்த ஆசாமிகள் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் மிரட்டி பறித்து கொண்டனர்.

    தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்ட கொள்ளையர்கள் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கொள்ளையர்கள் சென்றதும் ஜெசிமாபேகத்தின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்து ஜெசிமாபேகத்தின் கை-கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். பிறகு அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சினிமா பாணியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தென்றல் நகரை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 45). திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றார். இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    நேற்று மாலை வீடு திரும்பிய விசுவநாதன் வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    இதுபற்றி தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விடுமுறை நாட்களில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர் செல்லும் பொதுமக்கள் விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்க வேண்டாம் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
    ×