என் மலர்
செய்திகள்

ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்- பாதுகாப்பு கேட்டு மனு
ஈரோடு:
புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி தாலுகா, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த 4 வருடமாக பணிபுரிந்து வந்தார்.
அதே தொழிற்சாலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தலயநல்லூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனிலும் காதலில் உறுதியாக இருந்த ஜோடிகள் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சிவகிரியில் உள்ள வேலாயுதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இன்று ஆனந்தவல்லி தனது காதல் கணவர் அஜித்குமாருடன் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.